Posts

Showing posts from December, 2019

இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு அதிகரிப்பு.

(பேராசிரியர் டாக்டர் லேகா சக்கரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இந்தியாவின் அந்நியச் செலாவணிக் கையிருப்பு மாபெரும் வளர்ச்சி கண்டு, கடந்த டிசம்பர் மாதம் 20 ஆம் தேதியன்று, 45,500 கோடி டாலர் என்ற உச்சகட்ட அளவை எட்டியுள்ளது. கடந்த மார்ச் 2019 இல் இதுவே 41,200 கோடி டலர் என்ற அளவில் இருந்தது. இந்த இடைவெளியில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு, அந்நிய நாணய சொத்து என்ற பிரிவில், 10 சதவிகித வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ளது. அமெரிக்க டாலர், யூரோ, பவுண்டு, ஜப்பானிய யென் என, பலதரப்பட்ட அந்நியச் செலாவணியின் தொகுப்பாக, அந்நிய நாணய சொத்து விளங்குகிறது. இவை அனைத்தும் அமெரிக்க டாலரில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி, அன்னியச் செலாவணியை வாங்குவது விற்பது என்ற வகையிலும், அன்னியச் செலாவணிக் கையிருப்பைப் பயன்படுத்துவதால் கிடைத்த வருவாய் என்ற வகையிலும், வெளிநாட்டு உதவித் தொகை வாயிலாக மத்திய அரசு பெற்ற அந்நியச் செலாவணி என்ற வகையிலும், சொத்துக்களின் மறுமதிப்பீடு என்ற வகையிலும், அந்நிய நாணய சொத்து மதிப்பில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன என்று ரிசர்வ் வங்கி அறிக்கை தெரிவிக்...

ஆஃப்கானிஸ்தான் அதிபர் தேர்தல்.

(அரசியல் விமரிசகர் எம்.கே. டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) ஆஃப்கானிஸ்தான் அதிபருக்கான தேர்தலின் முதல்கட்ட முடிவுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, போரினால் சீர்குலைந்த அந்நாட்டின் ஜனநாயக அமைப்புக்கள் பலம் பெறுவதற்கான முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளது எனலாம். தற்போதைய அதிபர் அஷ்ராஃப் கனி அவர்கள், 50.46 சதவிகிதம் வாக்குகள் பெற்று, வென்றுள்ளதாக, அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அவருக்கு எதிராகப் போட்டியிட்ட முன்னாள் வெளியுறவு அமைச்சர் டாக்டர் அப்துல்லா அப்துல்லா, 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தாலிபான்களால் கட்டவிழ்க்கப்பட்ட கண்மூடித்தனமான வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள ஆஃப்கானிஸ்தான், மக்களாட்சியை நிறுவ பல இன்னல்களை சந்தித்துவரும் வேளையில், அந்நாட்டின் சுதந்திரமான தேர்தல் ஆணையம், தேர்தல் முறைகேடுகளைத் தவிர்ப்பதில் கவனத்துடன் செயல்பட்டுள்ளது. பயோமெட்ரிக் முறையில் தனிநபர் அடையாள சோதனையில் தேறாத ஆயிரக்கணக்கான வாக்காளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இருப்பினும் இதுகுறித்து வெளிவந்த பல புகார்களைப் பரிசீலிப்பதாக, ...

எவரெஸ்ட் மலை சிகர பயண விதிகளை கடுமையாக்கும் நேபாளம்

அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் 8848 மீட்டர் உயரமுள்ள, உலகிலேயே அதிக உயரமான மலை சிகரமான எவரெஸ்ட் மலையை தன்னகத்தே கொண்டுள்ள நேபாள நாடானது ஆண்டுதோறும் மலையேற்றத்தின் மூலமாக பெரும் வருவாயை ஈட்டுகிறது. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் எவரெஸ்ட் சிகரத்தை எட்டும் முயற்சியில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அன்னாட்டை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 2015ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி, இமயமலை பகுதி முழுமையையும் உலுக்கிய அதி தீவிர பூகம்பத்தினால் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் ஏராளமான மலையேற்ற வீரர்கள் சிக்கினர், அதில் 22 பேர் உயிரிழந்தனர். இரண்டாவதான அதிக உயிரிழப்பாகும் மே மாதம் 11 பேர் உயிரிழந்தது. 800க்கும் மேற்பட்ட மலையேற்ற வீரர்கள் இந்த ஆண்டு சிகரத்தை தொடும் முயற்சியை மேற்கொண்டதில், ஏராளமான வீரர்கள், மரண மண்டலம் என்றழைக்கப்படும் 8000 மீட்டர் உயரத்திற்கு அதிகமான உயரப் பகுதியில், நீண்ட வரிசையில் மணிக்கணக்காக காத்திருக்க நேர்ந்தது. கணிக்கப்பட்டிருந்த மிக குறைந்த கால அளவே கொண்ட பொருத்தமான வானிலை நேரத்திற்குள், ஒவ்வொருவரும் எவரெஸ்ட் சிகரத்தை எட்டி விட துடித்தனர். இந்...

எவரெஸ்ட் சிகரத்துக்குப் பயணம் - விதிகளைக் கடுமையாக்கும் நேபாளம்.

(அரசியல் விமர்சகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ராஜ்குமார் பாலா) 8848 மீட்டர் உயரத்துடன், உலகின் மிக உயர்ந்த சிகரமாக விளங்கும் எவரெஸ்ட் சிகரத்துக்கு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் மலையேற்ற சாகசப் பயணங்களின் மூலம், நேபாளத்துக்கு நல்ல வருவாய் கிடைத்துவருகிறது. எவரெஸ்ட் சிகரத்தை வெற்றி கொள்ளும் முயற்சியில், கடந்த மே மாதம், 11 பேர் உயிரிழந்தது, நடப்பாண்டின் இரண்டாவது அதிகமான உயிரழப்பாகும். அது குறித்து நேபாளம் வருத்தம் அடைந்துள்ளது. 2015 ஆம் ஆண்டு, இமயமலைப் பகுதி முழுவதையும் பெரும் நிலநடுக்கம் தாக்கியபோது, ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதி ஏற்பட்ட பனிச்சரிவில் மலையேற்ற வீரர்கள் பலர் சிக்கினார்கள்; அவர்களில் 22 பேர் உயிரிழந்தனர். இந்த ஆண்டு 800க்கும் அதிகமான மலையேற்ற வீரர்கள் எவரெஸ்ட் உச்சியை அடைய முயன்றனர்; அவர்களில், 8 ஆயிரம் மீட்டர் உயரத்தில், அதாவது மரண மண்டலம் என்றழைக்கப்படும் பகுதியில், பெரும் எண்ணிக்கையிலானோர் வரிசையில் காத்திருந்தனர். உகந்த குறுகிய நேரத்திற்கான சாத்தியமான பருவநிலையில் மலை உச்சியை அடைய ஒவ்வொருவரும் விரும்பினார்கள். இதனால் சோர்வு மற்றும் அதிக உயரமான பகுதிகள...

நீர்  மேலாண்மையில் இந்தியாவின் முழுமையான அணுகுமுறை

(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - லட்சுமண குமார்) முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்த தினத்தை ஒட்டி 'அடல் பூஜல் யோஜனா' திட்டத்தை அறிவித்து நாட்டுக்கு அர்பணித்திருப்பதன் மூலம் நீர் தொடர்பான சிக்கலிலிருந்து மக்களை மீட்க உறுதிபூண்டிருப்பதை இந்தியா உணர்த்தியுள்ளது. இதன் மூலம் குறுகிய அணுகுமுறையிலிருந்து விலகி விரிவான அணுகுமுறையில் நீர் தொடர்பான பிரச்சனையை அணுக வழி வகுக்கப்பட்டுள்ளது.மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க பிரச்சனைகளை தீர்க்காவிட்டால் புதிய இந்தியாவிற்கான கனவை நினைவாக்க முடியாது. குஜராத், ராஜஸ்தான், ஹரியானா, மத்திய பிரதேசம், உத்தர் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் கர்நாடக ஆகிய மாநிலங்களில் உள்ள 78 மாவட்டங்களில் குறைந்து வரும் நிலத்தடி நீர் பிரச்சனையை சமாளிக்க மட்டுமில்லாமல் விவசியர்களிடையே மாற்றுப் பயிர் செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் அடல் பூஜல் திட்டத்தின் இலக்காகும். நிலத்தடி நீரை நம்பியே இந்தியா விவசாயம் உள்ளது. மாறி வரும் பருவமழை காரணமாகவும், நீர்ப்பாசனத்திற்கென அதிக அளவில் நிலத்தடி நீரை உறுஞ்சுவதாலும் நிலத...

செயலுத்தி உறவுகளை பலப்படுத்தும் இந்தியா மற்றும் ஓமன்.

(மேற்கு ஆசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.) ஓமன் நாட்டுடன், அதன் பெரிய மற்றும் வசதியான அண்டை நாடுகளை ஒப்பிடும்போது, குறைந்த அளவே அந்நாடு சர்வதேச கவனத்தை ஈர்க்கிறது. ஆனால் ஓமன், பாரசீக வளைகுடாவின் முகப்பில் முக்கியமான இடத்தில் உள்ள இந்தியாவின் நட்பு நாடுகளில் ஒன்றாகும். நீண்ட காலமாக உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் பொருளாதார வளர்ச்சிப் பற்றாக்குறையில் சிக்கித் தவித்த ஓமன், 1970 முதல் சுல்தான் காபூஸின் தலைமையில் குறிப்பிடத்தக்க திருப்பங்களைக் கண்டுள்ளது. மக்கள் நலனுக்காக எண்ணெய் வளத்தை முறைப்படுத்தி பொருளாதார முன்னேற்றத்தையும், செழிப்பையும் சுல்தான் காபூஸ் ஏற்படுத்தினார். அவரது தலைமையில் ஓமன் அதன் அண்டை நாடுகளுடன் ஒரு சீரான உறவைப் பேணி வருவதால், பிளவுபட்டிருக்கும் வளைகுடா பிராந்தியத்தில் ஓமன் முக்கியப் பங்களிக்க முடிகிறது. பிராந்தியத்தில் பதட்டங்களைக் குறைப்பதிலும், சர்ச்சைக்குரிய சிக்கல்களைத் தீர்ப்பதிலும் ஓமனின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. ஓமனின் முக்கியத்துவத்தை அங்கீகரிக்கும் இந்த...

இந்தியா--ஈரான் 19-வது கூட்டுக் குழு கூட்டம்

(ஈரான் பற்றியும் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர்ஆஷிஃப் ஷஹுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்) இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் இந்திய-ஈரான் கூட்டுக் குழுவின் 19 ஆவது கூட்டத்தில் கலந்து கொள்ள ஈரான் சென்றார். கூட்டு குழு கூட்டத்திற்கு இரு நாட்டு வெளியுறவு அமைச்சர்கள் தலைமை தாங்கினார்கள். இரு நட்பு நாடுகளுக்கிடையே உள்ள ஆழமான உறவுகளை முன்னெடுத்துச் செல்ல இந்த கூட்டு குழு உருவாக்கப்பட்டது. தனது சுற்றுப்பயணத்தின் போது டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் ஈரானிய அதிபர் டாக்டர் ஹசன் ரௌஹானி அவர்களை சந்தித்து கூட்டு குழு கூட்டத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து எடுத்துரைத்தார். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஈரானிய சுப்ரீம் தேசிய பாதுகாப்பு சபையின் தலைவர் ரியர் அட்மிரல் அலி ஷம்காணி மற்றும் சாலை போக்குவரத்து மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் முஹம்மத் இஸ்லாமியையும் சந்தித்தார். ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பிரச்சனை காரணமாக ஈரானின் பொருளாதாரம் கடுமையாக பாதித்துள்ள நிலையில் இந்திய - ஈரான் உறவுகளை பலப்படுத்தும் வகையில் இந்த கூட்டம் அமைந்துள்ளது. குறி...

22 ஆவது இந்திய-சீன பிரதிநிதித்துவப் பேச்சு வார்த்தையில் முன்னேற்றம்.

(சீன விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் எம் எஸ் பிரதீபா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களுடன் எல்லை விவகாரகள் குறித்துப் பேச, இந்தியா வந்திருந்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் யீ அவர்கள், குடியரசுத் துணைத் தலைவர் எம் வெங்கையா நாயுடு அவர்களையும் சந்தித்தார். இந்த முறை நடந்த சிறப்புப் பிரதிநிதித்துவப் பேச்சு வார்த்தைகள் முக்கியத்துவம் பெற சில காரணங்கள் உள்ளன. பாரதப்பிரதமரும் சீன அதிபரும் தங்களது இரண்டாவது முறை சாரா உச்சி மாநாட்டை அக்டோபர் மாதம் சென்னைக்கு அருகே உள்ள மாமல்லபுரத்தில் நிகழ்த்தினர். மாநாட்டின் இறுதியில், எல்லைப் பகுதியில் அமைதி நிலவுவதை உறுதி செய்ய இரு நாடுகளும் பரஸ்பரம் நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட ஒப்புக்கொள்ளப்பட்டது. இதனைப் பிரதிபலிக்கும் விதமாக, எல்லைப் பிரச்சனைத் தீர்வு மற்றும் இரு தரப்பு உறவுகளில் மேம்பாடு ஆகியவற்றுக்கான புதிய கண்ணோட்டமும் வழிகாட்டலும் இரு நாடுகளாலும் வெளிப்படுத்தபட்டன என்று தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் தெரிவித்தார். இந்...

சவூதி அரேபியா—கதார் நாட்டின் இருதரப்பு உறவுகள்

டாக்டர் லட்சுமி பிரியா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி வளைகுடா நாடுகளின் ஒத்துழைப்பில் 40-வது மகாநாடு நடைபெறவுள்ள நிலையில், சவூதி அரேபியா, எகிப்து, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் அனைத்தும் கதார் நாட்டுடன் தூதரக உறவுகள் இல்லாத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது சவூதி அரேபிய அரசர் சல்மான் பின் அப்துல், கதார் நாட்டு அதிபர் ஷேக் தமீம் தானிக்கு ரியாத்தில் நடைபெறவுள்ள வளைகுடா நாடுகளின் மகாநாட்டில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்துள்ளார். கதார் நாட்டின் பிரதமர் ஷேக் அப்துல்லா தானியும் கலந்து கொண்டு மகாநாட்டை சிறப்பித்துள்ளார். ஆனால் 2017 ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கிடையேயான தூதரக உறவுகள் மிகவும் மோசமான நிலையில் இருந்து வந்தது. தற்போது சவூதி அரேபியாவின் எண்ணைய் கிணறுகள் தாக்கப்பட்ட போது கதார் நாட்டு பிரதமர் சவூதி அரேபியா விரைந்து சென்று தனது ஆதரவை தெரிவித்திருந்தார். தோகா நடரில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளில் அண்மையில் சவூதி அரேபியா, ஐக்கிய அரபு குடியரசு மற்றும் பஹ்ரெய்ன் நாடுகள் கலந்து கொண்டு சிறப்பித்தன. அமெரிக்காவின் சவூதி தாக்குதலை தொ...

பாகிஸ்தான் தேசியப் பேரவையின் தீர்மானத்தை  மறுக்கும் இந்தியா.

(ஆகாசவாணியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) தன் உள் நாட்டு அமைப்புகளே ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கும் விசித்திரமான ஒரு நாடு பாகிஸ்தான். இந்தியாவின் உள் நாட்டு விவகாரம் எதுவானாலும் அதில் தலையிட்டுக் கருத்துச் சொல்லும் கெட்ட பழக்கமும் அதனிடம் உண்டு. இந்தியாவின் நாடாளுமன்றத்தில் குடியுரிமைத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டு இப்போது குடியுரிமைத் திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. உடனே பாகிஸ்தான் தேசிய பேரவையில் இது விவாதிக்கப்பட்டது. பாகிஸ்தானோ அல்லது வேறு எந்த ஒரு நாடோ இது பற்றி விவாதிக்க எந்த முகாந்திரமும் இல்லை. இது முழுக்க முழுக்க இந்தியாவின் உள் நாட்டு விவகாரம். பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆஃப்கானிஸ்தானிலிருந்து மத ரீதியாகத் துன்புறுத்தப்பட்டு இந்தியா வந்த சிறுபான்மையினருக்குக் குடியுரிமை வழங்க இச்சட்டம் வகை செய்கிறது. இச்சட்டத்தின் மூலம், சர்வதேச அரங்கில் அந்நாடு தன் சிறுபான்மையினரை நடத்தும் விதம் வெளிச்சத்துக்கு வந்துள்ளதே பாகிஸ்தான் இப்படிப் பொங்கியெழ க் காரணமாகும். தன் நாட்டுக் குடிமக்களைக் காக்கும் ...

இந்தோ-பசிபிக் 1.5 வழிப் பேச்சுவார்த்தைகள்.

(கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.) இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் புவிஅரசியல் சார்ந்த, திறந்த, தடையற்ற வர்த்தகத்திற்கு ஆதரவு பெருகிவரும் நிலையில், இந்தியா, இரண்டு இந்தோ-பசிபிக் 1.5 வழிப் பேச்சுவார்த்தைகளுக்கு ஏற்பாடு செய்தது. அவை 6 ஆவது இந்தியப் பெருங்கடல் பேச்சுவார்த்தை மற்றும் பதினோராவது தில்லி பேச்சுவார்த்தை ஆகியனவாகும். 2019, ஜூன் மாதம், இந்தோ-பசிபிக் பிராந்தியத்துக்கான ஆசியான் கண்ணோட்டம் தெரிவித்தபடியும், முன்னதாக, 2018 ஜூன் மாதம் நடந்த ஷாங்ரிலா பேச்சுவார்த்தையின்போது, இந்தியா தெரிவித்த கருத்துக்களின்படியும், இப்பிராந்தியத்தில் திறந்த, தடையற்ற, சர்வதேச விதிகளுக்குட்பட்ட வர்த்தம் குறித்து விவாதிப்பதே இந்த இந்தோ-பசிபிக் 1.5 வழிப் பேச்சுவார்த்தைகளின் குறிக்கோளாக இருந்தது. அடுத்தடுத்து ஒரே நேரத்தில் இந்த இரண்டு பேச்சுக்களும் நடத்தப்படுவது இதுவே முதன்முறையாகும். கிழக்கு இந்தியப் பெருங்கடல், வளைகுடா மற்றும் ஆப்பரிக்க நாடுகள் உள்ளிட்ட மேற்கத்திய பெருங்கடல் பிரதேசமான இந்திய-பசி...

மத்ரித் மாநாட்டில் பருவ நிலை மாற்றத்துக்கு எதிரான இந்தியாவின் திட்டம்

  இந்தியன் அறிவியல் இதழின் ஆசிரியர் என் பத்ரன் நாயர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் பருவ நிலை மாற்றம் என்பது புறந்தள்ள முடியாத ஒரு நிதர்சனம். எந்த ஒரு நாடும் இதன் தாக்கங்களிலிருந்து தப்ப முடியாது. காரணம், எந்த ஒரு நாட்டின் செயல்பாட்டாலோ செயலற்ற தன்மையாலோ இது நிர்ணயிக்கப்படுவதில்லை. இதன் தாக்கத்தை இந்தியா ஏற்கெனவே உணரத் தொடங்கிவிட்டது. பருவம் தவறிய மழை, அதிக வெப்பம், அதற்கு நேர் எதிரான அதிக குளிர் இவையெல்லாவற்றிற்குமே பருவ நிலை மாற்றம் ஒரு காரணம். இதனால், உணவு உற்பத்தி, ஆரோக்கியம் என அனைத்தும் பாதிக்கப்படுகின்றன. 2015 பாரிஸ் ஒப்பந்தத்தை2020-ல் இருந்து நடைமுறைப்படுத்தும் செயல்முறைகளை இறுதிசெய்யும் காப்25 பருவ நிலை மாநாடு அண்மையில் மத்ரித்தில் நடந்தது. இரு வாரங்கள் நடைபெற்ற இந்த மாநாட்டில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம், அதன் விளைவுகள் குறித்த அறிவியல் பூர்வமான எச்சரிக்கைகளும்  இந்தப் பேரழிவிலிருந்து மனித இனத்தைக்  காக்கும் வழிமுறைகளும் ஆராயப்பட்டன. இயற்கையின் மீதான இந்தத் தாக்குதல் ஏற்கெனவே தொடங்கிவிட்ட நிலையில், அனைத்து நாடுகளும் இது குறித்த ...

இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான 6 ஆவது கூட்டு ஆணையக் கூட்டம்.

(இந்தியப் பெருங்கடல் பிராந்திய விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் எம் சமதா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.) இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான 6 ஆவது கூட்டு ஆணையக் கூட்டம் (ஜே.சி.எம்) புதுதில்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் அப்துல்லா ஷாஹித் மற்றும் இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்தியாவிற்கும் மாலத்தீவுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மறுஆய்வு செய்ய ஜே.சி.எம் ஒரு வாய்ப்பை வழங்கியது. அதிபர் சோலி அவர்களின் அரசாங்கம் அமைக்கப்பட்ட பின்னர், கடந்த ஒரு வருடத்தில் மாலத்தீவில் நிகழ்ந்துள்ள நேர்மறையான ஜனநாயக மாற்றம், இந்தியாவுக்கும் மாலத்தீவுகளுக்கும் இடையிலான பல துறைகளை உள்ளடக்கிய இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்த வழிவகுத்தது. அபிவிருத்தி உதவி மூலம் மாலத்தீவில் சமூகத் துறை வளர்ச்சியைத் தவிர, இரு நாடுகளும் கடல், பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்த முயற்சிக்கின்றன. மாலத்தீவில் அதிபர் தேர்தலுக்குப் பிறகு, அந்நாட்டுக்கு 140 கோடி டாலர் மதிப்பிலான...

ஹஃபீஸ் சயீத் மீதான குற்றச்சாட்டு – நிஜமானதா, கேலிகூத்தா?

(பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) பயங்கரவாதி என்று ஐ.நாவால் அறிவிக்கப்பட்டவரும், ஜமாத்-உத்-தாவா அமைப்பின் தலைவரும், மும்பைத் தாக்குதல்களின் சூத்திரதாரியுமான ஹபீஸ் சயீத் மீது, பயங்கரவாதத்திற்கு நிதி அளித்ததாக, லாகூர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் காவல்துறையின் பயங்கரவாத தடுப்புத் துறையானது, (சி.டி.டி) சயீத் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக, ஜூலை மாதம் 23 குற்றப் பத்திரிக்கைகளைப் பதிவு செய்து, நீதித்துறைக் காவலில் எடுத்து, லாகூரின் கோட் லக்பத் சிறைக்கு அனுப்பியது. தண்டனை அறிவிக்கப்பட்டபோது சயீத் நீதிமன்றத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. பாகிஸ்தானின் பயங்கரவாத எதிர்ப்பு நீதிமன்றம், டிசம்பர் 11 ஐ சயீதுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நிர்ணயிக்கும் தேதியாகக் குறித்தது. இப்போது ஏன்? இப்போது அவர் மீதான வழக்கை நீதிமன்றம் தீவிரமாகத் தொடருமா? என்பது போன்ற கேள்விகள் பாகிஸ்தான் அமைப்புகள் செயல்படும் முறையை அறிந்த அனைவராலும் எழுப்பப்படுகின்றன. உலக அளவில் பயங்கரவாதத்திற்கு நிதியளிப்...

தாலிபான் – அமெரிக்கா மீண்டும் பேச்சு - காத்திருக்கும் கடும் சவால்கள்.

(ஹிந்து பத்திரிக்கையின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டசார்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், நன்றி தெரிவிக்கும் நிகழ்வு விழா ஒன்றில் கலந்துகொள்ள, பக்ராம் விமான தளத்திற்கு சென்றிருந்தார். அப்போது அவர் தாலிபானுடனான அமைதி பேச்சுவார்த்தைகள் தொடரும் என்று அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்து சில நாட்களுக்குள்ளேயே, புதன்கிழமையன்று, அதே விமான தளத்திற்கு வெளியே இருந்த ஒரு மருத்துவ வசதி மையம், சக்திவாய்ந்த தாலிபான் தற்கொலை குண்டு வெடிப்புத் தாக்குதலுக்கு ஆளானது. அமைதிப் பேச்சுவார்த்தை மேற்கொள்வதில் உள்ள சிரமங்கள் இந்த்த் தாக்குதல் மூலம் வெளிப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்னர், தாலிபான் அரசியல் குழு ஒன்று, அமெரிக்கா சென்று அமெரிக்க அதிபரைத் தனிப்பட்ட முறையில் சந்திப்பதற்கான ஆயத்தங்களை செய்து கொண்டிருந்த போது, இந்த இயக்கம், காபூலில் இருந்த ஒரு நேடோ ராணுவ முகாமை தாக்கியது. இதைத் தொடர்ந்து அமெரிக்க அதிபர், பேச்சு வார்த்தைகளை நிறுத்தி வைத்தார் என்பது நினைவிருக்கலாம். செப்டம்பர் மாதம் நடந்த அந்தத் தாக்குதலுக்குப் பிறகு, தாங்கள் ...

அண்டை நாடுகளிலிருந்து வந்த சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா.

(தெற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) அண்டை நாடுகளிலிருந்து, துன்புறுத்தல்களால் அவதிப்பட்டு வெளியேறி, இந்தியா வந்த சிறுபான்மை அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா, இந்திய நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதனை எதிர்த்து பாகிஸ்தான் குரல் கொடுத்துள்ளது. பிரிவினையின்போது, 23.5 சதமாக இருந்த சிறுபான்மையினத்தவரைத் திட்டமிட்டு அழித்து, தற்போது 3.5 சதமாகக் குறைப்பதற்குக் காரணமாக விளங்கிய பாகிஸ்தான், இவ்விஷயம் குறித்துப் பேச அருகதையற்றது. நேருவுக்கும், லியாகத் அலிக்கும் இடையிலான ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிலும், பாகிஸ்தானிலும் வசிக்கும் சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்ட பாகிஸ்தானில், சிறுபான்மையினத்தவரின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்ததோடு, அங்கிருந்து சிறுபான்மை மதத்தினைச் சேர்ந்தவர்கள் வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தனர். பங்களாதேஷில், 1971 ஆம் ஆண்டில், 21.3 சதமாக இருந்த சிறுபான்மையினத்தவரின் எண்ணிக்கை, 8.5 சதமாக...

இந்திய – மொரீஷியஸ் உறவுகளை வலுவாக்கும் ஜக்னாத் அவர்களின் இந்தியப் பயணம்.

(மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) மொரிஷியஸ் பிரதமராக மீன்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ப்ரவிந்த் ஜக்நாத் அவர்கள், சென்ற வாரம் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு மற்றும் கலாச்சார உறவுகளின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் விதமாக அவரது பயணம் அமைந்துள்ளது. 13 லட்சம் மக்கள் தொகை கொண்ட, இந்தியப் பெருங்கடலின் வெனிலா தீவு என்றழைக்கப்படும் மொரிஷியஸில், மூன்றில் இரண்டு பங்குக்கும் மேலாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இதுவே, இரு நாடுகளும் தத்தமது பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி ஆகிய அம்சங்களில் இயல்பாகவே ஒன்றை ஒன்று சார்ந்திருக்கக் காரணமாக உள்ளது.. பிரதமர் ஜக்நாத் அவர்களின் வருகை தனிப்பட்ட ஒன்று என்று புதுதில்லியின் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ சந்திப்புகளுக்கான இடமான ஹைதராபாத் ஹவுஸில் பிரதமர் மோதி அவர்கள் மொரீஇஷியஸ் பிரதமரை சந்தித்துப் பேசினார். இரு நாட்டுப் பிரதமர்களும் உறவுகளை வலுப்படுத்த தமக்கு உள்ள ஆர்வத்தை உறுதிப்படுத்...

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்.

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூட் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) நடந்து வரும் நாடாளுமன்றக் குளிர் காலக் கூட்டத்தொடரின் போது, மேலவையான மாநிலங்களவையில் மின் சிகரெட்டுகள் தடைச் சட்டம், 2019 நிறைவேற்றப்பட்டது. சிறப்புப் பாதுகாப்புக் குழு (திருத்தம்) சட்டம், 2019, தாத்ரா நகர் ஹவேலி, தமன் தியு (யூனியன் பிரதேச இணைப்பு) சட்டம், 2019 ஆகியவையும் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. கீழ் சபையான மக்களவையில், வரி விதிப்பு சட்டங்கள் (திருத்தம்) மசோதா, 2019 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டம் நிறுவன வரிகளை வெகுவாகக் குறைத்துள்ளது. அனல் பறக்கும் விவாதங்களுக்குப் பின்னர் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. விவாதங்களுக்குப் பதிலளித்துப் பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், வேலை வாய்ப்புகளைப் பெருக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவுமே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். அமெரிக்கா – சீனா இடையே நிலவி வரும் வர்த்தகப்போரின் பின்னணியில், சீனாவுக்கு மாற்றை விரும்பும் பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடுகளுக்கு, ஒரு பாதுகாப்பான நாடாக இந்தியாவை முன்னிறுத்தும் நோக்கமும் இந்த முடிவு...

ஸ்வீடன் அரச தம்பதியரின் இந்தியப் பயணம்.

(ஐரோப்பிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – கே.லக்ஷ்மண குமார்.) ஸ்வீடன் அரச தம்பதியினர், அரசர் கார்ல் 16 ஆம் குஸ்தாப் மற்றும் அரசி சிலிவியா ஐந்து நாள் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்தனர். ஸ்வீடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஆன் லின்டாய் மற்றும் வியாபாரத் துறை அமைச்சர் இப்ராஹிம் பாய்லன் ஆகியோர் உடன் வந்தனர். 50 ஸ்வீடன் கம்பெனிகள் மற்றும் ஸ்டார்ட் அப் கம்பெனிகளின் பிரதிநிதிகளும் உயர்நிலைக் குழுவுடன் வந்தனர். 1993 மற்றும் 2005 ஆம் ஆண்டுக்கு பிறகு, ஸ்வீடன் அரசர் இந்தியாவுக்கு வருவது இது மூன்றாவது முறையாகும். 2015 ஆம் ஆண்டு முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அவர்கள் ஸ்வீடன் சென்று வந்த பிறகு, இரு நாடுகளுக்கிடையே உயர் நிலை அளவில் அரசியல் தலைவர்கள் பயணம் மேற்கொள்வது இது நான்காவது முறையாகும். பல வருடங்களாக உயர் நிலை அளவில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளால், இந்திய, ஸ்வீடன் உறவுகள் பலப்பட்டு உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அரசர் குஸ்தாப், பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தார். புத்தாக்கக் கொள்கைக்கான இந்திய...

“ ஈரான் நாட்டின் ஆர்ப்பாட்டங்கள் வளைகுடா முழுவதும் எதிரொலிக்கிறது”

ஈரான் நாட்டிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஆசிப் சுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். ஈரான் அரசாங்கம், தனது நாட்டு ஏழை மக்களுக்கு உதவுவதற்காக, மேலும் அதிக நிதியை ஒதுக்குவதற்கு, பெட்ரோல் ஏற்றுமதியை பங்கீடு முறையில் வினியோகிக்கப் போவதாக போன மாதம் அறிவித்திருந்தது. எண்ணெய் வளம் மிக்க ஈரான் நாட்டின் அரசாங்கம் இவ்வாறு அதிரடியான அறிவிப்பை வெளியிட்டதன் மூலம் அங்கே அரசியல் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு , எதிர்க்கட்சி குழுக்கள் மீதும் வெளிநாட்டு எதிரிகள் மீதும் ஈரானிய அதிகாரிகள் குற்றம்சாட்டி தீர்க்கமான பதிலளிக்கின்றனர். அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மேலும் பரவாமல் தடுக்க இணையதள சேவையை முற்றிலுமாக அவர்கள் நிறுத்தி வைத்துள்ளனர். ஈரானிய புரட்சி காவல்படை IRGC யின் தலைமை தளபதியின் கூற்றுப்படி, இந்த அமைதியின்மை மூலம், ஈரானின் எதிரிகளின் நோக்கம், இஸ்லாமிய குடியரசுக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த அமைதி இன்மையால் ஏற்பட்ட உயிர் இறப்பின் எண்ணிக்கையை ஈரான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றாலும், இந்த ஆர்ப்பாட்டங்கள் மூலம் 208 க்கும் மேற்பட்ட மக்கள் உயிர் இழந்துள்ளன...