தெற்கு சீனக் கடல் - புதிய சர்ச்சை.
(கிழக்காசிய மற்றும் இந்தியப் பெருங்கடல் விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் பேராசிரியர் பாலாதாஸ் கோஷல் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) சர்வதேச சட்டவிதிகளை மீறி, வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தை சீனா ஊடுருவியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியட்நாம் கடற்கரையிலிருந்து வெறும் 60 நாட்டிகல் மைல் என்ற மிக அருகிய தூரத்தில் சீன ரோந்துக் கப்பல் நுழைந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சீனாவுடன் சுமுக உறவு இல்லாத வியட்நாமின் பொருளாதாரத்தை அச்சுறுத்தும் வகையில் ஏற்பட்ட இந்நிகழ்வால், அந்நாட்டிற்கு சீனாவுடன் மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், வியட்நாமின் சிறப்புப் பொருளாதார மண்டலத்தைக் கண்காணிக்க ஏதுவாக, இந்த ரோந்துக் கப்பல், குறைந்தபட்சம் நான்கு பாதுகாப்புக் கப்பல்களுடன் நிலை கொண்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. இக்கப்பல், வியட்நாமின் ஃபூ கை தீவின் தென்கிழக்கே சுமார் 120 கி.மீ. தொலைவிலும், தெற்கு வியட்நாமின் நகரமான ஃபன் தியட்டின் கடற்கரையிலிருந்து 185 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது என்று ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது. ஒரு நாட்டின் சிறப...