Posts

Showing posts from March, 2020

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

வி. மோஹன் ராவ், பத்திரிக்கையாளர் தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார் இந்த வாரம், கொரோனா தொற்றின் அச்சம் உட்பட பல விவகாரங்கள், இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் பரபரப்பில் வைத்திருந்தது. வெளியுறவுத் துறை இணை அமைச்சர் வி.முரளீதரன், ஐக்கிய அரப் அமீரகத்தில் உள்ள எட்டு இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் தெரிவித்தார். குவைத்தில் அவ்வாறு யாரும் இல்லை. ஈரானில், சுமார் 6000 இந்திய குடிமக்கள் உள்ளனர். இதில், லடாக் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்கள் மற்றும் மகாராஷ்டிராவைச் சார்ந்த சுமார் 1100 யாத்ரிகர்கள், சுமார் 300 மாணவர்கள், குறிப்பாக ஜம்மு காஷ்மீரை சேர்ந்த மாணவர்கள், கேரளா, தமிழ்நாடு மற்றும் குஜராத்தைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் மற்றும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் ஆன்மீக படிப்புகளுக்காக ஈரானில் தங்கியுள்ளவர்கள் ஆகியோர் அடங்குவர். ஈரானில் சிக்கியிருக்கும் இந்தியர்களை இந்தியாவிற்கு மீட்டு வர, புது தில்லி பல உறுதியான நடவடிக்கைகளை எடுத்துள்ளது என அவர் கூறினார். பரிசோதனை மற்றும் மாதிரி ஆய்வு வசதிகளைச் செய்ய, 6 இந்திய சுகாதார அதிகாரிகளின் குழு ஈரானு...

கொரோனா வைரஸ் நோயை எதிர்கொள்ள சார்க் நாடுகள் கையாளும் கூட்டு முயற்சி.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கடந்த மார்ச் 2020, 15 ஆம் தேதியன்று, பிரதமர் திரு நரேந்திர மோதி, காணொளிக்காட்சி மூலம், தெற்காசிய, பிராந்தியக் கூட்டுறவு அமைப்பான சார்க்கின் உறுப்பு நாடுகளுடன் கலந்துரையாடினார். அவரது இந்த முன்னெடுப்பின் நோக்கம், சார்க் நாடுகளுடன் இணைந்து, அபாயகரமான கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்கொள்ள, வலுவான கூட்டுமுயற்சியை உருவாக்குவதேயாகும். இதுவரை இந்தக் கொள்ளை நோய், உலகம் முழுவதிலும் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்களைத் தாக்கியுள்ளது. அதில் சுமார் 10,000 பேர் மடிந்துள்ளனர். பிரதமரின் இந்த முன்னெடுப்பை அனைத்து உறுப்புநாடுகளும் வரவேற்றுள்ளன. இலங்கை, மாலத் தீவுகள் மற்றும் ஆஃப்கானிஸ்தான் அதிபர்களும், இந்தியா, பங்களாதேஷ், நேபாளம் மற்றும் பூட்டான் நாட்டுப் பிரதமர்களும் இந்த காணொளிக்காட்சியில் ஆர்வத்துடன் பங்கேற்றனர். பாகிஸ்தான் தரப்பில், பிரதமரின் சுகாதாரத் துறை சிறப்பு உதவியாளர் ஸஃபர் மிர்ஸா அவர்கள் கலந்து கொண்டார். இந்தத் தொற்றுநோயை வலுவுடன் எதிர்கொள்ள, தங்கள் முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்க ...

கொரொனாவுக்கு எதிரான போரில் முன்னணியில் இந்தியா.

(தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சிறப்பு மூத்த நிருபர் மனிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) கொரொனா தொற்றுப் பரவலை ஒரு சர்வதேசக் கொள்ளை நோய் என்று உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. உலகம் முழுவதிலும் 7500-க்கும் அதிகமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அனேகமாக எல்லா நாடுகளும் ஸ்தம்பித்துள்ள நிலையில், நெருக்கடி நிர்வாகத்தில் இந்தியாவுக்குள்ள தலைமைப் பண்பு மீண்டும் ஒரு முறை நிரூபிக்கப்பட்டுள்ளது. சீனாவில் உருவான இந்த வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதில் வேகமும் விவேகமும் ஒருங்கிணைந்த இந்தியாவின் செயல்பாடு குறிப்பிடத்தக்கது. கொவிட்-19 நோயால் பீடிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இந்தியர்களை வெளியேற்றி மீட்டுக் கொண்டு வருவதிலும், அவர்களைத் தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதிலும் இந்தியா காட்டிய வேகம் மிகவும் முக்கிய காரணியாகும். மனித நேய அடிப்படையில் பிற நாடுகளைச் சேர்ந்தவர்களை மீட்கவும் இந்தியா உதவியுள்ளது குறிப்பிடத்தக்கது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், இந்த விஷயத்தில் இந்தியா அசுர வேகத்தில் செயல்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். சீனாவுக்கு மிக அண்டை நா...

கொரோனா வைரஸ் தொற்றுநோய் கோவிட்-19  விடுக்கும் சவாலை எதிர்கொள்ளும் சார்க் பிராந்தியம்.

(தெற்காசியா பற்றிய மூலோபாய ஆய்வாளர் முனைவர் ஸ்மிருதி எஸ் பட்டநாயக் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் : த.க.தமிழ்பாரதன்) உலக சுகாதார நிறுவனத்தால் உலகளாவிய தொற்றுநோயாக அறிவிக்கப்பட்ட கோவிட்-19 ஐ எதிர்த்துப் போராடுவதற்கான வழிமுறைகளைக் கூட்டாக உருவாக்க சார்க் தலைவர்களின் காணொளி மாநாட்டை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் நடத்தினார். இது ஒரு தனித்துவமான முன்னெடுப்பாகும். இது தெற்காசிய பிராந்தியத்தின் உடனடி கவனத்தை ஈர்த்துள்ளது. இப்பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் அதிக மக்கள் தொகை கொண்டவை என்பதால், வைரஸ் பரவுவதற்கான ஆபத்து உண்மையானது. அதற்கு இணையாக, பரவலை எதிர்த்துப் போராடுவதும் கடினமானது. சீனாவில் தோன்றிய இந்த வைரஸ், உலகளவில் 7000 க்கும் மேற்பட்ட இறப்புகளை ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த புதிய வகையான நோய்த் தொற்று வைரஸ் கொரோனா, பல நாடுகளிலும் ஏற்படுத்திய தாக்கங்களோ பலப்பல. விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பொது இடங்கள் மூடப்பட்டன. குடிமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு வலியுறுத்தப்பட்டனர். சீனா, இத்தாலி, ஈரான் போன்ற மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்...

கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க, சார்க் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு – பிரதமர் மோதி அவர்களின் முன்னெடுப்பு.

(ஆல் இண்டியா ரேடியோ இயக்குனர் அமலன்ஜோதி மஜும்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) கோவிட் 19 என்ற கொரோனா தொற்றுநோய்ப் பரவலைத் தடுக்க, சார்க் நாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டை வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் விடுத்த அழைப்பிற்கு, பாகிஸ்தான் உள்பட, அனைத்து சார்க் உறுப்பு நாடுகளின் தலைவர்களும் உடனடியாக ஒப்புக் கொண்டுள்ளனர். தங்களிடம் உள்ள அனைத்து வளங்களையும் பயன்படுத்தி, ஆபத்தான கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்கொள்ள ஒரு பொதுவான செயலுத்தியைக் கையாள முன்வருமாறு, சார்க் உறுப்புநாடுகளிடம் பிரதமர் மோதி அவர்கள் மேற்கொண்ட இந்த சிறப்புமிக்க ராஜீய முன்னெடுப்பை உலக நாடுகள் பாராட்டியுள்ளன. 2014 ஆம் ஆண்டு முதல் செயலற்ற நிலையில் இருந்த சார்க் அமைப்பிற்குப் புத்துயிர் ஊட்டும் நம்பிக்கையை இந்த முன்னெடுப்பு அளித்துள்ளது. இருப்பினும் தெற்காசிய விவகாரங்கள் குறித்த நிபுணர்கள், இதனை அங்கீகரிக்கத் தயங்குகின்றனர். சார்க் உறுப்புநாடுகளான இந்தியாவும், பாகிஸ்தானும், இத்தகைய அவசரகால நடவடிக்கையை முன்னிட்டாவது. தங்கள் இறுக்கமான உறவுகளைத் தளர்த்தி, பல்நிலை மேடையில் ஒருங்கிணைந்து ச...

கொரிய தீபகற்பத்தில் மீண்டும் தலைதூக்கும் இறுக்கம்.

(முன்னாள் இந்திய தூதரக அதிகாரி அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) கடந்த இருவாரங்களில் இரண்டாவது முறையாக, அடையாளம் தெரியாத, குறைந்தபட்சம் மூன்று ஏவுகணைகளை வடகொரியா ஏவியுள்ளது. முன்னதாக, தாம் மேற்கொண்ட நேரடிப் பயிற்சி கண்டனத்துக்கு உள்ளானதை எதிர்த்து, வடகொரியா, அதிரடி நடவடிக்கைகளை எடுக்கப் போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வடகொரியாவின் கிழக்குக் கடற்கரையிலிருந்து, கொரிய தீபகற்பத்திற்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடலில் விழும் வண்ணம், பலவகையான குறைதூர ஏவுகணைகள் ஏவப்பட்டதைத் தாம் கண்டறிந்ததாக, தென்கொரிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக, 50 கி.மீ.உயரத்திற்கும், 200 கி.மீ. தூரத்திற்கும் இந்த ஏவுகணைகள் ஏவப்பட்டுள்ளன. கொரிய தீபகற்பத்தில் இறுக்கங்களைக் குறைக்கும் நோக்கத்தில், 2018 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இது மீறியுள்ளதாக தென்கொரியா கூறியுள்ளது. ஹனோயில் அதிபர் கிம் அவர்களுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களுக்கும் இடையே, தோல்வியில் முடிந்த உச்சி மாநாட்டின் ...

வெட்டவெளிச்சமாகும் பாகிஸ்தானின் பயங்கரவாதம் குறித்த இரட்டை வேடம்.

(அரசியல் விமரிசகர் ரத்தன் சால்டி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) பாகிஸ்தான் தனது நாட்டிலிருந்து செயல்படும் பயங்கரவாதக் குழுக்களைக் கையாளும் விதத்தில் காட்டும் இரட்டைநிலை அனைவரும் அறிந்ததே. எனினும், பாரீஸில் நடைபெற்ற பயங்கரவாதத் நிதித்தடுப்பு செயல்குழுவான எஃப்ஏடிஎஃப் இன் முக்கியக் கூட்டத்தில், மசூத் அஸரைப் பற்றிய அப்பட்டமான பொய்யை மீண்டும் கட்டவிழ்த்து, தனது உண்மையான முகத்தை வெளிக்காட்டி விட்டது பாகிஸ்தான். மசூத் அஸர் பாகிஸ்தானில் அதிகாரபூர்வமான பாதுகாப்பில் இருந்துவரும் நிலையில், தாங்கள் பயங்கரவாதக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக உலகுக்குக் காட்டிக் கொள்ள பாகிஸ்தான் முயல்கிறது. ஆனால், மசூத் அஸர், ஹஃபீஸ் சயீத், ஸாகீர் உர் ரெஹ்மான் லக்வி போன்ற பயங்கரவாதிகளைக் கூண்டில் நிறுத்தி, தகுந்த தண்டனை வழங்க உண்மையில் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. புல்வாமாவில், 2019 ஆம் ஆண்டு, பிப்ரவரி 14 ஆம் தேதியன்று, 40 மத்திய ரிசர்வ் போலீஸ் வீரர்களைப் பலிவாங்கிய பயங்கரத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற ஜெயிஷ் ஏ முகம்மது பயங்கரவாதக் குழுவின் தலைவன் மஸூத் அஸர். இதற்குப...

ஆஃப்கானிஸ்தானில் தொடரும் நிச்சயமற்ற தன்மை.

(மூத்த பத்திரிகையாளர் ரஞ்சித்குமார் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் - மாலதி தமிழ்ச்செல்வன்.) மார்ச் மாத முற்பகுதியில் ஆப்கானிஸ்தான் முக்கியமான முன்னேற்றங்களைக் கண்ணுற்றது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட நாட்டில் அனைத்துத் தரப்பினரும் ஆர்வத்துடன் எதிர்பார்த்த அமைதியை மீட்டெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு, ஆப்கானில் உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் நடத்துவதை சுலபமாக்குவதற்காக, பிப்ரவரி 29 ஆம் நாளன்று அமெரிக்கா மற்றும் தாலிபான்கள் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அமைதியை விரும்பும் ஆப்கான் நாட்டு மக்களுக்காக, ஆப்கான் ஜனநாயக அரசு, ஒன்றுபட்ட வடிவில், தாலிபானுடனான பேச்சுவார்த்தைகளை சீரிய முறையில் வழிநடத்தும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆப்கானிஸ்தானில் அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர், தற்போது அங்கு ஆழமான பிளவுகள் தென்படுகின்றன. இது அந்நாட்டு மக்களுக்கு மட்டுமல்ல, தற்போது ஆஃப்கானில் நிலவிவரும் அரசியல் சண்டையை முடிவுக்குக் கொண்டுவர முயற்சிக்கும் வெளிநாட்டு சக்திகளுக்கும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிற்பகுதியில் நடத்த...

இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை

ஆகாஷவாணியின் செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி நரேந்திரமோதி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தொழில் துறையை முன்னெடுத்துச் செல்வதை நோக்கமாக கொண்டுவெளியுறவுக் கொள்கையை கட்டமைத்து வருகிறது. குறைந்த வட்டியில் வெளிநாடுகளுக்கு கடன் வழங்குவதை ஒரு அங்கமாக இந்திய அரசு ஏற்படுத்தியுள்ளது. வெளிநாடுகளில் நிறைவேற்றப்படும் வளர்ச்சித் திட்டங்களின் பயனாக இந்திய தொழில் துறை வளர்ச்சி கண்டு வருவதாக வெளியுறவுத் துறாஇ அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர் கோடிட்டுக் காட்டியுள்ளார். இந்திய அரசின் கடன் உதவித் திட்டங்களின் முலம் இந்திய கம்பெனிகளுக்கு வெளிநாட்டுச் சந்தை வாய்ப்புகள் பெருகத் தொடங்கியுள்ளன. இந்திய அரசின் கடன் உதவித் திட்டங்களுக்கு வெளி நாட்டு அரசுகளின் உதவியும் கிடைப்பதால், இந்திய அரசின் தொழில் சார் திட்டங்களை நிறைவேற்றுவது எளிதாக அமைகிறது எனக் கூறலாம். 64 வளர்ந்து வரும் நாடுகளில் 539 கடன் உதவித் திட்டங்களை இந்திய அரசு நிறைவேற்றி வருகிறது. திட்டங்களைத் திறம்பட நிர்வகிப்பதிலும் தொழில் துறை வளர்ச்சியை உறுதிப்படுத்துவதிலும் இந்தியப் பிரதமர் தனது ஆலோசனைகளையு...

சிபிஈசி திட்டம் - பாகிஸ்தானின் கடன் சுமை.

(அரசியல் விமரிசகர் எம்.கே.டிக்கு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்) சிபிஈசி எனப்படும் சீனா பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத் திட்டம் நிறைவு பெறுமேயானால், அது சீனாவிற்கு மட்டுமே ஒரு வெற்றி ஒப்பந்தமாக அமையும் என்பதில் எந்த ஐயமுமில்லை.. மிக முக்கியமாக, 6,200 கோடி டாலர் அளவிலான இந்தத் திட்டத்தின் மூலம், வளைகுடா நாடுகள் மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் புகுவது, சீனாவுக்கு எளிதாகும். ஏனெனில், நிலப்பரப்பினால் சூழப்பட்ட சீனாவின் ஸின்ஜியாங் மாகாணத்தையும், பலூசிஸ்தானிலுள்ள குவதார் துறைமுகத்தையும் இத்திட்டம் இணைக்கிறது. ஆனால் இந்தத் திட்டம் பாகிஸ்தானை எங்கே கொண்டு செல்லும்? என்ற கேள்வியை, சிலகாலமாக, ஆய்வாளர்களும் பாகிஸ்தானிய விமர்சகர்களும் கேட்டு வருகின்றனர். சிபிஈசி மட்டுமல்லாமல், அதைச் சார்ந்த மற்ற திட்டங்களும், செலவு அதிகரிப்பு மற்றும் கால தாமதங்களை சந்தித்து வருகின்றன. இவற்றுள் பிரம்மாண்டமான நீர் மின்திட்டம், கராச்சியுடன் பெஷாவர் நகரை இணைக்கும் பெரும் ரயில் பாதைத் திட்டம் ஆகியவை அடங்கும். பெஷாவர் ரயில்பாதைத் திட்டத்திற்கான செலவு முதலில் 820 கோடி டாலர் என்று நிர்ண...

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

பத்திரிக்கையாளர் திரு யோகேஷ் சூத் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பட்ஜெட் கூட்டதொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 2 ஆம் தேதி துவங்கியது; ஏப்ரல் 3ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அனைத்து எதிர்கட்சிகளும் நாட்டின் பொருளாதார நிலை மற்றும் விவசாய ப்ரச்னைகள் குறித்து தேசிய ஜன நாயக கூட்டணி அரசை திணற வைக்க முயற்சிக்கலாம் எனும் நிலைமையில், ஆளும் கட்சி, உண்மை நிலவரம் மற்றும் புள்ளி விவரங்களை இரு அவைகளிலும் முன் வைக்க தீர்மானித்துள்ளது. தொழிலாளர் சீர்திருத்தங்கள் மற்றும் வாடகைதாய் ஒழுங்குமுறை மசோதாக்களை நிறைவேற்றி சட்டங்களாக்குவதற்காக அரசானது 25 மசோதாக்களின் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளது. இந்த அமர்வில் நிதி மசோதாவும் நிறைவேற்றப்படும். இதனிடையே மானிலங்களவையில் மத்திய சுகாதார துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்த்தன், கொரொனாவைரஸ் தடுப்பு நடவடிக்கையாக இனி அனைத்து சர்வதேச பயணிகளும் விமான நிலையத்தில் பரிசோதிக்கப்படுவர் என்று கூறியுள்ளார். தற்போதைய அமர்வில், ரயில்வே அமைச்சகத்திற்கான 2020-21 ஆம் ஆண்டிற்கான மானியங்களுக்கான கோரிக்கைகள் குறித்த ரயில்வே நிலைக்குழுவின் அறிக்கையை திரு ராதா ம...

இஸ்ரேல் நாடாளுமன்றத் தேர்தல் - ஆட்சி அமைப்பதில் தொடரும் தேக்கநிலை.

(ஜேஎன்யூ பேராசிரியர் குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) நெஸ்ஸெட் எனப்படும் இஸ்ரேல் நாடாளுமன்றத்தின் 23 ஆவது சபைக்கான தேர்தல் இம்மாதம் 2 ஆம் தேதி நடைபெற்றது. ஓராண்டிற்குள் மூன்றாவது முறையாக நடைபெறும் இத்தேர்தலிலாவது, அரசு அமைப்பதற்கான உறுதியான முடிவு எட்டப்படும் என்ற இஸ்ரேல் மக்களின் எதிர்பார்ப்பு பொய்த்துப் போனது. 120 உறுப்பினர்களைக் கொண்ட நெஸ்ஸெட்டில், குறைந்த பட்சம் 61 இடங்களைப் பெற வேண்டிய நிலையில், அந்த எண்ணிக்கையை அடையத் தவறிய லிகுட் தலைவர் பெஞ்சமின் நேதன்யாஹூ, தேர்தல் முடிந்த சிலமணி நேரங்களிலேயே தான் வெற்றி பெற்றதாகக் கூறியது நிறைவேறவில்லை. இஸ்ரேல் நாட்டின் பிரதமராக அதிக காலம் பதவி வகித்தவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தமுள்ள 60 லட்சம் வாக்குகளில் 99 சதவிகிதம் எண்ணப்பட்ட நிலையில், லிகுட் கட்சி 36 இடங்களை வென்றுள்ளது. ஷாஸ் மற்றும் யுனைடெட் டோரா ஜுதாயிஸம் என்ற மத அடிப்படையிலான கட்சிகள், முறையே 9 மற்றும் 7 இடங்களைப் பெற்றுள்ளன. வலதுசாரிக் கட்சியான யாமினா 6 இடங்களைப் பெற்றுள்ளது. லிகுட் மற்றும் இந்த மத,வலதுசாரிக் கட்சிகளின் கூட்டணி, மொத...

துருக்கியின் ஐரோப்பிய எல்லை திறப்பு – சிரிய அகதிகள் நெருக்கடி அதிகரிப்பு.

(ரஷ்யா, சிஐஎஸ் மற்றும் துருக்கி நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) 2015 ஆம் வருடம் ஏற்பட்ட புலம்பெயர்ந்தல் பிரச்சினைகளின் போது ஏற்பட்ட பல உயிரிழப்புக்கள் மற்றும் அப்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் போன்ற நினைவுகள், தற்பொழுது துருக்கி நாட்டின் செயல்களால் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு மீண்டும் ஏற்பட்டுள்ளது. போன வாரம் துருக்கி, ஐரோப்பாவை நோக்கி, அகதிகளுக்காகத் தனது எல்லையைத் திறந்து விட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் துருக்கி ஏற்படுத்திக் கொண்ட அகதிகள் ஒப்பந்தத்தின் அத்துமீறலாக இதனை ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன. தனது நாடு, அகதிகளை உள்வாங்கும் கொள்திறன் அளவை எட்டி விட்டது என்றும், இனியும் ஐரோப்பிய எல்லையை அகதிகளுக்கு மூடி வைக்க முடியாது என்றும் துருக்கி தெரிவித்துள்ளது. மேலும்,, ஐரோப்பிய ஒன்றியம் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் துருக்கி குற்றம் சாட்டியுள்ளது. ஒப்பந்தத்தின்படி, துருக்கிக்கு அளிக்க வேண்டிய 600 கோடி யூரோ உதவித் தொகையை அளிக்க ஐரோப்பிய ஒன்றியம...

இந்தோ –பசிஃபிக் பிராந்தியத்தில் புதிய வாய்ப்புக்களை வழங்கும் நீலப் புள்ளி முன்னெடுப்பு.

(தெற்காசிய மற்றும் கிழக்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர், டாக்டர் ராகுல் மிஷ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணத்தின்போது, அவருக்கும், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கும் இடையே நடந்த கலந்தாலோசனைகளில் இடம் பெற்ற முக்கிய அம்சம், நீலப் புள்ளி வலையம் ஆகும். பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து இருதலைவர்களும் வெளியிட்ட கூட்டறிக்கையில், வளர்ந்து வரும் குறைந்த வருமானுமுள்ள நாடுகள், கடன்பிடியில் சிக்குவதைத் தடுக்க, பொறுப்பான, வெளிப்படையான, நீடித்த நிதி வழிமுறைகளை உறுதிப்படுத்துவது கடன் வாங்குவோருக்கும், அளிப்போருக்கும் பலனளிக்கும் என்பதை இந்தியாவும், அமெரிக்காவும் உணர்ந்துள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், நீலப் புள்ளி வலையத்தில் இரு தலைவர்களும் தங்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்தினர். நீலப் புள்ளி வலையம் என்பது, அரசுகள், தனியார்துறை, பொதுமக்கள் என, பலதரப்பட்ட நிலையிலான பங்குதாரர்களின் முன்னெடுப்பாகும். இதன் மூலம், உலகத்தரம் வாய்ந்த உலக உள்கட்டமைப்பு வசதிகளை இணைந்து வழங்குவது ...

அமெரிக்கா - ஆப்கானிஸ்தான் அமைதி ஒப்பந்தம் தருவது நம்பிக்கையையா அல்லது அச்சத்தையா?

(ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த மூலோபாய ஆய்வாளர் டாக்டர் ஸ்மிதா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) ஆப்கானிஸ்தானில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் கொண்டு வருவதற்காக அமெரிக்காவும் தாலிபானும் சமாதான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இரண்டே நாட்களில், ஆப்கானிஸ்தான் தேசிய பாதுகாப்புப் படைகளுக்கு (ANDSF) எதிரான தனது ராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவதாக தாலிபான் அறிவித்துள்ளது. ஒன்பது சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, கத்தார் நாட்டின் தோஹாவில், அமெரிக்க சிறப்புப் பிரதிநிதி சல்மே கலீல்சாத் மற்றும் தாலிபான் துணைத் தலைவர் முல்லா அப்துல் கனி பிரதார் ஆகியோரிடையே, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமாதான ஒப்பந்தம் கையெழுத்தானது. சமாதான ஒப்பந்தத்தில் நான்கு முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. அவை: போர்நிறுத்தம், வெளிநாட்டுப் படைகளைத் திரும்பப் பெறுதல், ஆப்கானிஸ்தானில் உள்நாட்டுப் பேச்சுவார்த்தைகள் மற்றும் பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு உத்தரவாதம் ஆகியவையாகும். இந்த ஒப்பந்தத்தின் கீழ், 10 நாட்களுக்குள் தனது துருப்புக்களைத் திரும்பப் பெறத் ...

இந்திய, பங்களாதேஷ் இருதரப்பு உறவுகளுக்கு வலு சேர்ப்பு.

(தெற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிரிதி எஸ் பட்நாயக் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா அவர்கள், டாக்காவிற்குப் பயணம் மேற்கொண்டார். இதன் மூலம், பங்களாதேஷ் நாட்டுடனான இந்தியாவின் நீடித்த நெருக்கமான உறவுகள் வெளிப்படுகின்றன. இந்த இரு தரப்பு உறவுகள், குறிப்பாக, தற்பொழுது அவாமி கட்சியைச் சார்ந்த பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா அவர்களின் தலைமையில், மேலும் ஊக்கத்தைப் பெற்றுள்ளது. ஷ்ரிங்லா அவர்கள், டாக்காவில் 2019 ஆம் வருடம் ஜனவரி மாதம் வரை, பங்களாதேஷ் நாட்டிற்கான இந்தியாவின் உயர் ஆணையராகப் பணியாற்றியுள்ளார் என்பதும், இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அண்மையில் இந்தியாவில் நடந்தேறிய சில நிகழ்வுகளால், தங்கள் நாட்டில் ஏதேனும் பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலையை பங்களாதேஷ் வெளிப்படுத்தியது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவின் உள்நாட்டு நிகழ்வுகளால் பங்களாதேஷ் நாட்டில் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்று உறுதியளித்துள்ளார். இது அதிகாரபூர்வமாக, ...

மியன்மாருடனான உறவுகளை வலுவாக்கும் இந்தியா.

(கிழக்கு, தென்கிழக்கு ஆசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் தித்லி பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) மியன்மார் குடியரசு நாட்டின் அதிபர் யூ வின் மிண்ட் அவர்கள், இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இந்தியாவின் கிழக்கு நோக்கிய செயல்பாடு மற்றும் அண்டைநாடுகளுக்கு முதலிடம் ஆகிய அயல்நாட்டுக் கொள்கைகளுக்கு முக்கிய அச்சாரமாக மியன்மார் விளங்குகிறது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் விரிவான பொருளாதார மற்றும் செயலுத்தி ரீதியிலான பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள விழையும் இந்தியாவுக்கு, கம்போடியா, லாவோ பிடிஆர், மியன்மார், வியட்நாம் திட்டத்தின் கீழுள்ள நாடுகளை நெருங்க, மியன்மார் முக்கியப் பங்காற்றுகிறது. பாரம்பரிய வரவேற்பினைத் தொடர்ந்து, மியன்மார் அதிபர், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுடனான பிரதிநிதிகள் நிலையிலான சந்திப்பில், இருதலைவர்களும் இருதரப்பு, பிராந்திய, உலக விஷயங்களில் பரஸ்பர நலன்கள் குறித்து விவாதித்தனர்.

கொரொனாவைரஸ் தொற்றின் விளிம்பில் ஊசலாடும் உலகம்

மூத்த பத்திரிக்கையாளர் கே.வி.வெங்கடசுப்ரமணியன் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் இதற்கு முன்னர், மனிதர்களிடம் அடையாளம் காணப்படாத புதிய வகை கொரொனோ வைரஸ் தற்போது உலகை ஆட்டி வைத்துகொண்டிருக்கிறது. சுவாச நோயான கொவைட் 19ஐ உருவாக்கும் இந்த வைரஸினால் 81,000 பேர்களுக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஏறத்தாழ 3000 பேர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த இறப்புகளில், மோசமான இந்த வைரஸ் தொற்று ஆரம்பித்த சீனாவில் மட்டுமே 96.5 சதவிகிதம் பேர் அதாவது 2800 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் மட்டுமல்லாமல் ஏனைய நாடுகளிலும் கொரொனோவைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஏறிக்கொண்டே வருகிறது. ஐரோப்பா, மத்திய கிழக்கு, அமெரிக்கா, ஆசியா என இந்த தொற்று விரிய ஆரம்பித்துள்ளது. 51 நாடுகளில், இந்த தொற்றால் பாதிக்கப்பட்டவர்காளில் பெரும்பான்மையானோர் சீனாவுக்கு சென்று வந்தவர்களோ அல்லது இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களோ கிடையாது; எந்த விதமான தொற்றுனோயியல் இணைப்பும் இல்லாதவர்கள் ஆவர். லத்தீன் அமெரிக்காவின் முதல் கொரொனா வைரஸ் பாதித்தவரை ப்ரேசில் உறுதிபடுத்தியுள்ளது. சீனாவிற...