Posts

Showing posts from July, 2019

மொசாம்பிக் நாட்டுடனான உறவை வலுவாக்கும் இந்தியா.

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள், சமீபத்தில் மொசாம்பிக் நாட்டிற்கு மேற்கொண்ட மூன்று நாட்கள் பயணத்தின் போது, அந்நாட்டுடன் இரண்டு முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின. அவை வெள்ளை கப்பல் போக்குவரத்து குறித்த தகவல் பரிமாற்றம் மற்றும் ஹைட்ரோ கிராஃபி துறையில் ஒத்துழைப்பு ஆகியவையாகும். மொசாம்பிக் நாட்டில் இந்தியா கணிசமான அளவில் பொருளாதார முதலீடுகளைச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இருநாட்டு செயலுத்தி ரீதியிலான உறவையும், இருதரப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும். மொசாம்பிக் நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் அடனாசியோ டுமுகே அவர்களுடன் நடைபெற்ற இரு தரப்பு சந்திப்பின் போது, ஆப்பிரிக்க நாடுகளுள் மொசாம்பிக் நாட்டை, இந்தியா தனது மிக முக்கியமான நட்பு மட்டும் கூட்டாளி நாடாகக் கருதுகின்றது என்று இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்கள் கூறினார். இந்தியா, மொசாம்பிக்கில் 700 கோடி டாலர் அளவிலான முதலீட்டை செய்துள்ளது. அதில் அதிகபட்சமாக, எரிய...

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.

(சமூக அறிவியல் நிறுவன இயக்குனர் ஏஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) உலக வரலாறு புரட்டிப் போடப்பட்டு வருகிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் அதிகாரம் இடம் பெயர்ந்து வருகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும். நவீன உலகில், முதல்முறையாக, மக்கள் தொகையும், செல்வமும் ஒரே இடத்தில் குவிகின்றன. இந்த மாற்றமே பிரிக்ஸ் அமைப்புக்கு வழிகோலியுள்ளது. வேகமாக மாறிவரும் உலகை வழிநடத்துவோரும் மாறி வருகின்றனர். உலகின் பார்வை பிரிக்ஸ் நோக்கித் திரும்பியுள்ளது. மற்ற நாடுகள் அமைத்த குழுவைப் போலன்றி, பிரிக்ஸ் அமைப்பில், முன்னாள் வல்லரசு, தற்போது வல்லரசாகப் போகும் நாடு, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வருங்காலத்தில் வல்லரசாகத் திகழக்கூடிய நாடுகள் ஆகியவை ஒன்றிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு மாற்று சக்தியாகவும், போட்டியிடத் தேவையான சக்தி கொண்டதாகவும் பிரிக்ஸ் விளங்குகிறது. முக்கியமாக, உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், வளமையையும் அளிக்கவல்ல வளரும் பொருளாதார சக்திகளின்பால் உலகின் பார்வையை பிரிக்ஸ் திசை திருப்பியுள்...

பிரிக்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.

(சமூக அறிவியல் நிறுவன இயக்குனர் ஏஷ் நாராயண் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) உலக வரலாறு புரட்டிப் போடப்பட்டு வருகிறது. மேற்கிலிருந்து கிழக்கு நோக்கியும், வடக்கிலிருந்து தெற்கு நோக்கியும் அதிகாரம் இடம் பெயர்ந்து வருகிறது. இது வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றமாகும். நவீன உலகில், முதல்முறையாக, மக்கள் தொகையும், செல்வமும் ஒரே இடத்தில் குவிகின்றன. இந்த மாற்றமே பிரிக்ஸ் அமைப்புக்கு வழிகோலியுள்ளது. வேகமாக மாறிவரும் உலகை வழிநடத்துவோரும் மாறி வருகின்றனர். உலகின் பார்வை பிரிக்ஸ் நோக்கித் திரும்பியுள்ளது. மற்ற நாடுகள் அமைத்த குழுவைப் போலன்றி, பிரிக்ஸ் அமைப்பில், முன்னாள் வல்லரசு, தற்போது வல்லரசாகப் போகும் நாடு, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் வருங்காலத்தில் வல்லரசாகத் திகழக்கூடிய நாடுகள் ஆகியவை ஒன்றிணைந்துள்ளன. உலக அளவில் ஒரு மாற்று சக்தியாகவும், போட்டியிடத் தேவையான சக்தி கொண்டதாகவும் பிரிக்ஸ் விளங்குகிறது. முக்கியமாக, உலகப் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மையையும், வளமையையும் அளிக்கவல்ல வளரும் பொருளாதார சக்திகளின்பால் உலகின் பார்வையை பிரிக்ஸ் திசை திருப்பியுள்...

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

திரு வி மோகன்ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் விஞ்ஞானிகளுக்கு, சந்திரயான் -2, வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதையொட்டி, குடியரசு தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் குடியரசு துணை தலைவர் திரு வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோதி ஆகியோர் நாடாளுமன்றத்தில் வாழ்த்துக்களை தெரிவித்தனர். சந்திரயான் திட்டம் வெற்றி பெற்றதையொட்டி, மேலும் பல்வேறு கண்டுபிடிப்புகள் இந்திய மக்களுக்கு கை கூடும் என்று கூறினார் திரு ராம்நாத் கோவிந்த். சந்திரயான் –2 நிலவில் வெற்றிகரமாக இறங்கும் போது இந்திய அரசு இந்த சாதனையை படைத்த 4-வது நாடாகும் என்றார் திரு வெங்கையா நாயுடு அவர்கள். இந்திய அறிவியலாளர்களின் திறமை, நடவடிக்கையை பறை சாற்றும் வகையில் சந்திரயான் –2 அமைந்துவிட்டது என்று பாராட்டினார் பிரதமர். மாநிலங்களவையில் பேசிய வெளியுறவுத் துறை அமைச்சர் திரு ஜெய்சங்கர், பாகிஸ்தானுடன் ஆன அனைத்து பிரச்சனைகளும் இருதரப்பு பேச்சு வார்த்தைகளின் மூலமே தீர்க்கப்படும் என்றும் மூன்றாவது நாடு தலையிடுவதற்கு பிரதமர் எந்த நாட்டின் உதவியையும் நாடவில்லை என்றும் ...

மூடி மறைத்த உண்மையை வெளிப்படுத்தும் பாகிஸ்தான்.

(ஆல் இண்டியா ரேடியோ ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) வியப்பூட்டும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்கள், பாகிஸ்தான் மண்ணில் 40 பயங்கரவாதக் குழுக்கள் செயல்படுகின்றன என்றும், நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட பலவித பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் தற்சமயம் உள்ளனர் என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்காவுக்கு அவர் மேற்கொண்ட முதல் பயணத்தின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்த உண்மையை இதுகாறும் பாக் அரசு அமெரிக்காவுக்குத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பாகிஸ்தான் பங்கு கொண்டதாகவும், அமெரிக்காவில் நடந்த 9/11 தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்றும் அவர் கூறினார். அல் கைதா, ஆஃப்கானிஸ்தானிலிருந்து செயல்பட்டதாகவும், தாலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் இல்லை என்றும் அவர் கூறினார். இருப்பினும், பயங்கரவாதிகளுக்கு எதிரான அமெரிக்காவின் போரில் பாகிஸ்தான் பங்கு கொண்டதாகக் கூறிய அவர், துரதிருஷ்டவசமாக, அப்போதைய பாகிஸ்தான் அரசு, பயங்கரவாதிகள் பாகிஸ்தான் மண்ணிலிருந்து செயல்படுவது குறி...

வளர்ச்சிப் பாதையில் இந்தியப் பொருளாதாரம்.

(மூத்த பொருளாதார விமர்சகர் சத்யஜித் மொஹந்தி, ஐ.ஆர்.எஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ஐ.எம்.எஃப். எனப்படும் சர்வதேச நாணய நிதியம், தன்னுடைய சமீபத்திய, உலகப் பொருளாதாரக் கண்ணோட்டம் குறித்த அறிக்கையில், இந்த நிதி ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 7 சதவிகிதமாகவும், அடுத்த நிதியாண்டில் 7.2 சதவிகிதமாகவும் இருக்கும் எனக் கூறியுள்ளது. 2019 ஆம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டிற்கு முன்னர், இந்திய அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்ற கணிப்புகளை மெய்ப்பித்துக் காட்டும் வகையில் ஐ.எம்.எஃப்-ன் கணிப்பு உள்ளது. உலகளாவிய சிக்கல்கள் பல இருந்தாலும், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வலுவானதாக இருக்கும் என்பதையும் இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது. உலகப் பொருளாதாரத்தில் தீர்வுகாணப்படாமல் தொடரும் வணிகப் போர் மற்றும் வர்த்தகத் தற்காப்பு ஆகியவற்றின் பின்னணியில், இந்த நிதி ஆண்டிற்கான இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் கணிப்பை, ஐ.எம்.எஃப், 7.3 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகக் குறைத்திருக்கிறது. சீனா உட்பட, பெரிய பொருளாதாரங்கள் மந்த நிலை...

புதிய பிரிட்டன் பிரதமரும் பிரெக்ஸிட்டுக்கான வழிகளும்

(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் என அழைக்கப்படும் விவகாரத்தின் மீது, 2016 ஆம் ஆண்டில் வாக்கெடுப்பு நடந்த சமயம் தொட்டே, பிரிட்டிஷ் அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்துள்ளது. தமது திட்டத்திற்கு இணங்க, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒப்புதல் பெறுவதில் தோல்வியுற்ற தெரெஸா மே அவர்கள், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், இம்மாதம் 4 ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் ஜெரீமி ஹண்ட் அவர்களைவிட, 40,000 வாக்குகள் அதிகம் பெற்று, போரிஸ் ஜான்சன் அவர்கள் வெற்றி பெற்றார். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்த போரிஸ் ஜான்சன் அவர்கள், நாட்டை ஒன்றுபடுத்தி, லேபர் கட்சித் தலைவர் ஜெரீமி கோர்பின் அவர்களைத் தோற்கடிப்பதே தனது இலக்கு என்று க...

” டிரம்ப் அவர்களுக்கு மீண்டும் அதிர்ச்சி”

த ஹிந்து பத்திரிக்கையின் மூத்த நிருபர் கலோல் பட்டாச்சார்ஜீ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்கள், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அவர்களுடன் ஏற்பட்ட சந்திப்பின்போது, காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்யும்படி பிரதமர் மோதி அவர்கள் தன்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்திருந்தார். இருப்பினும் அது பாதி கதை தான், அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே நடைபெறும் செயல் உத்தி பேச்சுவார்த்தையை, இந்தியா, முனைப்போடு பார்க்க வேண்டும். காஷ்மீர் என்பது இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே உள்ள இரு தரப்பு பிரச்சனை, அதில் பங்கு பெற முயற்சி செய்யவில்லை என்று அமெரிக்க அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளது. பிரதமர் மோதி அவர்கள் அமெரிக்க அதிபர் இடம் அப்படி ஒரு கோரிக்கையை வைக்க வில்லை என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இந்திய பிரதமர் பெருவாரியான வாக்குகள் பெற்று இரண்டாவது முறையாக தேர்தெடுக்கப்பட்ட பின்னர், போன மாதம் ஜப்பான் நாட்டில், ஒசாகா நகரில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இடையே, அமெரிக்க ...

நிலவிற்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தின் வெற்றிகரமான புறப்பாடு

மூத்த அறிவியல் எழுத்தாளர் பீமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஸ்ரீப்ரியா சம்பத்குமார் நிலவிற்கான இந்தியாவின் இரண்டாவது விண்கலமான சந்திரயான்-2, திங்களன்று வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது. இந்திய விண்வெளித் திட்டங்களில் மிக சிக்கலான அதே சமயம் துணிகரமான திட்டங்களில் ஒன்றான சந்திரயான்-2, திங்களன்று மதியம் விண்ணில் பாய்ந்தது. நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது ஆய்வு விண்கலமான சந்திரயான்-2-ஐ சுமந்துச் சென்ற, நாட்டின் அதீத வல்மை மிக்க ராக்கெட்டான ஜி.எஸ்.எல்.வி எம்.கெ-III, இந்தியாவின் விண்வெளித் தளமான, ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவன் விண்வெளி ஆய்வு மையத்திலிருது திங்களன்று மதியம் 2.43-க்கு புறப்பட்டது. ராக்கெட் புறப்பட்டு 17 நிமிடங்களுக்குப் பிறகு, பூமியைச் சுற்றி ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட சுற்றுவட்டப்பாதையில் சந்திரயான்-2 செலுத்தப்பட்டது. இம்மாதம் 15 ஆம் தேதி இந்த செலுத்தல் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அது கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது. அதன் பிறகு, மிகக் குறைந்த நேரத்தில், எங்கு தவறு ஏற்பட்டது என்பதைக் கண்டறிந்து அதைச் சரி ...

இலங்கயில் அதிகரிக்கும் இந்திய முதலீடுகள்.

(இந்தியப் பெருங்கடல் பகுதிகளுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். எம்.சமந்தா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்தியாவும் இலங்கையும், மாஹோவிலிருந்து ஓமந்தை வரையிலான 130 கிலோமீட்டர் நீள ரயில்வே தடத்தை மேம்படுத்துவதற்கான, 9.126 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளன. 100 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழிப்பாதை முதன் முறையாக மேம்படுத்தப்படுவதால், இந்த ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவத்தைப் பெறுகின்றது. இலங்கை ரயில் துறையை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கு உள்ள பங்கு அனைவரும் அறிந்ததே. இதுவரை இலங்கையில், ரயில் துறை முன்னேற்றத்திற்கு மட்டும், இந்தியா சுமார் 130 கோடி டாலர் அளவிலான உதவியைச் செய்துள்ளது. இலங்கை போன்ற, வளர்ந்து வரும் நாடுகளில், தனது முதலீடுகளை அதிகப்படுத்தி, கூட்டு முதலீடுகளில் ஈடுபடவும் இந்தியா ஆர்வத்துடன் உள்ளது என்பதை இது குறிப்பிட்டுக் காட்டுகின்றது. சுகாதாரம், கல்வி மற்றும் இணைப்புப் பணிகள் என இந்தியா அங்கு மேற்கொண்டிருக்கும் பணித்திட்டங்கள் அனைத்தும் மக்கள் நலனை மையமாகக் கொண்டுள்ள பணித்திட்டங்களாக உள்ளன. இந்த மாதத்தில் மட்டும், கம...

நாடாளுமன்ற நடவடிக்கைகள்

சர்வதேச நீதி மன்றத்தின் ஆணைப்படி, பாகிஸ்தான் அரசு உடனடியாக இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் யாதவ் அவர்களை இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டு கொண்டார். சர்வதேச உடன்படிக்கைகளில் நம்பிக்கை கொண்டுள்ளவர்களும், சட்டத்தின் ஆட்சி மீது உறுதி உள்ளவர்களும் சர்வதேச நீதிமன்றத்தின் ஆணை வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது என நாடாளுமன்றத்தில் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள். தனது வாதங்களை கேட்பதற்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் ஒருதரப்பு வாதங்களை மட்டும் ஏற்றுக்கொண்டு துன்புறுத்தி குல்பூஷன் யாதவ் மீது பொய்யான வழக்குகள் புனையப்பட்டது என்பது தற்போது தெளிவாகி உள்ளது என்று கூறினார் வெளியுறவுத்துறை அமைச்சர். வியன்னா ஒப்பந்தத்தை மீறும் வகையில், பாகிஸ்தான் அரசு செயல்பட்டுள்ளது என சர்வதேச நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உடனடியாக குல்பூஷன் யாதவ் தொடர்பு கொண்டு ஆவண செய்வார்கள் என்றார் வெளியுறவுத் துறை அமைச்சர். மாநிலங்களவையில் தேசிய புலனாய்வு அமைப்பு மசோதா 201...

இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையில் வலுப்பெறும் பாதுகாப்புக் கூட்டுறவு

(மத்திய ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அதர் ஸஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இந்தியா-உஸ்பெகிஸ்தான் இடையில், பயங்கரவாத எதிர்ப்பிற்கான கூட்டுப் பணிக் குழுவின் எட்டாவது சந்திப்பு புது தில்லியில் நடைபெற்றது. இருதரப்பிலிருந்து இந்த சந்திப்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், எல்லை தாண்டிய பயங்கரவாதம் மற்றும் அவரவர் பகுதிகளிலும் உலகின் மற்ற பாகங்களிலும் இயங்கிக்கொண்டிருக்கும் பயங்கரவாதக் குழுக்கள் ஆகியவற்றால் உண்டாகும் அச்சுறுத்தல்களைப் பற்றி ஆராய்ந்தனர். பயங்கரவாத எதிர்ப்பில் நாடுகள் சந்திக்கும் சவால்கள், தீவிரவாதத்திற்கான தீர்வு, பயங்கரவாத நிதி உதவிகளை தடுக்கும் முறைகள், பயங்கரவாதச் செயல்களுக்கு இணையதளப் பயன்பாட்டைத் தடுக்கும் முறைகள், நாடு திரும்பும் வெளிநாட்டு பயங்கரவாதிகளைக் கையாளும் முறைகள் ஆகியவை குறித்த தங்கள் கருத்துக்களையும் இரு தரப்பினரும் பரிமாறிக் கொண்டனர். தகவல் பரிமாற்றம், திறன் வளர்ச்சி மற்றும் சிறந்த பழக்க முறைகளுக்கான பரிமாற்றம் ஆகியவை மூலம் பயங்கரவாத எதிர்ப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இருதரப்புக் கூட்டுறவை வலுப்படுத்தும் நடவடிக்கைக...

ஐந்து லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி வீறுநடை போடும் இந்தியா.

(தேசிய பொதுநிதி மற்றும் கொள்கை நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் லேகா சக்ரவர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) 2019 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில், இந்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் அவர்கள், 2024 ஆம் ஆண்டிற்குள், இந்தியப் பொருளாதாரம், 5 லட்சம் கோடி டாலர் என்ற அளவை எட்டுவதற்கு அதிக கவனம் செலுத்தியுள்ளார். ‘பத்து ஆண்டுகளுக்கான முன்னோக்கு’ என்ற கொள்கை நடவடிக்கைகளுக்கான தொடரை அவர் அறிமுகம் செய்துள்ளார். இதில் முதலீடு மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் தெளிவான கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கட்டிட மற்றும் சமூக உள்கட்டமைப்புகளை வலுவாக்குதல், டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் மூலம் நிதி உள்ளடக்கலை மேம்படுத்துதல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து மற்றும் உடல் நலனில் கவனம், நீர் மேலாண்மை, நீல பொருளாதாரத்தில் கவனம், விண்வெளி பணித்திட்டங்களை வலுப்படுத்துதல், உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் தன்னிறைவு, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் மேம்பாடு, வலுவான ஆயுஷ்மான் பாரத் திட்டம், ‘குறைந்தபட்ச அரசுத் தலையீடு, அதிகபட்ச நிர்வாகம்’ ஆகியவை இ...

சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியாவுக்குக் கிடைத்த ராஜதந்திர வெற்றி.

(ஐ.நா.வுக்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) 2016 ஆம் ஆண்டு, மார்ச் மாதம், இந்தியக் குடிமகனான குல்பூஷன் சுதிர் ஜாதவ், உளவு பார்த்தல் மற்றும் பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தனால் கைது செய்யப்பட்டார். 2017 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் மரண தண்டனை விதிக்கப்பட்டார். இதனை எதிர்த்து, 2017 ஆம் ஆண்டு, மே மாதம், தி ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தில் இந்தியா வழக்கு தொடுத்தது. அதில், தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கை 1963 இன் கீழ், பாகிஸ்தான் விதிகளை மீறியதாக இந்தியா குற்றம் சாட்டியது. அந்த உடன்படிக்கையின் 36 ஆவது பிரிவின்படி, குல்பூஷன் கைது செய்யப்பட்டதை பாகிஸ்தான் இந்தியாவுக்கு உடனடியாகத் தெரிவித்திருக்க வேண்டும், குல்பூஷன் ஜாதவுக்கு அவரது உரிமைகள் பற்றி எடுத்துரைக்கப்பட்டிருக்க வேண்டும். அவரை இந்திய தூதரக அதிகாரிகள் அணுக வாய்ப்பையும் பாகிஸ்தான் வழங்கியிருக்க வேண்டும். சர்வதேச நீதிமன்றத்தில் இவற்றை மறுத்து, பல சட்ட ரீதியிலான வாதங்களை பாகிஸ்தான் முன்வைத்தது. இந்தியக...

நாளேடுகள் நவில்வன.

“ஒரே தேசம்; ஒரே அடையாள அட்டை” என்ற தலைப்பில், தினத்தந்தி நாளிதழ் தலையங்கம் வெளியிட்டுள்ளது.அதில்,  ”பிரதமர் நரேந்திரமோடி இந்தமுறை பதவியேற்றதிலிருந்து ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’, ‘ஒரே நாடு ஒரே ரே‌ஷன் கார்டு’, ‘ஒரே நாடு ஒரே மின்சார தொடர்’ என்பதுபோல, பல வி‌ஷயங்கள் நாடு முழுவதும் ஒன்றுபோல் இருக்கவேண்டும் என்பதில் அதிக அக்கறை காட்டிவருகிறார். அந்த பட்டியலில் இப்போது ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ என்பதும் வரப்போவதற்கான அறிகுறி பிரகாசமாக தென்படுகிறது. பட்ஜெட் உரையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், தற்போது 120 கோடிக்கும் மேலான இந்தியர்கள் ஆதார் அட்டையை வைத்திருக்கிறார்கள். வரி கட்டுபவர்களின் வசதிக்காக, அதை எளிமைப்படுத்துவதற்காக ‘பான்’ என்று கூறப்படும் நிரந்தர கணக்கு எண்ணும், ஆதார் அட்டையும் ஒன்றுக்கு பதிலாக ஒன்றை பயன்படுத்திக்கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது. வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய பான் கார்டு இல்லாதவர்கள், ஆதார் எண்ணை குறிப்பிடலாம். அதுமட்டுமல்லாமல், எங்கெங்கு பான் எண்ணை குறிப்பிடவேண்டுமோ, அங்கெல்லாம் ஆதார் எண்ணை குறிப்பிட்டுவிடலாம் என்று தெரிவித்துள்ளார். ஆதார் அட்டை என்பது 1...

நாடாளுமன்றத்தில் கடந்த வாரம்

பத்திரிக்கையாளர் வி மோகன் ராவ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராமமூர்த்தி புது தில்லி சர்வதேச நடுவர் மன்றத்தை அமைக்கும் வகையில் புது தில்லி சர்வதேச நடுவர் மன்ற சட்ட மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. புதன் கிழமையன்று மக்களவையில் பேசிய மத்திய சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், தேசிய, சர்வதேச சட்ட சிக்கல்களுக்குத் தீர்வு காணும் தலைசிறந்த நடுவர் மன்றமாக புதுதில்லி மையம் அமைக்கப்படும் என்று தெளிவுபடுத்தினார். பாகிஸ்தான் நாட்டிலிருந்து பெறப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% அளவுக்கு சுங்கத் தீர்வை விதிக்கப்படும் என இரு அவைகளிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர் முன்னெடுத்த தீர்மானத்தின் படி, கடந்த பிப்ரவரி மாதம் 16 ஆம் தேதி முதலாக இஸ்லாமாபாத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 200% சுங்க வரி விதிக்கப்படும். விவசாயம், கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்த நிதிநிலை அறிக்கையின் மூலம் அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி...

ஊடகங்களை நெருக்கும் பாகிஸ்தான்.

(ஆஃப்கான் – பாகிஸ்தான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்மிதா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கேலிக்கூத்தாக விளங்கும் பாகிஸ்தான் ஜனநாயகத்தில், அரசு நிர்வாகத்திற்கும், ஊடகங்களுக்கும் இடையில் உரசல்களுடன் கூடிய உறவு நீடித்து வந்துள்ளது. பாகிஸ்தானில் சுதந்திரமான, துடிப்பான ஊடகங்கள் செயல்படுவதாக ஒருபுறம் பெயரளவில் கூறிக்கொண்டே, பாக் நிர்வாகம் அடிக்கடி, ஊடகங்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்து, நெருக்கடி கொடுத்து வருகிறது. பாகிஸ்தானில் ராணுவ ஆட்சி நடைபெற்று வந்த காலத்தில் மட்டுமல்லாது, சிவிலியன் நிர்வாகத்தின் கீழும் ஊடகங்களின் குரல்வளை நெறிக்கப்படுகிறது என்பது பாகிஸ்தான் ஆட்சி வரலாறு தெரிவிக்கும் உண்மை நிலையாகும். குற்றம் சாட்டப்பட்டுள்ள, அல்லது தண்டனை அனுபவிக்கும் அரசியல்வாதிகளை ஊடகங்கள் நேர்காணலில் சந்திக்க, அண்மையில் இம்ரான்கான் அரசு தடை விதித்துள்ளது. பாகிஸ்தானின் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்திற்கு, தமது கடமையை நிறைவேற்றுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. முன்னதாக, செய்தி டிவி சேனல்களான சேனல் 24, அப்தக் நியூஸ் மற்றும் கேபிடல் டிவி ஆகியவற்றின் ஒளிபரப்பு தடை செ...

வலுத்துவரும் ஈரான் – அமெரிக்க சச்சரவு – ராஜ தந்திரத் தீர்வு அவசியம்.

(ஈரான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷூஜா அவகளின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான மோதல் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இப்பிரச்சனையின் மீது, சர்வதேச சமுதாயம் கவனம் செலுத்துவது அவசியமாகிறது. ஈரான் - அமெரிக்கா மோதல், 1979 ஆம் வருடம் ஈரான் புரட்சி ஏற்பட்ட காலத்தில் துவங்கியது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், கடந்த ஆண்டு, அதுவரை அமலில் இருந்த, ஜேசிபிஓஏ எனப்படும் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, தன்னிச்சையாக விலகிக் கொண்டது முதல், இந்த மோதல் அதிகரித்துள்ளது. அப்போதிலிருந்து, ஈரான் மீது முன்பு விலக்கிக் கொண்டிருந்த தடைகளை அமெரிக்கா, மீண்டும் புகுத்தியுள்ளது. அதைத் தவிர புதிய தடைகளையும் ஈரான் மீது விதித்துள்ளது. அவற்றில் சில, ஈரான் புரட்சி பாதுகாப்புப் படையையும், ஈரான் தலைவரையும் இலக்காகக் கொண்டுள்ளன. தனது அதிபர் தேர்தலுக்கான பிரச்சார காலத்திலேயே, ட்ரம்ப் அவர்களுக்கு ஈரானுடனான அணு ஒப்பந்தத்தின்மீது வெறுப்பு இருந்தது. தேர்தலுக்குப் பிறகு அதிபர் டிரம்ப் அவர்கள் ஈரானுக்கு எதிரான கொள்கைகளைத் தீவிர...

இந்திய, ஐக்கிய அரபு அமீரக உறவுகள் – புதிய உச்சத்தில்.

(மேற்காசியாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஃபஸூர் ரஹ்மான் சித்திக்கி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த ஐந்து ஆண்டுகளாக, தொடர்ச்சியாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் இந்தியாவுக்கு வருகை அளித்திருப்பது, இருநாட்டு உறவுகள் எந்த அளவுக்கு ஆழமாக உள்ளன என்பதைப் பறைசாற்றுகின்றது. தொடர்ந்து ஐந்தாவது முறையாக, இம்மாதம் 7 ஆம் தேதி முதல் 9 ஆம் தேதி வரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு மற்றும் சர்வதேசக் கூட்டுறவு அமைச்சர் அப்துல்லா பின் ஸயேத் அல் நஹ்யான் அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார். இதனால், இருநாடுகளுக்கும் இடையிலான சரித்திர, கலாச்சார மற்றும் அரசியல் பிணைப்புக்கள் புதிய உச்சத்தை அடையும் என்பதில் ஐயமில்லை. பிரதமர் திரு நரேந்திர மோதி அவர்கள், 2015 ஆம் ஆண்டு, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, இவையனைத்தும் அரங்கேறியுள்ளன. இந்தியப் பிரதமர் ஒருவர், 34 ஆண்டுகளில் முதன்முதலாக, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மேற்கொண்ட பயணமாக, மோதி அவர்களின் இப்பயணம் அமைந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் 2015 ஆம் ஆண்டு ஐக்கிய அரப...

தோஹாவில் ஆப்கான் உள்விவகாரங்கள் பேச்சுவார்த்தை.

சுனில் கடாடே அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) தோஹாவில், சமீபத்தில், தங்களுக்குள் தீவிரமான சண்டையில் ஈடுபட்டுவரும் எதிரிகளுக்கிடையே முடிவடைந்த அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து, அதிக பாதிப்புகளை சந்தித்துள்ள ஆப்கானிஸ்தானில் அமைதி திரும்பும் என்று நம்புவதற்கு, இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆப்கானிஸ்தானின் அரசியல்வாதிகள் மற்றும் தாலிபான் பிரதிநிதிகளுக்கு இடையே கத்தாரில் நடைபெற்ற இரண்டு நாள் சந்திப்பைத் தொடர்ந்து, 18 வருடங்களாக நடைபெற்று வரும் போருக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, ஆப்கானிஸ்தான் அமைதியை நோக்கி ஒருபடி முன்னேறியுள்ளது போல் தோன்றுகிறது. தோஹா பேச்சுவார்த்தைக்குப் பிறகு விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில், நாட்டு மக்களின் கண்ணியத்தை மதிப்பது, அவர்களது வாழ்வு மற்றும் சொத்துக்களைப் பாதுகாப்பது, உயிர்ச் சேதத்தை முற்றிலுமாகத் தடுப்பது ஆகியவற்றுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கத்தார் நாட்டின் தலைநகரில், ஜெர்மனியும், கத்தாரும் ஏற்பாடு செய்திருந்த, ஆப்கான் உள்விவகாரங்கள் குறித்த பேச்சுவார்த்தையில், 70 அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், மகளிர், தாலிபான் பிரத...

இந்திய உதவியுடன் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம் - இலங்கையில் துவக்கம்.

(ஐடி.எஸ்.ஏ ஆய்வாளர், டாக்டர். குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) இலங்கை அரசு வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் மாதிரி கிராமத் திட்டத்தின் கீழ், இந்திய அரசின் உதவியுடன் கம்பாஹா மாவட்டத்தில் கட்டப்பட்ட முதல் மாதிரி கிராமம், இம்மாதம் ஆறாம் தேதி திறந்து வைக்கப்பட்டது. துவக்க விழாவிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்பு நிகழ்ச்சியில், நிறைவடைந்த வீடுகள் பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டன. இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சர் திரு. சஜித் பிரேமதாசா, முன்னாள் இலங்கை அதிபர் திருமதி. சந்திரிகா பண்டாரநாயகே குமாரதுங்கா மற்றும் இந்தியத் தூதரக உயர் ஆணையர் டாக்டர். ஷில்பக் ஆம்புலே மற்றும் பல அரசியல்வாதிகளும் உயர் அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்திய அரசு, இலங்கையின் வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் கலாச்சார விவகாரங்களுக்கான அமைச்சகத்துடன் இணைந்து, 120 கோடி இலங்கை ரூபாய்க்கான நிதி உதவியுடன், இலங்கை முழுவதும் 2400 வீடுகளைக் கொண்ட 100 மாதிரி கிராமங்களைக் கட்ட...