புதிய பிரிட்டன் பிரதமரும் பிரெக்ஸிட்டுக்கான வழிகளும்

(ஐரோப்பிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா சர்மா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)
ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான பிரெக்ஸிட் என அழைக்கப்படும் விவகாரத்தின் மீது, 2016 ஆம் ஆண்டில் வாக்கெடுப்பு நடந்த சமயம் தொட்டே, பிரிட்டிஷ் அரசியலில் கொந்தளிப்பான சூழல் நிலவி வந்துள்ளது. தமது திட்டத்திற்கு இணங்க, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒப்புதல் பெறுவதில் தோல்வியுற்ற தெரெஸா மே அவர்கள், தனது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களே ஆதரவை விலக்கிக் கொண்ட நிலையில், இம்மாதம் 4 ஆம் தேதி பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கன்சர்வேடிவ் கட்சித் தலைமைக்கான போட்டியில், வெளியுறவுத்துறை செயலர் ஜெரீமி ஹண்ட் அவர்களைவிட, 40,000 வாக்குகள் அதிகம் பெற்று, போரிஸ் ஜான்சன் அவர்கள் வெற்றி பெற்றார். அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் பிரெக்ஸிட் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு இலக்கு நிர்ணயித்துள்ளதாகத் தெரிவித்த போரிஸ் ஜான்சன் அவர்கள், நாட்டை ஒன்றுபடுத்தி, லேபர் கட்சித் தலைவர் ஜெரீமி கோர்பின் அவர்களைத் தோற்கடிப்பதே தனது இலக்கு என்று குறிப்பிட்டார். நவீன பிரிட்டனுக்கான அமைச்சரவையைத் தாம் தோற்றுவிக்கவுள்ளதாகவும், அதில் பெண்களும் சிறுபான்மை இனத்தவரும் முக்கியப்பங்கு வகிப்பர் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.