சர்ச்சைக்குள்ளாகும் ஜெனரல் பாஜ்வாவின் பணிக்கால நீட்டிப்பு.
(அரசியல் விமரிசகர் அஷோக் ஹாண்டூவின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ்.) 59 வயதான பாகிஸ்தானின் ராணுவத் தளபதி ஜெனரல் குவாமர் ஜாவேத் பாஜ்வா அவர்கள், நவம்பர் 28 அன்று நள்ளிரவுடன் ஓய்வு பெற்றிருக்க வேண்டிய நிலையில், அவருக்கு 3 ஆண்டுகள் பணி நீட்டிப்பு வழங்க, ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதி, பிரதமர் இம்ரான் கான் வெளியிட்டிருந்த அறிக்கை செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. அதே நேரத்தில், நிபந்தனைகளுடனான 6 மாத பணி நீட்டிப்பையும் அனுமதித்துள்ளது. அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இது குறித்த சட்ட மசோதா நிறைவேற்றப்படவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. இந்த விவகாரம் நாடு முழுவதும் அனல் பறக்கும் விவாதங்களையும் உச்ச நீதி மன்றத்தில் ஒரு சட்டப் போராட்டத்தையும் துவக்கி வைத்தது. தலைமை நீதிபதி ஆசிஃப் சயீத் கோஸா தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற அமர்வு, சட்ட மற்றும் நிர்வாக அடிப்படையில் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளது. மொத்த செயல்முறையும் தலைகீழாக இருப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்ததால், பிரதமர் இம்ரான் கான் மற்றும் அதிபர் ஆரிஃப் அல்வி ஆகிய இருவருக்குமே பெரும் தர்மசங்கடம் ஏற...