Posts

Showing posts from January, 2020

பிரேசில் அதிபரின் இந்திய வருகையால் வலுவாகும் உறவு

தில்லி சமூக அறிவியல் நிறுவனத்தின் இயக்குனர் முனைவர் ஆஷ் நாராயன் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் உலகமெனும் சமுத்திரத்தில் உலவும் இரண்டு திமிங்கிலங்கள் என இந்தியாவையும், பிரேசிலையும் கூறலாம். சீனாவை தவிர, உலகில் வல்லரசுகளாக உயரக்கூடிய திறம் படைத்த நாடுகள் என இந்தியாவையும் பிரேசிலையும் கூற முடியும். ஆனால் சிறிது காலத்திற்கு முன் வரை இந்தியா, குறைவான வளர்ச்சி விகிதம் மற்றும் வறுமைக்கு எப்படி பெயர் போனதாக இருந்ததோ அது போல பிரேசிலானது உயர் பண வீக்கம் மற்றும் கடனுக்கு பெயர் பெற்றிருந்தது. உலகின் பெரும் ஜன நாயக நாடாக இந்தியா திகழ்ந்தாலும் கூட மேற்கானது நமது நாட்டை பாம்பு பிடாரர்கள் மற்றும் விசித்திரமான சாமியார்கள் வசிக்கும் நிலமாகத்தான் நினைத்தனர். பிரேசில் ஒன்றும் பெரிதாக மதிக்கபடவேண்டிய நாடல்ல, அது நாளைய நாடாகும். எப்போதுமே அவ்வாறுதான் இருக்கும் என ஃபிரான்சின் சார்ல்ஸ் டி கௌவுல் பிரேசிலைப் பற்றி அலட்சியமாக கூறியிருக்கிறார். இன்றோ, இந்தியாவும், பிரேசிலும் சாதாரண நிலையில் இருந்து உலகின் முண்ணனி நாடுகளாக மாறியுள்ளன. கடந்த பத்தாண்டுகளில் இன்னாடுகளின் வெளியுறவு கொள்கை நிலைப்ப...

இந்திய அரசியல் சாசனம் : தேசத்தின் உச்சபட்ச சட்டம்

பேராசிரியர் பல்வீர் அரோரா அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி மூன்றாண்டுகள் கடும் உழைப்பிற்குப் பிறகு நடைமுறைக்கு வந்த இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஆயுட்காலம் நீண்டதாக இருக்கும் என்று சில ஆய்வாளர்கள் அன்றே கணித்திருந்தனர். இன்றும் இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உறுதியான அடித்தளமாக இது விளங்குவது, அறிவும் தொலைநோக்குப் பார்வையும் கொண்டு இதை உருவாக்கியவர்களுக்கு ஒரு மிகப்பெரிய அஞ்சலியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் கலங்கரை விளக்கமாகத் திகழ்வது இந்திய அரசியலமைப்புச்சட்டம். எழுபது ஆண்டுகளுக்குப் பிறகும் இதன் அடிப்படைக் கட்டமைப்பு அப்படியே பாதுகாக்கப்படுகிறது. எண்ணிலடங்கா திருத்தங்களுக்குப் பிறகும் அதன் முகவுரையில் பட்டியலிடப்பட்டுள்ள கொள்கைகளே இன்றளவும் ஒரு அதன் மீதான நம்பிக்கைக்கு ஒரு உந்து சக்தியாகவுள்ளது. ”இந்தியக் குடிமக்களாகிய நாம்” எனத் தொடங்கும் அந்த முகவுரையுடன், நீதி, சுதந்தரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கொள்கைகளின் அடிப்படையில் உருவான இறையாண்மை கொண்ட, மதச்சார்பற்ற, ஜனநாயக குடியரசு நாட்டின் உருவாக்கத்தை உலகத்த...

நைஜர் மற்றும் துனிசியாவுடன் உறவுகளை ஆழப்படுத்தும் இந்தியா

பத்திரிகையாளர் வினித்வாஹி அவர்களின் கட்டுரையின் தமிழாக்கம் ராஜ்குமார் பாலா. ஆப்பிரிக்க நாடுகளில் அதிக கவனம் செலுத்துவதற்கும் அவர்களுடன் நெருக்கமான ராஜதந்திர மற்றும் பொருளாதார உறவுகளை வளர்ப்பதற்கும் ஏதுவான ஒரு முயற்சியாக, இந்திய வெளிவிவகார அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்தவார தொடக்கத்தில் நைஜர் மற்றும் துனிசியாவிற்கு பயணம் மேற்கொண்டார். ஐ.நா.பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினர்களாக, ஐ.நா சபையில் இந்தியாவுக்கு உதவி செய்ததிலிருந்து, இந்த ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது. இதை நிரூபிப்பது போல், வெளியுறவு அமைச்சராக பதவியேற்றுக் கொண்ட பிறகு எஸ். ஜெய்சங்கர் ஆப்பிரிக்காவுக்கு முதல் பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்.  நைஜரின் நியாமிக்கு சென்ற ​​டாக்டர் ஜெய்சங்கர், நைஜர் அதிபர் முகமது இசாவ்ஃபவ் (Mahamadou Issoufou) அவர்களை சந்தித்தார். இருதலைவர்களும் கூட்டாக மகாத்மா காந்தி சர்வ தேசமாநாட்டு மையத்தை திறந்து வைத்தனர். தற்போது அண்ணல் காந்தியின் 150 ஆவது பிறந்தநாள் அனுசரிக்கப்பட்டு வருவதை நினைவு கூரும் விதமாக ஆப்பிரிக்காவில் இந்தியா நிறுவிய முதல்மையம் ...

மேற்கத்திய நாடுகளுடனான அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து ஈரான் விலகுமா?

சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு பிரிவின் மூத்த ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி ஈரானிய ஜெனரல் காசிம் சொலைமானி அமெரிக்காவால் கொல்லப்பட்டதையடுத்து நிகழ்ந்த நிகழ்வுகளின் தொடர்ச்சியாக, ஐரோப்பிய ஒன்றியம் ஐ நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் ஈரானின் அணு ஆயுதங்கள் குறித்த விவகாரத்தை எழுப்பினால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. அவ்வாறு நிகழ்ந்தால், அது அந்தப் பிராந்தியத்துக்கு மட்டுமல்லாது, சர்வ தேச அளவிலும் அணு ஆயுதத் தடை என்ற நிலைப்பாட்டுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். சொலைமானி கொலையால் ஏற்பட்ட மற்ற அனைத்துத் தாக்கங்களையும் ஒன்றுமில்லாமல் செய்யக்கூடிய ஆபத்தான சூழல் இதனால் உருவாகும். ஈரான் அணு ஆயுத ஒப்பந்தம் என்று அறியப்படும் விரிவான கூட்டுச் செயல் திட்டம்(JCPOA) என்ற ஒப்பந்தம் கூறும் விதிமுறைகளை பின்பற்ற மாட்டோம் என்று அந்த நாடு அறிவித்திருக்கிறது. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள பிரிட்டன், ஃப்ரான்சு, ஜெர்மனி ஆகிய மூன்று ஐரோப்பிய நாடுகளால் பேணப்பட்டுவரு...

அந்நிய நேரடி முதலீட்டில் முதல் 10 இடத்துக்குள் மீண்டும் இடம் பெற்றுள்ள இந்தியா.

(பேராசிரியர் டாக்டர் லேகா சக்ரபோர்த்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் லட்சுமண குமார்.) 2019 ஆம் ஆண்டில் இந்தியா 16 சதவிகிதம் அதிகமாக அந்நிய நேரடி முதலீட்டை பெற்று அதிக அந்நிய முதலீட்டை பெரும் முதல் 10 நாடுகளின் பட்டியலில் தனது இடத்தை தக்க வைத்து கொண்டுள்ளது. கடந்த ஆண்டில் இந்தியா பெற்ற அந்நிய நேரடி முதலீடு 4200 கோடி டாலரிலிருந்து 4900 கோடி டாலராக அதிகரித்துள்ளது என ஐ. நா அமைப்பான UNITED NATIONS CONFERENCE ON TRADE AND DEVELOPMENT வெளியிட்டுள்ள 'முதலீடுகளின் போக்கு கண்காணிப்பு' என்ற தலைப்பிலான அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டில் உலகளாவிய நேரடி அந்நிய முதலீடு சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. 14,100 ஆயிரம் கோடி அமெரிக்கா டாலராக இருந்த நேரடி அந்நிய முதலீட்டின் அளவு 1 சதவிகிதம் சரிந்து 13,900 ஆயிரம் கோடி டாலராக குறைந்தது. அமெரிக்காவும், சீனாவும் நேரடி அந்நிய முதலீட்டை குறைந்த அளவே பெற்ற போதும் இந்தியா முதல் பத்து இடங்களில் இடம் பெற்றுள்ளது. தெற்காசிய பகுதியில் நேரடி அந்நிய முதலீடு 10 சதவிகிதம் அதிகரித்து 6000 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இதில் இந்தியாவின...

“ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கையின், தலைவர், இந்தியாவுடனான வலுவான உறவுகளை மீண்டும் வலியுறுத்தினார்“

ஐரோப்பிய விவகாரங்களின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் சங்கமித்ரா ஷர்மாஅவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்ஆ. வெங்கடேசன். 2020ஆம் வருடத்திற்கான ராய்சீனபேச்சுவார்த்தையில் கலந்து கொள்வதற்காக ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு விவகாரங்கள் மற்றும் பாதுகாப்பு கொள்கையின் உயர் பிரதிநிதியான ஜோசப் போரில் பாண்டெலஸ் அவர்கள் சமீபத்தில் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்டார். இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இடையே உள்ள பொது தன்மைகளை மீண்டும் வலியுறுத்துகையில் , பாண்டெலஸ் அவர்கள், உலக வர்த்தக அமைப்பின் தீர்வு செயல்முறை, ஐரோப்பிய நாடுகள் இந்தியா மற்றும் பல தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பிரச்சினையாக உள்ள இந்தவேளையில், விதிகள் அடிப்படையிலான பலதரப்பட்ட உத்தரவுகளை இருதரப்பிலும் பாதுகாக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த தடைகளை உடைப்பதற்காக ஐரோப்பிய ஒன்றியம், திட்டங்களை வகுத்து உள்ளதாக அவர் தெரிவித்தார். இதன் மூலம் இரு தரப்பிற்கும் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் மற்றும் நடைமுறை தீர்வு ஏற்படுத்துவதற்கும் பெரிதும் உதவும். சர்வதேச சமுதாயத்தின் மூலம் ஏற்படும் திருட்டு, மற்றும் கடல் வளங்கள் பாதுகாப்பு போன்றவற்றில் உள்ள அச்...

வெற்றிகரமாக ஏவப்பட்ட ஜி – சாட் 30 செயற்கைக்கோள்

மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி 14 வருடங்களுக்கு முன் ஏவப்பட்ட இன்சாட் – 4ஏ செயற்கைக்கோள் தனது ஆயுட்கால முடிவில், செயல்பாட்டை நிறுத்தவிருக்கும் தருவாயில், தடையில்லாத் தொடர்புச் சேவைகள் தொடர, இம்மாதம் 17 ஆம் தேதி வெற்றிகரமாக ஏவப்பட்ட 41ஆவது தொலைதொடர்புச் செயற்கைக் கோள் ஜிசாட்-30 மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்தியாவில் உள்ள கேபிள் நிறுவனங்கள் தங்கள் நிகழ்ச்சிகளை வெளிநாடுகளில் ஒலி/ஒளிபரப்பு செய்ய இன்சாட் 4 ஏ செயற்கைக்கோளைப் பயன்படுத்தி வந்தன. இந்தச் சேவைகளை மேலும் விரிவுபடுத்தி இன்னும் 15 வருடங்களுக்குத் தொடர இந்த ஜி சாட்- 30 உதவும். ஃப்ரென்ச் கயானாவின் கௌரௌவில் உள்ள ஐரோப்பிய விண்வெளித் தளமான கயானா விண்வெளி மையத்திலிருந்து ஏரியேன்ஸ்பேஸின் ஏரியேன் -5 ராக்கெட்டின் மூலம் ஜி சாட்-30 ஏவப்பட்டது. 1981ஆம் ஆண்டில் இந்தியாவின் முதல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளான ஆப்பிள்-ஐ ஏவிய ஏரியேன்ஸ்பேஸ்-ஆல் செலுத்தப்படும் இந்தியாவின் 24 ஆவது செயற்கைக்கோளாகும் இந்த ஜிசாட்-30. ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவில் தொலைதொடர்புச் சேவைகளை வழ...

மீண்டும் வெளிப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் இடையேயான கூட்டு

கெளசிக் ராய் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி. காஷ்மீர் பிரச்சனை குறித்து விவாதிக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு குழுவில் சீன அரசு கேள்விகள் எழுப்பியது. பாகிஸ்தான் அரசு ஆதரவு அளித்த போதும், பாதுகாப்பு குழுவின் பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவு அளிக்கவில்லை. அரசியல் சட்டப்பிரிவின் 370 பிரிவு நீக்கப்பட்ட பின்னர் மூன்றாவது முறையாக சீன அரசு இந்த பிரச்சனையை ஐக்கிய நாடுகள் சபையில் எடுக்க முயற்ச்சி செய்த குறிப்பிட தக்கது ஆகும். இது இருதரப்பு பிரச்சனை என்றால் இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையில் முறையிடுவதை சீன அரசு தவிர்க்க வேண்டும். பாகிஸ்தான் அரசு உள்நாட்டு பிரச்சனைகளை தவிர்க்கவே இது போன்ற போலியான பிரச்சனைகளை கையிலெடுத்துள்ளது என்று கூறினார் ஐக்கிய நாடுகள் சபையின் இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன். அரசியல் கூட்டப்பிரிவின் 370 பிரிவு ஆகஸ்ட் 5-ம் தேதி நீக்கப்பட்டதோடு அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகள் ஆதரவு அளித்துள்ள நிலையில், தூதரக உறவுகளை பாதித்து வரும் பாகிஸ்தான் அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கத் தக்கது என கூறினார் இந...

ரைசினா பேச்சு வார்த்தை 2020

21 ஆவது நூற்றாண்டின் மூன்றாவது தசாப்தத்தில் நாம் அடி எடுத்துவைக்கும் இந்த தருவாயில், பல சர்வதேச சவால்களும் பெரும் அதிகார மாற்றங்களும் இந்த உலகை எதிர் நோக்கியுள்ளன. பல புதிய சக்திகளின் உருவாக்கத்துடன் பழம்பெரும் ஆளுமை பொருந்திய நாடுகள், சர்வதேச அளவில் தங்களது அதிகாரத்தை இழந்தும் வருகின்றன. வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மாற்றங்கள், அதிகார மாற்றம், அதிகார பரவல் என்ற இரு வகைகளில் ஏற்பட்டு வருகின்றன. சீனாவின் அபரிமிதமான வளர்ச்சி உலகையே ஆட்டி வைத்துள்ளது. உலக அளவில், இந்தியாவும் தனது அசாத்திய வளர்ச்சியை வெளிப்படுத்தியே வருகிறது. பொருளாதார ஈர்ப்பின் சர்வதேச மையமாகவும் அதிகரித்து வரும் பாதுகாப்பு சார்ந்த பதற்றங்களின் மேடையாகவும் சர்வதேச சுற்றுச் சூழல் மாற்றத்தில் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் மையமாகவும் ஆசியா உருவெடுத்துள்ளது. புத்தாக்கம் என்பது தான் எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் துருப்புச்சீட்டாக மாறியுள்ளது. புதிய சிந்தனைகளின் தொகுப்பே புத்தாக்கத்தின் வரலாறு. புதுமைகளைப் புகுத்தத் தவறினால், மறக்கப்படும் அபாயம் உள்ளது. செயலுத்திகளை மேம்படுத்துவதிலும் வெளியுறவுக் கொள்கையிலும் கூட இது...

இந்திய ரஷ்ய உறவுகளை வலுப்படுத்தும் லாவ்ரோவின் பயணம்

மூத்த பத்திரிக்கையாளர் ரஞ்சித் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் ரைசினா பேச்சுவார்த்தையில் பங்கேற்க இந்தியா வந்திருந்தார் ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்கி லாவ்ரோவ். இரு நாடுகளுக்கிடையேயான மிக அருமையான உறவுகளை மறு ஆய்வு செய்ய இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஈரான், லிபியா, சிரியா உள்ளிட்ட தற்போதைய பிராந்திய நிலவரம் குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்ஷங்கர் அவர்களுடன் விரிவான விவாதம் மேற்கொண்டார் லாவ்ரோவ். பிறகு அவர், பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும் சந்தித்து உரையாடினார். சென்ற ஆண்டு பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாகவும் இரு தரப்பு செயலுத்திக் கூட்டாளித்துவத்தின் 20ஆவது ஆண்டு நிறைவடையும் 2020 ஆம் ஆண்டு அந்த முடிவுகளைச் செயல்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் மோதி கூறினார். மத்திய கிழக்கு பகுதியில் வளர்ந்து வரும் பதற்றமான சூழல் குறித்தும் இரு வெளியுறவு அமைச்சர்களும் விவாதித்தனர். இந்த பதற்றம் மேலும் அதிகரித்தால், அதனால் உலக பொருளாதாரம் மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் புவி சார் அரசியலில் அது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தையும் குறித்தும் விவாதிக்க...

ஓமன் - ஒரு சகாப்தத்தின் முடிவு

(பாதுகாப்புத் துறை ஆய்வு மைய ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மி பிரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.) ஓமன் நாட்டை ஐம்பது ஆண்டுகாலத்துக்கு ஆட்சி செய்த அந்நாட்டு மன்னர் கபூஸ் பின் சையித் அல் சையித் ஜனவரி 10 ஆம் தேதி மறைந்தது ஒரு சகாப்தத்தின் முடிவாகக் கருதப்படுகிறது. நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டிருந்த அவரின் மறைவு முக்கியமான இந்த வளைகுடா நாட்டில் ஆட்சி மாற்றத்துக்கு வித்திட்டுள்ளது. உலக அளவில் மதிக்கப்படும் மிகப்பெரிய தலைவராக மன்னர் கபூஸ் விளங்கினார். அந்தப் பிராந்தியத்தின் வலிமை வாய்ந்த நாடுகளான சௌதி அரேபியா மற்றும் ஈரானுடன் போட்டி போட்டுக் கொண்டு ஓமனில் நிலைத்தன்மையும் தனிப்பட்ட வெளியுறவுக் கொள்கையும் கொண்டிருக்க 79 வயதான ஓமன் மன்னர் வித்திட்டார். 1970 ஆம் ஆண்டு இரத்தம் சிந்தாமல் நடந்த புரட்சியில், பழைமைவாத மரபில் ஊறிய தமது தந்தையைப் பதவியிலிருந்து நீக்கிய மன்னர் கபூஸ், தோஃபர் கிளர்ச்சியை ஒடுக்கினார். அடிமைத்தனத்தை ஒழித்தார். ஓமன் நாட்டை நவீனத்துவ பாதைக்கு இட்டுச் சென்றார்; 1996 ஆம் ஆண்டில் எழுத்துவடிவில் முதலாவது அரசியல் சாசனத்தை சமர்ப்பித்தார். அரசியல், வர்த்தகம்...

இலங்கை வெளியுறவு அமைச்சரின் முதல் இந்தியப் பயணம்.

(இட்ஸா ஆய்வாளர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) இலங்கை வெளியுறவு, திறன் வளர்ப்பு மற்றும் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனா அவர்கள், இந்தியாவுக்கு முதல்முறையாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். அவருடன், நால்வர் அடங்கிய உயர்மட்டக் குழுவும் பயணித்தது. கடந்த நவம்பர் மாதம் இலங்கையின் புதிய அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவர்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டதைத் தொடர்ந்து, வெளியுறவு அமைச்சரின் இப்பயணம் அமைந்துள்ளது. இப்பயணத்தின் போது, அமைச்சர் குணவர்தனா அவர்கள், இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜெய்ஷங்கர், திறன் வளர்ப்பு மற்றும் தொழில்முனைவோர் துறை அமைச்சர் திரு மஹேந்திரநாத் பாண்டே, தொழில் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் ஆகியோரை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர், இந்திய வர்த்தக மற்றும் தொழில் கூட்டமைப்பின் கூட்டத்தில் உரையாற்றினார். அறிவியல் மற்றும் சுற்றுச் சூழல் மையம் என்ற பொது ஆர்வ ஆய்வு மையத்திற்கும், புதுதில்லியிள்ள இந்திய மஹாபோதி சமூக அமைப்பிற்கும் விஜயம் செய்தார். இந்திய வெளியுறவு அமைச்சர் ஏற்பாடு செய்த உயர்...

சமூக-பொருளாதார மேம்பாட்டிற்கு அறிவியல் பூர்வமான சாத்தியங்கள்

இந்திய அறிவியல் இதழ் நிர்வாக ஆசிரியர் என்.பத்ரன் நாயர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் அறிவியலானது ஆய்வுகூடங்களின் நாங்கு சுவர்களுக்குள்தான் இருந்து வருவது மரபாக இருப்பினும் கூட, நாட்டை வளர்ச்சி பாதையில் வெகு துரிதமாக கொண்டு செல்வதற்கு உதவும் வகையில் அறிவியலை எவ்வாறு சமூக ரீதியாக பொருத்தும் வகையில் உபயோகமாக்குவது என்பதே தற்போதைய இலக்காகும். சமீபத்தில் நடந்து முடிந்த அறிவியலாளர்களின் மகா கும்ப மேளா என்றழைக்கப்படும் இந்திய அறிவியல் கழகத்தின் 107வது கூட்டத்தில், தேசிய தலைவர்கள், ஆய்வுகூடத்திற்கும், வெளியுலகுக்கும், ஆய்வுகூடங்களின் ஆய்வுகளுக்கும், சுகாதார வசதிகளுக்கும் இடையே நிலவி வரும் இடைவெளி குறைக்கபட்டு, அவை இணைக்கப்படவேண்டும் என்றும், மேலும் அவை மக்கள் சார்புடையதாக திகழ வேண்டும் என்றும் தங்களது உரைகளில் கூறியுள்ளனர். இந்திய அறிவியல் கழகத்தின் இந்த ஆண்டு கூட்டத்திற்கான கருப்பொருள் “ஊரக வளர்ச்சிக்கானஅறிவியலும், தொழில் நுட்பமும்” ஆகும். அரசுக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையேயான பாலமாக தொழில் நுட்பம் விளங்குகிறது. வேகமான வளர்ச்சிக்கும், சரியான வளர்ச்சிக்கும் இடையே ச...

அமெரிக்கா-ஈரான் இடையேயான பதற்றத்தைத் தணிக்க இந்தியா அழைப்பு.

(அமெரிக்க விஷயங்கள் பற்றிய செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ஸ்துதி பேனர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ராஜ்குமார் பாலா.) பாக்தாத் விமானநிலையத்தில், ஈரானின் ராணுவ உயர் அதிகாரிகளில் ஒருவராகத் திகழ்ந்த காசிம் சுலைமானியைக் கொல்ல அமெரிக்க எடுத்த ஒருதரப்பான முடிவு, அந்தப் பிராந்தியத்தில் நிலையற்ற தன்மைக்கு வித்திட்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் ஈரான் மக்களிடையே அமெரிக்காவுக்கு எதிரான பொதுக்கருத்தை ஏற்படுத்தியதோடு, ஈரான் -அமெரிக்கா இடையே பேச்சுவார்த்தைக்கான வாய்ப்புக்கள் குறையவும் வழியமைத்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப் பெறுவது மற்றும் அணுஆயுத நாடாக ஈரான் மாறுவதைத் தடுப்பது ஆகிய அமெரிக்காவின் இரண்டு குறிக்கோள்களுக்கும் இது பாதகமாக அமைந்துள்ளது. எந்தவித முன்னறிவுப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட அமெரிக்காவின் ஒருதரப்பான நடவடிக்கை, வளைகுடாப் பகுதியில் உள்ள அதன் நட்பு நாடுகளுக்கு கவலையைத் தந்துள்ளது. இந்த வளைகுடா நாடுகளின் கப்பல் வழித்தடங்கள், எண்ணெய்க் கட்டமைப்புகள் ஆகியன அண்மை மாதங்களில் தாக்கப்பட்டதால், ஈரானுடனான பதற்றத்தைத் தணிக்க அந்நாடுகள் முயன்ற...

அறிவியல் துணையுடனான ஊரக வளர்ச்சியில் கவனம்.

( மூத்த அறிவியல் விமரிசகர் பிமன் பாசு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - நித்யா வெங்கடேஷ்.) விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தியின் உதவியுடன் ஊரக வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும். இதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தை உயர்த்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. பயிர் மகசூலைப் பெருக்குதல், சந்தைப் படுத்துதல், ஊரக வாழ்வாதாரத்திற்கான மாற்று வழிகளைக் கண்டறிதல் ஆகியவற்றில் ஏற்கெனவே பல புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால்,இவற்றின் பயன்களை முழுமையாக அடைவதில், விவசாயிகளுக்கும் தொழில்நுட்ப நிபுணர்களுக்கும் இடையில் நிலவும் இடைவெளி ஒரு இடையூறாக உள்ளது. எனவே இது நிரப்பப்படவேண்டியது அவசியமாகிறது. குடியரசுத் துணைத்தலைவர் எம் வெங்கையா நாயுடு அவர்கள் இதனை வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நீண்ட காலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், பயிர் மகசூலை அதிகரிக்கவும், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கவும் வழிகளைக் கண்டறியுமாறு அறிவியலாளர்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார். பாரதத்தில் உள்நாட்டு உணவுப் பாதுகாப்பைப் பராமரிக்க வ...

இந்தியாவின் உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கும் சிங்கப்பூர்.

(தென்கிழக்கு மற்றும் கிழக்காசிய விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் ராகுல் மிஸ்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம்- லட்சுமண குமார்) சிங்கப்பூரின் மூத்த அமைச்சரும், சமூகக் கொள்கை ஒருங்கிணைப்பு அமைச்சருமான தர்மன் ஷண்முகரத்தினம் அவர்கள், இந்தியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். தனது பயணத்தின் போது அவர் பிரதமர் நரேந்திர மோதி அவர்களையும், நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களையும் மற்றும் பிற தலைவர்களையும் சந்தித்தார். சிங்கப்பூரின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சைகத்தைச் சேர்ந்த அதிகாரிகளும், பிரதமர் அலுவலக அதிகாரிகளும் அவருடன் வந்தனர். அவர் மஹாராஷ்டிர முதலமைச்சர் திரு உத்தவ் தாக்கரே அவர்களையும் மற்றும் பிற தொழிலதிபர்களையும் மும்பையில் சந்தித்தார். அவரது இப்பயணத்தின்போது, இருநாடுகளுக்கிடையேயான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. டிஜிட்டல் பொருளாதாரத்தில் ஒத்துழைப்பு, உள்கட்டமைப்பு, திறன் வளர்ச்சி மற்றும் இந்தியா - சிங்கப்பூர் விரிவான பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் முதலியன குறித்து இந்தியக் கொள்கை வகுப்பாளர்களுடன...

வளைகுடா பிராந்தியத்தில் அமைதிக்கு அழைப்பு விடுக்கும் இந்தியா.

(ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மேற்காசிய ஆய்வு மையத்தின் பேராசிரியர் பி.கே. குமாரசாமி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.) ஈரான் நாட்டு அல் குட்ஸ் படைத்தளபதி மேஜர் ஜெனரல் காசிம் சுலைமானி அவர்கள், போன வாரம் வெள்ளிக்கிழமை அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வளைகுடா பகுதிகளில் பதட்டம் நிலவி வருகிறது. வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர் அவர்கள், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மது ஜாவித் ஸரீஃப் அவர்களைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, நடைபெற்றுள்ள நிகழ்வுகள் மிகவும் தீவிரமான திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளன என்று குறிப்பிட்டார். நிலவிவரும் பதட்டங்களுக்கு இந்தியாவின் ஆழ்ந்த கவலையை டாக்டர் ஜெய்சங்கர் அவர்கள் வெளிப்படுத்தினார், தொடர்ந்து தொடர்பில் இருப்பதற்கு இருதரப்பும் ஒப்புக் கொண்டுள்ளனர். 19 ஆவது கூட்டு ஆணைய சந்திப்பில் கலந்து கொள்வதற்காக, 15 நாட்களுக்கு முன்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்கள் டெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்பொழுது அவர், ஈரான் நாட்டு அதிபர் ஹஸன் ரூஹானி மற்றும் ஸரீஃப் உள்பட, பல ஈரானிய அதிகாரிகளை சந்தித்தார். இந்த மாதம...

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு புதிய தலைக் குனிவு.

(முன்னாள் இந்தியத் தூதர் அஷோக் சஜ்ஜனார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - லட்சுமண குமார்) கடந்த வெள்ளிக்கிழமையன்று, பாகிஸ்தானில் உள்ள சீக்கியர்களின் மிகவும் புனிதத் தலமானதும், உலகப்புகழ் பெற்ற குருத்வாராவுமான நான்கானா சாஹிப்பில் 400க்கும் அதிகமான பேர் நுழைந்து, சீக்கியர்களுக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்கள் குருத்வாராவைச் சுற்றி வளைத்து கற்களை வீசினார்கள். அந்த கும்பலுக்குத் தலைமை ஏற்றவர்கள் முகமது ஹசான் என்பவரின் குடும்பத்தினர். முகமது ஹாசன் அந்த குருத்வாராவின் பூசாரியின் மகள் ஜக்ஜித் கௌரைக் கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக மதம் மாற்றித் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த ஈனச்செயலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த சீக்கியர்களைப் பழி வாங்கும் நடவடிக்கையாக இந்தத் தாக்குதல் சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது. வீடியோ காட்சி ஒன்றில், அந்தப் புனிதத்தலத்தில் குருத்வாரா இடம் பெற்றிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு குழுமியிருந்த கூட்டம் முழக்கமிட்டதையும், குருத்வாரா நான்கானா சாஹிபின் பெயரை குலாமான் ஏ முஸ்தஃபா என்று மாற்றப்போவதாக அவர்கள் சூளுரைத்ததையும் காண முடிந்தது. வரலாற்றுச் சிற...

பாக்தாதில் அமெரிக்கா ஈரான் இடையில் போர் போன்ற சூழல்

பேராசிரியர் பி.ஆர். குமாரசுவாமி, ஜெ.என்.யு தமிழில், ஸ்ரீபிரியா சம்பத்குமார் அமெரிக்காவிற்கு சரியான செய்தி கிடைத்தது!! பாக்தாதின் மிகவும் பாதுகாக்கப்பட்ட பகுதியான ‘க்ரீன் ஸோன்’ எனப்படும் ‘பச்சை மண்டலத்தில்’ உள்ள அமெரிக்க தூதரகத்தைச் சுற்றி நடந்த சமீபத்திய ஆர்ப்பாட்டங்களின் நிறுத்தத்தை, ஈரான் ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் இவ்வாறுதான் பார்க்கிறார்கள். ஈரான் ஆதரவு கிளர்ச்சிப் படை நடத்திய ஒரு தாக்குதலில், ஒரு அமெரிக்க ஒப்பந்தக்காரர் கொல்லபட்டார், சில அமெரிக்க வீரர்கள் காயமடைந்தனர். இதைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகத்திற்கும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையிலான தொடர்புகள் மோசமாயின. இதைத் தொடர்ந்து, துணை ராணுவப் படைகளின் ஐந்து இடங்களில் தாக்குதல் நடத்த அதிபர் டிரம்ப் கட்டளையிட்டார். இதில், சுமார் 25 பேர் கொல்லப்பட்டனர், 50 பேர் காயமடைந்தனர். இதனால், கோவமடைந்த ஈராகில் உள்ள ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், பாக்தாதில் உள்ள அமெரிக்க தூதரகத்தைத் தாக்கினர். கட்டிடடத்தின் சுவரின் மீது ஏற முயன்றனர். இதையடுத்து, வளாகத்திற்குள் இருந்த அமெரிக்கப் படை வீரர்கள், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர த...

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.

(இட்ஸா தெற்காசிய மையத்தின் மூத்த ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அஷோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.ராமமூர்த்தி.) பாகிஸ்தானின் மூத்த பத்திரிக்கையாளர் சலீம் சஃபி அவர்கள், டெய்லி ஜங் என்ற பத்திரிக்கையில், பாகிஸ்தானில் நிலவும் குழப்பமான சூழ்நிலை குறித்து, புலம்பலுடன் எழுதியுள்ளார். அதில், பாகிஸ்தான் புதிய சமுதாய ஒப்பந்தம் ஒன்றை உடனடியாக உருவாக்கத் தவறினால், பின் எப்போதும் அதனை உருவாக்க இயலாது என்று குறிப்பிட்டுள்ளார். பாகிஸ்தானிலுள்ள நிறுவனங்கள், ஒன்றுக்கொன்று முரண்பாடாக செயல்படுவதோடு, ஒரு நிறுவனம் பாதிப்புக்குள்ளானால் பிற நிறுவனம் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்குத் தங்களுக்குள் விரோத மனப்பான்மையுடன் செயல்படுகின்றன என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதுள்ள சூழலில், பாகிஸ்தானுக்கு உண்மையைக் கண்டறிந்து, தீர்வுகாணும் குழு ஒன்று அவசியம் என்றும், அதன்மூலம், கடந்த காலத்தில் இழைத்த தவறுகளை இனங்கண்டு, களைந்து, புதிய தொலைநோக்குடனான அரசியல் எதிர்காலத்தை நோக்கிப் பாடுபட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்தடுத்து பல நெருக்கடிகளை பாகிஸ்தான் சந்தித்து வரும் நிலையில், இத்தகைய புலம்பல்கள்...