இந்தோ பசிஃபிக் பிராந்தியத்தில் சங்கமிக்கும் இந்திய, நியூஸிலாந்து உறவுகள்.
(ஜேஎன்யூ பேராசிரியர் ஷங்கரி சுந்தரராமன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் –பி. குருமூர்த்தி.) இந்திய, நியூஸிலாந்து உறவுகளைப் பொறுத்தவரை, 2020 ஆம் ஆண்டு நல்ல துவக்கத்துடன் ஆரம்பித்துள்ளது. கடந்த மாதம் மும்பைக்கு நியூஸிலாந்து குடியேற்றத்துறை அமைச்சர் இயன் லீஸ் கேல்லோவே அவர்கள் வந்திருந்தார். தொடர்ந்து, இம்மாதம், நியூஸிலாந்தின் துணைப் பிரதமரும், வெளியுறவு அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் அவர்களும், வர்த்தக அமைச்சர் டேவிட் பார்க்கர் அவர்களும் இந்தியாவுக்குப் பயணம் மேர்கொண்டனர். வர்த்தக அமைச்சருடன் வர்த்தகக் குழு ஒன்றும் பயணித்தது. ஆங்கிலேயரின் ஆதிக்கம், நாடாளுமன்ற முறையிலான நிர்வாகம், காமன்வெல்த் அமைப்புடனான இணைப்பு என, பல அம்சங்களில் இந்தியாவும், நியூசிலாந்தும் பொதுவான வரலாற்றைப் பகிர்கின்றன. இருதரப்பு மற்றும் இந்தோ பசிபிக் பிராந்திய அளவில், பரஸ்பரம் நலனளிக்கும் விஷயங்களில் ஆழ்ந்த புரிதல்களுடனும், நுணுக்கத்துடனும் ஒருமித்த அணுகுமுறையை முன்னெடுத்துச் செல்ல இருநாடுகளும் விழைகின்றன. இதனைக் கருத்தில் கொண்டு தான், நியூஸிலாந்து துணைப் பிரதமர், “இந்தியா 2025 – உறவுகளில் முதலீடு” என்ற ...