Posts

Showing posts from June, 2019

நாடாளுமன்றத்தில் நடந்தவை சென்ற வாரம்

பத்திரிக்கையாளர் வி. மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் பிரதமர் திரு நரேந்திர மோதி, அரசானது இந்தியாவை வளர்ச்சி பாதையில் புது உயரங்களுக்கு இட்டு செல்ல உள்ளதாகவும், ஒரு நாடு- ஒரு தேர்தல் திட்டத்திற்கு எதிர்கட்சிகள் ஒத்துழைக்கவேண்டும் என்றும் கூறினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசு தலைவர் ஆற்றிய உரைக்கு மக்களவையில் நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாததிற்கு பதிலளிக்கையில் அவர் இவ்வாறு கூறினார். நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெற் உதவுமாறு அவர் எதிர் கட்சிகளை கேட்டுக் கொண்டார். இந்தியா தனது முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் வளத்திற்கான எந்த ஒரு வாய்ப்பையும் தவறவிட்டு விடக்கூடாது என்று அவர் கூறினார். நாட்டை எதிர் கொண்டிருக்கும் சவால்களை அரசும், எதிர் கட்சிகளும் இணைந்து செயல்பட்டு சமாளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். வலுவான, பாதுகாப்பான இந்தியாவை உருவாக்க அவர் அழைப்பு விடுத்தார். ஊழல், விவசாயிகள் பிரச்னை, வேலை வாய்ப்பு என்று பல விஷயங்கள் குறித்து பேசிய அவர், நாட்டில் ஊழலுக்கு இடமே இருக்காது என்றும், தனது அரசானது ஊழலுக்கு ...

ஒசாகாவில் பிரிக்ஸ் தலைவர்களின் முறைசாரா சந்திப்பு.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் பதாம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) ஜப்பானில் ஒசாகாவில் நடைபெறும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கிடையே, பிரிக்ஸ் நாடுகளான பிரேஸில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாட்டுத் தலைவர்கள் சந்தித்தனர். பிரதமர் திரு நரேந்திர மோதி, பிரேஸில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ, ரஷ்ய அதிபர் திரு விளடிமிர் புடின், சீன அதிபர் திரு ஷீ ஜின்பிங், தென் ஆப்பிரிக்க அதிபர் திரு சிரில் ராமஃபோசா ஆகியோர், ஜி-20 உச்சிமாநாட்டிற்குத் தலைமை ஏற்றதற்கு ஜப்பானுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். வர்த்தகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைப் படைப்பு, உள்கட்டமைப்பு, பருவ நிலை, அனைவருக்குமான சுகாதார வசதி, வயதானோர் மற்றும் நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட துறைகளுக்கு ஜி-20 உச்சிமாநாட்டில் ஜப்பான் முன்னுரிமை அளித்தமைக்குப் பாராட்டு தெரிவித்தனர். ஸ்திரமடைந்து வரும் உலகப் பொருளாதாரம், நடப்பாண்டு இறுதியிலிருந்து தொடங்கி, அடுத்த 2020 ஆம் ஆண்டிலும் மேலும் வளர்ச்சி பெறும் என்று பிரிக்ஸ் தலைவர்கள் கருதுகின்றனர். இருப்பினும், உலகப் பொருளாதார வளர்ச்சியில் நிச்சயமற்ற தன்மை நில...

இந்திய, அமெரிக்க உறவுகள் – தொடரும் பேச்சுவார்த்தை.

(ஜேஎன்யூ வின் அமெரிக்கக் கல்வி மையத்தின் தலைவர், பேராசிரியர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ அவர்களின் புதுதில்லிப் பயணமும், பிரதமர், வெளியுறவுத் துறை அமைச்சர், மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடனான சந்திப்பும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்குமிடையே, சில முக்கியத் துறைகளில் நிலவிவரும் இருதரப்பு வேறுபாடுகளைக் களைய, இரு நாட்டுத் தலைவர்களின் நேரடிப் பேச்சுவார்த்தை அவசியமாகிறது. வர்த்தகம் மற்றும் கட்டணம், ஈரான் மீது உள்ள தடைகள், இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்கா அளித்த சலுகைகளை விலக்கிக் கொண்டது, இந்திய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு எச்1பி விசா வழங்குவது, வெனிசுவேலா நாட்டுடனான எரியாற்றல் வர்த்தகம், ரஷ்யாவிடமிருந்து ஆயுதக் கொள்முதல் போன்ற துறைகளில், இரு நாடுகளுக்குமிடையே நிலவும் வேறுபாடுகள், இரு நாட்டு உறவுகளில் அழுத்தத்தை உருவாக்கியுள்ளன. ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி-20 உச்சிமாநாடு நடக்க இருக்கிறது. அந்த உச்சிமாநாட்டிற்கிடையே, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அவர்களும...

வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்.

(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோதி அவர்கள், ஏழைகளின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தமது அரசு முன்னுரிமை அளிக்கும் இரட்டைத் திட்டங்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்குழுவில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்துத் தான் அளித்த பதிலில், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கும் மக்களுக்கும் நலன் பயப்பவை எவை என்பது குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார். மத்திய அரசின் தொலைநோக்கு பற்றி சிறப்பித்துப் பேசிய அவர், பொதுமக்களின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார். வளர்ச்சிப் பாதையிலிருந்து சிறிதளவும் வழுவாமலும், வளர்ச்சித் திட்டங்கள் நீர்த்துப் போகாத வகையிலும் தமது அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவது முக்கியம் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் கட்டமைப்பு நவீனமானதாக விளங்க...

வளர்ச்சி வேகத்தில் கவனம் செலுத்தும் அரசு.

(மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஆதித்யா ராஜ் தாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) தேர்தலில் பெருவாரியான வாக்குகளைப் பெற்று, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியில் அமர்ந்திருக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, வேலைவாய்ப்பைப் பெருக்குவதற்கும், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் முக்கியத்துவம் அளித்து, இந்தியப் பொருளாதாரத்தை வளர்ச்சிப் பாதையில் வீறுநடை போட்டுச் செல்ல, புதிய வீரியத்துடன் செயல்படத் தொடங்கியுள்ளது. வளர்ச்சி வேகத்தை மேலும் ஊக்கப்படுத்த, விரிவான, பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்வதில் தனது அரசு உறுதிப்பாட்டுடன் செயல்படவுள்ளதாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். நிதி ஆயோக், ஏற்பாடு செய்திருந்த பொருளாதார மற்றும் வல்லுநர் குழுக் கூட்டத்தில் பேசிய அவர், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்கு, இந்தியப் பொருளாதாரத்தை போட்டிக்கு சாதகமான வகையில் தயார்ப்படுத்த வேண்டியதன் அவசியம் பற்றி சிறப்பித்துக் கூறினார். ஜூலை மாதம் ஐந்தாம் தேதி, புதிய அரசு தனது முதலாவது முழு நீள நிதி அறிக்கையை சமர்ப்பிக்கவுள்ள நிலையில், வேளாண்மை, தொழிலாள...

எஃப்ஏடிஏஃப் இடம் தொடர்ந்து அவமானப்படும் பாகிஸ்தான்.

(இட்சா தெற்காசிய மையத்தின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக் பெஹூரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) சென்ற வாரம், அமெரிக்காவின் ஆர்லாண்டோ நகரில், எஃப் ஏடிஏஃப் எனப்படும் நிதி நடவடிக்கை பணிக்குழுவின் முழுஅமர்வுக் கூட்டம் ஆறு நாட்களுக்கு நடைபெற்றது. இதில் கடுமையாகக் குற்றம் சாட்டப்பட்ட பாகிஸ்தான், வரும் அக்டோபர் மாதத்திற்குள் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறினால், எஃப்ஏடிஏஃப் இன் சாம்பல் பட்டியலிலிருந்து கருப்புப் பட்டியலுக்கு பின்னோக்கித் தள்ளப்படும் என்று எச்சரிக்கப்பட்டது. பாகிஸ்தான், எஃப்ஏடிஏஃப் மற்றும் ஏபிஜி எனப்படும் ஆசிய-பசிபிக் குழு ஆகியவற்றுடன் இணைந்து, பண மோசடியைக் கட்டுப்படுத்துவதிலும், பயங்கரவாதத்திற்கு அளிக்கப்படும் நிதியை கட்டுப்படுத்திலும் போதிய கவனம் செலுத்தி, அதற்கான செயலுத்தித் திட்டங்களை வலுப்படுத்துவதாக வாக்குறுதி அளித்து, ஓராண்டுகாலம் முடிவடைந்துள்ளது.  இருப்பினும், இவ்விஷயத்தில் பாகிஸ்தானின் நடவடிக்கைகள் மிகவும் மோசமாக உள்ளன. ஒப்புக்கு சில நடவடிக்கைகளை எடுத்ததாகக் காட்டிக் கொண்டதே தவிர, தனது மண்ணிலிருந்து பயங்கரவாதக் குழுக்கள் செயல்பட ...

நாடளுமன்ற நடவடிக்கைகள்

திரு.வி மோகன் ராவ் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராமமூர்த்தி. பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றக்கூடிய வகையில் நிலையான, பாதுகாப்பான, வளர்ச்சியை நோக்கிய அனைவரையும் உள்ளடக்கிய அரசை தரும் வகையில் முன்னேறி வருகின்றது என குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் நாடாளுமன்றத்தில் புகழாரம் சூட்டினார். அனைவருடனும், அனைவருக்குமான வளர்ச்சி, அனைவரின் நம்பிக்கையுடன் என்னும் கொள்கையை நோக்கி இப்பயணம் தொடர்கிறது என்றார் அவர். மக்களவை, மாநிலங்களவை கூட்டு கூட்டத்தில் உரையாற்றிய திரு ராம் நாத் கோவிந்த் மக்களின் துயர் துடைக்கவும் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தவும் ஆட்சிக்கு வந்த முதல் நாளில் இருந்து இந்த அரசு உறுதி பூண்டுள்ளது என்றார் குடியரசு தலைவர். முதல் ஐந்தாண்டுகளில் இந்த அரசின் சாதனைகளை பார்த்து மக்கள் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு இந்த அரசிற்கு வெற்றியை தந்துள்ளனர். 17-வது நாடாளுமன்றத்திற்கு, பாதிக்கும் மேல் முதல் தடவை உறுப்பினர்களும் அதிக எண்ணிக்கையில் மகளிரும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சிக்குறிய செய்தியாகும். ...

சமநிலையில் இந்திய-அமெரிக்க இருதரப்பு உறவுகள்.

(மூத்த பொருளாதார ஆய்வாளர் சத்யஜித் மொஹாந்தி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) நரேந்திர மோதி அவர்கள், இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்ற சில நாட்களிலேயே, அமெரிக்க அரசு, இந்தியாவிற்கு இதுகாறும் அளித்த வந்த, ஜிஎஸ்பி எனப்படும் பொது விருப்ப அமைப்பு வர்த்தக சலுகைகளைத் திரும்பப் பெற்றுள்ளது. தவிர, அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் 28 பொருட்களுக்குக் கட்டணங்களை உயர்த்துவது என்ற முடிவையும் எடுத்துள்ளது. இது தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. இருப்பினும், செயலுத்திக் கூட்டாளித்துவத்தைப் பொருத்தவரை, இருதரப்பும் ஒரே மாதிரியான எண்ணங்களை கொண்டுள்ளன. ஜப்பான் நாட்டில் நடைபெறவிருக்கும் ஒசாகா ஜி 20 உச்சி மாநாட்டிற்கு முன்பாக, அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் பாம்பியோ அவர்கள், இம்மாதம் 25 ஆம் தேதியில் இருந்து 27ஆம் தேதி வரை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள உள்ளார். இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்ற பிறகு, அமெரிக்காவுடன் ஏற்படுத்தப்படும் முதல் உயர் அளவிலான சந்திப்பாகும் இது. இப்பயணத்தின் போது அவர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத...

பாரசீக வளைகுடா பகுதிகளில் ராணுவம் குவிப்பு.

(மேற்கு ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முஹம்மத் முடாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன். ) ஓமன் வளைகுடா பகுதியில், சென்ற வாரம், கச்சா எண்ணெய் ஏந்திய இரண்டு டேங்கர் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடா பகுதிக்குப் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்த, அதிகப்படியாக ஆயிரம் துருப்புகளை அனுப்புவதாக அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை அறிவித்தது. ஜேசிபிஓஏ எனப்படும் கூட்டு விரிவான செயல்திட்ட ஒப்பந்தத்தில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் விலகிக் கொள்வதாக அமெரிக்கா அறிவித்ததைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு இடையே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமலாக்கிய அமெரிக்கா, ஈரானிலிருந்து எண்ணெய் இறக்குமதிக்கான விதிவிலக்குகளையும் கடந்த மாதக் கடைசியில் ரத்து செய்தது. மேலும் புதிய தடைகளை விதிக்கப் போவதாக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள் முடிவு செய்துள்ளார். தடை செய்யப்பட்ட ஈரான் தொழிற்சாலைகளுடன் தொழில் புரியும் நிறுவனங்கள் மீதும் மற்றும் தனிப்பட்ட நபர்கள் மீதும் இரண்டாம் நிலை தடைகள் விதிக்கப்பட...

பாகிஸ்தானில் அரசுக்கு எதிரான குரல் ஒடுக்கம்.

(பாகிஸ்தான் விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தான் தற்போது அரசியல் கொந்தளிப்பை சந்தித்து வருகிறது. பாகிஸ்தான் தெஹ்ரீக் ஏ இன்சாஃப் ( PTI) கட்சியின் தலைமையிலான அரசாங்கம், அரசாங்கத்திற்கு எதிராகக் குரல் எழுப்புபவர்களை அடக்க முற்பட்டுள்ளது. பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி மற்றும் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் - நவாஸ் கட்சித் தலைவர் அம்சா ஷபாஸ் ஆகியோரைக் கைது செய்ததன் மூலமும், பஷ்டூன் டஹாஃபுஸ் இயக்கம் (PTM) போன்ற குழுக்களை ஒடுக்கியதன் மூலமும், செயலுத்தி ரீதியில், அரசுக்கு எதிரான குரல் நசுக்கப்பட்டு வருகிறது. தன்னிச்சையாக நாட்டைவிட்டு வெளியேறிய பாகிஸ்தான் அரசியல்வாதியும், எம் க்யூ எம் எனப்படும் முத்தாஹிதா குவாமி இயக்கத்தின் தலைவருமான அல்டாப் உசைன் அவர்களை பிரிட்டிஷ் அதிகாரிகள் கைது செய்ததன் பின்னணியில், பாகிஸ்தான் அரசின் கை உள்ளது போல் தோன்றுகிறது. விமரிசனங்கள் எங்கிருந்து வந்தாலும் அவற்றைத் தடுத்து நிறுத்த, பாகிஸ்தான் ராணுவத்தின் ஆணையின் படி, அரசு செயல்படுகின்றது போல் தெரிகிறது. இருப்பினும், எதிர்க் கட்...

 “ ஐந்தாவது சி ஐ சி ஏ உச்சிமாநாடு மற்றும் இந்தியா”

மத்திய ஆசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அக்தர் ஜாபார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன். ஆசியாவில், தொடர்பு மற்றும் நம்பிக்கை மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கான மாநாடு, அதாவது பொதுவாக அழைக்கப்படும் சி ஐ சி ஏ வின் ஐந்தாவது உச்சி மாநாடு சந்திப்பானது, போன வார இறுதியில் தஜிகிஸ்தான் நாட்டில் நடைபெற்றது. 1992 ஆம் ஆண்டு ஐ .நா பாதுகாப்பு சபையில் உரையாற்றும் பொழுது, கஜகஸ்தான் நாட்டின் முதல் அதிபரான Nursultan Nazarbayev அவர்கள் இந்த சி ஐ சி ஏ திட்டத்திற்கு முன்மொழிந்தார், அவரே இந்த சி ஐ சி ஏ திட்டத்திற்கு நிறுவனராகவும் கருதப்படுகிறார். சி ஐ சி ஏ வின் செயலகம் 2006 ஆம் ஆண்டு அஸ்தானாவில் அமைக்கப்பட்டது, அந்த நகரம் தற்பொழுது கஜகஸ்தான் நாட்டின் தலைநகரமான நுர்சுல்தான் ஆகும். சி ஐ சி ஏ வில், ஆசியாவில் இருந்து 30-க்கும் மேற்பட்ட உறுப்பினர் நாடுகள் உள்ளன மற்றும் பலதரப்பட்ட சர்வதேச அமைப்புகளும் இந்த மன்றத்தில் பார்வையாளராக உள்ளன. இதுவரை இந்த அமைப்பிற்கு கஜகஸ்தான், துருக்கி, சீனா , மற்றும் தஜிகிஸ்தான் போன்ற நாடுகள் தலைமை வகித்து வருகின்றது. 2002 ஆம் ஆண்டு Kazakhstan நாட்டின...

வளரும் இந்திய - சீன நல்லுறவுகள்.

(கிழக்காசிய மற்றும் யூரேஷிய விவகாரங்கள் ஆய்வாளர் சனா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு பதவி ஏற்றுள்ளதைத் தொடர்ந்து, இந்தியாவின், சீன கொள்கை தொடர்ந்து சீராக இருக்கும். மாறிவரும் உலக அரசியல் சூழலில், அமெரிக்கா - சீனா வர்த்தகப் போர் தொடரும் இந்த வேளையில், சீனாவுடனான இந்த சீரான நல்லுறவு, இந்தியாவுக்கு நன்மை பயப்பதாக விளங்கும். 2017 ஆம் வருட டோக்லாம் நிலைப்பாட்டிற்குப் பிறகு, இரு நாடுகளும் தங்களது வேறுபாடுகளைக் களைய முக்கியத்துவம் காட்டி வருகின்றன. இந்த அணுகுமுறையின் வெளிப்பாடாக, 2018 ஆம் வருடம் வூஹான் நகரில் முறைசாரா உச்சி மாநாடு நடைபெற்றது. வூஹான் உச்சி மாநாடு மற்றும் முறைசாரா பேச்சுவார்த்தை, பரஸ்பரம் நம்பிக்கையை வளர்க்கும் விதமாக அமைந்தது. சீன - இந்திய உறவுகளில் நேர்மறையான முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரை , சர்வதேச பயங்கரவாதி என்று ஐநா பாதுகாப்பு சபை அறிவித்ததை சீனா ஒப்புக் கொண்டது. தவிர, தற்போது இருநாட்டு உறவுகளை “வூஹான் நட்பு “ அணுகுமுறை வழிநடத்த...

பிரதமரின் கிர்கிஸ்தான் நாட்டுப் பயணம்.

(ரஷ்யா மற்றும் சிஐஎஸ் நாட்டு விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் இந்திராணி தலுக்தார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இரண்டாம் முறையாகப் பதவியேற்ற பின்னர், பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இம்மாதம் 13 மற்றும் 14 ஆம் தேதிகளில், கிர்கிஸ்தான் தலைநகரான பிஷ்கேக்குப் பயணம் மேற்கொண்டார். அந்நாட்டு அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் அவர்களுடன் இருதரப்பு சந்திப்பு நிகழ்த்தினார். அவரது இந்த சந்திப்பு, சிறப்புமிக்க, செயலுத்தி ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக விளங்கியது. பிரதமர் திரு நரேந்திர மோதியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற உலகநாடுகளின் தலைவர்களுள், கிர்கிஸ்தான் அதிபர் சூரோன்பே ஜீன்பெகோவ் அவர்களும் அடங்குவார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின்போது, முதலாவது இந்தியா – கிர்கிஸ்தான் வர்த்தக மன்றத்தின் சந்திப்பில் கூட்டாக இருதலைவர்களும் உரையாற்றினர். அது மிகவும் முக்கியமானதகாவும், வெற்றிகரமானதாகவும் போற்றப்பட்டது. இந்தியாவும், கிர்கிஸ்தானும் இருமுறை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தம் மற்றும் இருதரப்பு முதலீட்டுப் பிரகடனம் ஆகியவற்றுக்கு முழுவடிவம் கொடுக்கி...

பாரிஸில் நடைபெறவுள்ள ஜி-ஏழு உச்சி மாநாட்டிற்கு இந்தியாவிற்கு அழைப்பு.

(   முன்னாள் இந்திய தூதரக அதிகாரி,  தூதர் அஷோக் சஜான்ஹர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - சத்யா அசோகன்) தெற்கு ஃப்ரான்ஸிலுள்ள பியாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் மாதம் 24-லிருந்து 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ள 45 ஆவது ஜி ஏழு உச்சி மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோதி கலந்து கொள்கிறார்.  ஆஸ்திரேலியா, சிலி மற்றும் தென் ஆப்ரிக்காவுடன் இந்தியாவையும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளுமாறு ஃப்ரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரோன் அவர்கள் அழைப்பு விடுத்துள்ளார்.  ஜி ஏழு அமைப்பானது, தனது உச்சி மாநாடுகளின்போது, தற்போது உலகத்தை அழுத்தி கொண்டிருக்கும் சவால்களை எதிர்கொள்வது குறித்து வெளிப்படையான விவாதங்கள் நிகழ்த்துவதற்கு உலகின் முக்கியத் தலைவர்களை அழைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது. குறிப்பிடத்தக்க பொருளாதாரம் மற்றும் அரசியல் சக்தியாக இந்தியா உலக அரங்கில் மேலும் மேலும் உயர்ந்து வருவதையும், இந்தியாவுக்கும், ஃப்ரான்சுக்கும் இடையேயான செயல் தந்திர கூட்டாளித்துவம் வலுப்பட்டு விரிவடைந்து வருவதையும், பிரதமர் திரு மோதிக்கும் ஃப்ரான்ஸ் அதிபர் திரு மேக்ரோனுக்கும் இடையேயான தனிப்பட்ட புரிதலையும்...

ஆப்பிரிக்க நாடுகளுடனான நட்புறவை நாடும் இந்தியா.

(பத்திரிக்கையாளர் வினித் வாஹி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாகப் பதவியேற்றவுடனேயே, வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் அவர்கள் நைஜீரியாவுக்கு மூன்றுநாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இது, ஆப்பிரிக்க நாடுகளுடனான நட்புறவை இந்தியா நாடுவதை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. முரளீதரன் அவர்கள், நைஜீரியாவில் ஜனநாயக தினக் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டதோடு, அந்நாட்டு அதிபர் முகம்மது புஹாரி, துணை அதிபர் யேமி ஓசின்பாஜோ ஆகியோரையும், தென் ஆப்பிரிக்கா, நைஜர், எதியோபியா மற்றும் எகிப்து நாடுகளிலிருந்து கொண்டாட்டங்களில் பங்கேற்ற வெளியுறவுத்துறை அமைச்சர்கள் ஆகியோரையும் சந்தித்தார். ஆப்பிரிக்க நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள விரிவான, நெருக்கமான உறவைப் பிரதிபலிப்பதாக, வெளியுறவுத்துறை இணையமைச்சரின் ஆப்பிரிக்கப் பயணம் அமைந்துள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. 2007 ஆம் ஆண்டு, இந்தியா-நைஜீரியா இடையிலான உறவுகள் செயலுத்திக் கூட்டாளித்துவ நிலைக்கு உயர்த்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, இருநாடுகளுக்குமிடையில் வலுவான பாதுகாப்புக் கூ...

பொருளாதார சரிவிற்கிடையே, ஊழலுக்கு எதிரான பாகிஸ்தானின் போராட்டம்.

(ஆல் இண்டியா ரேடியோ செயலுத்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) பாகிஸ்தானின் தேசிய பொறுப்பேற்புப் பணியகமான என்.ஏ.பி, பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிஃப் அலி ஸர்தாரியை, போலியான வங்கிக் கணக்குகளைக் கொண்டுள்ள குற்றத்திற்காக கைது செய்துள்ளது. பி.பி.பி. எனப்படும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரும், பிலாவலின் தந்தையுமான திரு.ஸர்தாரி, பாகிஸ்தான் சட்டசபையில் உறுப்பினராகவும் உள்ளார். ஸர்தாரி மற்றும் அவரது சகோதரி ஃபர்யால் தால்புரின் முன் ஜாமீனிற்கு இஸ்லாமாபாத் உயர் நீதி மன்றம் மறுப்பு தெரிவித்ததையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். 2015 ஆம் ஆண்டு, பாகிஸ்தானின் மத்திய புலனாய்வு ஏஜன்சியான எஃப்.ஐ.ஏ, தனக்குக் கிடைத்த ஒரு தகவலின் அடிப்படையில், சம்மிட் வங்கி, சிந்த் வங்கி மற்றும் யு.பி.எல் இல்,29 போலிக் கணக்குகள் மூலம் நடத்தப்பட்ட போலி பணப் பரிமாற்றங்கள் மற்றும் போலி கணக்குகள் தொடர்பான விசாரணையைத் துவக்கியது. துவக்கத்தில், திரு. ஸர்தாரி மற்றும் அவரது சகோதரி உட்பட ஏழு நபர்கள், இந்தப் போலி கணக்குகளை, சந்தேகத்திற்கு இடமளிக்கும் பணப் பரிமாற்றங்களுக்குப் ...

ஜி-20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டம்.

(பத்திரிக்கையாளர் மனோஹர் மனோஜ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) ஜி-20 நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் இரண்டு நாள் சந்திப்பு, ஜப்பானின் ஃபுகௌகாவில் நடைபெற்றது. தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடியின் பின்னணியில் இந்த சந்திப்பு நடந்துள்ளது. ஜி-20 உறுப்பினர் நாடுகளின் பல்வேறு வர்த்தக மற்றும் வரிவகைப் பிரச்சனைகளைப் பற்றி கருத்து பரிமாறப்பட்டு சுட்டிக்காட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், இம்மாத இறுதியில் ஒசாகாவில் நடக்கவிருக்கும் ஜி-20 உச்சிமாநாட்டிற்கான ஆரம்பக் கட்டப் பணிகளும் இந்த சந்திப்பில் துவக்கப்பட்டன. மிகப் பெரிய பொருளாதார வல்லரசுகளான அமெரிக்கா மற்றும் சீனா பின்பற்றும் பாதுகாப்புவாதக் கொள்கையை மறு பரிசீலனை செய்வதற்கான வழிவகைகளையும் இந்த சந்திப்பு அளித்திருக்கின்றது. இதைத் தவிர, ஃபேஸ்புக், கூகிள் போன்ற பன்னாட்டு மற்றும் டிஜிட்டல் நிறுவனங்களுக்கான புதிய வரிக் கொள்கைகளை உருவாக்குவதன் அவசியத்தையும் இந்த சந்திப்பு வலியுறுத்தியது. உலகெங்கும் அதிகரித்துக் கொண்டிருக்கும் பண மோசடி, வங்கி முறைகேடுகள், நிதிக் குற்றங்கள், பொருளாதாரக் குற்ற...

அண்டைநாடுகளுக்கு முதலிடம் மற்றும் சாகர் கொள்கை – மீண்டும்வலியுறுத்தும் இந்தியா.

(இட்சா ஆய்வாளர் டாக்டர் குல்பின் சுல்தானா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) கடந்த வார இறுதியில் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் மாலத்தீவுகள் மற்றும் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டார். இரண்டாவது முறையாக பிரதமாரகப் பதவியேற்றபின் அவர் மேற்கொண்ட முதல் அயல்நாட்டுப் பயணம் ஆகும் இது. இப்பயணம், அண்டைநாடுகளுக்கு முதலிடம் மற்றும் சாகர் எனப்படும் பிராந்திய வளர்ச்சி மற்றும் பாதுகாப்புக்கான கொள்கைக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தைப் பிரதிபலிப்பதாக உள்ளது. 2018 ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம்,இப்ராஹிம் முகம்மது சோலி அவர்கள் மாலத்தீவுகளின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படும் வரை, அந்நாட்டில் நிலவிய அரசியல் இக்கட்டான சூழலின் காரணமாக, அண்டைநாடுகளுக்கு முதலிடம் என்ற கொள்கையை இந்தியா கடைபிடித்தபோதிலும், பிரதமர் மோதி அவர்களால் மாலத்தீவுகளுக்கு தனது முந்தைய ஆட்சியில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இயலவில்லை. எனினும் அவர், அதிபர் சோலி அவர்களின் பதவியேற்பு விழாவில் பங்கு கொள்ள, 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் மாலத்தீவுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். தனது இரண்டாவது ஆட்சியில் முதல் அயல்நாட்டுப் பயணத்திற்கு ...

5ஜி தொழில் நுட்பத்தை வரவேற்கும் இந்தியா

மூத்த பத்திரிக்கையாளர் கே.வி வெங்கடசுப்ரமனியன் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் இந்தியா அடுத்த நூறு நாட்களுக்குள் 5 ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறை அலைபேசி தகவல் தொடர்பு தொழில் நுட்பத்தைப் பரிசோதனை செய்துபார்க்கப்போகிறது. அடுத்த தலைமுறை அலைபேசி இணைய சேவையானது தற்போதிருக்கும் 4 ஜி இணையசேவையை விடவும்,  மிகவும் சீரானதாகவும்,  மிக வேகமாக இணைப்பு கிட்டுவதாகவும், தாமதாமவது மிக குறைவாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்கப்படுகிறது. புது யுக 5 ஜி தொழில்  நுட்பமானது நாட்டில் பெரும்  தாக்கத்தை ஏற்படுத்தும், பரிணாம மற்றும் புரட்சிகரமான சேவைகளை அலைபேசிகளில் அறிமுகப்படுத்தும்.  தற்போது பயன்பாட்டில் இருக்கும் 2 ஜி, 3 ஜி மற்றும் 4 ஜி அலைபேசி இணைய சேவைக்கு 5 ஜி மேலும் வலு சேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மிக அதிக வேகமுடைய ஐந்து ஜி டிஜிட்டல் புரட்சியில் மிக முக்கிய பங்கு வகிக்ககூடும்.  இந்தியாவில் மிகப்பெரிய சமூக மாற்றத்தை கொண்டுவரக்கூடிய ஆற்றல் இந்த தொழில் நுட்பத்திற்குண்டு. ஜூன் 3 ஆம் தேதி பொறுப்பேற்றுகொண்ட இந்திய தொலை தொடர்பு துறை அமைச்சர் ...