பாகிஸ்தானில் குழப்பம்
கெளல் ஜலாலி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் பி இராம மூர்த்தி. ஜம்மு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தான் நாட்டிற்கு இன்னமும் குழப்பம் தீர்ந்தபாடில்லை. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அதிகாரமளிக்கும் 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதிலிருந்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க முயற்சி செய்து வருகிறது. போர் துவங்குவோம் என்று பேசிவந்த பாகிஸ்தான் அரசு மத்திய கிழக்கு நாடுகளிலும், மேற்கு ஆசிய நாடுகளிலும் சரியான ஆதரவு கிடைக்காத நிலையில் தடுமாறி வருகின்றது பாகிஸ்தான் அரசு. இவ்வாறாக எந்த இஸ்லாமிய நாட்டின் ஆதரவும் கிடைக்காத நிலையில், அனைத்து நாடுகளும் காஷ்மீர் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என தெரிவிக்கவே பாகிஸ்தான் அரசு குழப்பத்தில் உள்ளது. துருக்கி மற்றும் மலேசியா நாடுகள் மட்டுமே பாகிஸ்தான் குரலுக்கு செவி சாய்த்த போதிலும் பாகிஸ்தான் ஆதரவு குரலான ஜாகீர் நாயக்கிற்கு எதிராக தடைகளை விதித்த மலேசிய அரசு, கூட்டு காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானிற்கு ஆதரவாக குரல் கொடுக்காதது பாகிஸ்தானை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது, சீனா மற்றும் பாகிஸ்தானின் முதலை கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பாது...