Posts

Showing posts from September, 2019

பாகிஸ்தானின் வெறுப்புப் பிதற்றலுக்கு செவிமடுப்போர் யாருமில்லை.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) ஐ.நா.வின் 74 ஆவது பொதுச்சபையில், காஷ்மீர் விஷயத்தை எழுப்ப முயன்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் முயற்சி படுதோல்வியடைந்தது. ஐ.நா. பொதுச்சபையில் அவர், இந்திய மாநிலமான ஜம்மு - காஷ்மீர் மக்களின் நிலை குறித்து வக்காலத்து வாங்கி வெற்றுரை நிகழ்த்தினார். இருப்பினும், அவரது பேச்சுக்கு யாரும் செவி மடுக்கவில்லை. பின்னர், போர் அச்சுறுத்தலை முன்வைக்க முற்பட்ட அவர், அணு ஆயுதப் பயன்பாடு குறித்தும் எச்சரிக்கை விடுக்கத் துணிந்தார். உலகின் கவனத்தை ஈர்க்க, பாகிஸ்தான் தலைவர்கள் கையாளும் உத்தியாக இது விளங்குகிறது. இம்ரான்கான் அவர்களுக்கு அமெரிக்காவும் எந்த ஆதரவும் அளிக்கவில்லை. மாறாக, காஷ்மீர் மக்களின் நிலைபற்றிப் பேச முற்பட்ட பாகிஸ்தான் பிரதமர், ஏன் உய்கூரில் அல்லல்படும் மக்களின் நிலை பற்றிப் பேசவில்லை என அமெரிக்கா சாடியது. தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான, அமெரிக்காவின் துணைச் செயலர் அலைஸ் வெல்ஸ் அவர்கள், காஷ்மீர் பற்றி இம்ரான்கான் அவர்கள் பேசுவது எவ்விதப் பயனும் அளிக்காது என்று குறிப்பி...

கரீபியன் மற்றும் பஸிஃபிக் தீவுகளுடனான உறவைப் புதுப்பிக்கும் இந்தியா.

(ஆல் இண்டியா ரேடியோ செய்தி ஆய்வாளர் கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.) நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச்சபைக் கூட்டத்துக்கு இடையே, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், கரீபியன் சமுதாயத்தைக் குறிக்கும் கரீகாம் எனப்படும் நாடுகளின் 14 தலைவர்களைச் சந்தித்தது, கரீபியன் தீவுகளில் உள்ள நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவுகளுக்கு ஊக்கம் அளித்துள்ளது. பிரதமரின் இந்த சந்திப்புக்கு, செயிண்ட் லூசியா நாட்டின் பிரதமரும் கரீகாம் நாடுகளின் தற்போதைய தலைவருமான எல்லென் சேஸ்ட்னெட் அவர்கள் கூட்டாகத் தலைமை தாங்கினார். ஏண்டீகுவா மற்றும் பர்பூடா, பார்பீடோஸ், டொமினிகா, ஜமைக்கா, செயிண்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ், செயிண்ட் லூசியா, செயிண்ட் வின்செண்ட் மற்றும் கிரேனடைன்ஸ், ட்ரினிடாட் மற்றும் டொபேகோ ஆகிய நாடுகளின் தலைவர்களும், சூரினாம் நாட்டு துணை அதிபரும், பஹாமாஸ் ,பெலிஸ் கிரெனேடா, ஹயீதி மற்றும் கயானா ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர். இந்த கரீகாம் நாட்டுத் தலைவர்களுடன், பிராந்திய ரீதியிலான சந்திப்பை பிரதமர் நரேந்திர மோதி அவர்கள்...

பருவநிலை மாறுபாடு தான் உண்மையான சவால் –  ஐநா மன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதி மீண்டும் வலியுறுத்தல்.

(இண்டியன் சயின்ஸ் பத்திரிக்கையின் நிர்வாக ஆசிரியர் என். பத்ரன் நாயர் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் ஆர். ராஜ்குமார் பாலா.) சுவீடனைச் சேர்ந்த 16 வயதான சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேடா தன்பெர்கின் உருக்கமான கோரிக்கை நியூயார்க்கில் ஐநா மன்றக்கூட்டத்தில் கூடியிருந்த உலகத் தலைவர்களின் மனதை உலுக்கியது. ”வருங்காலச் சந்ததியினர் அனைவரும் உங்களை எதிர்நோக்கியுள்ளோம். நீங்கள் கடமை தவறினால், நான் உறுதியாக கூறுகிறேன். உங்களை நாங்கள் மன்னிக்கவே மாட்டோம்” என்று அந்த 16 வயதேயான சிறுமி சொன்னார். இன்று மனித வாழ்க்கைக்கு பருவநிலை மாறுபாடு தனிப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. கட்டுக்கடங்காத பருவநிலை மாற்றங்கள் உலகம் முழுமைக்கும் பெரும் அழிவை ஏற்படுத்தும். பின்விளைவுகளை கொண்டுவரும். ஐ நா மன்றத்தில் உலகத் தலைவர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், பருவநிலை மாறுபாடு போன்ற ஒரு மிகத் தீவிரமான சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில், நாம் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் எதுவும் போதாது என்பதை ஒப்புக்கொள்ளவேண்டும் என்றார். மக்களின் பழக்க வழக்கங்களில் மாற்றம் கொண்டு வரும் வகையில் உலகம் தழு...

நலமா மோதி - முன்னெப்போதும் இல்லாத ஒரு நிகழ்வு.

(அமெரிக்காவுக்கான இந்தியாவின் முன்னாள் தூதர் நவ்தேஜ் சர்னா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – தமிழ் பரதன்.) பாரதப் பிரதமர் நரேந்திர மோதி அவர்களின் அமெரிக்கப் பயணத்தில், டெக்ஸாஸ் மாகாணம் ஹியூஸ்டன் நகரில் நடைபெற்ற நலமா மோதி நிகழ்ச்சி பெரும் வெற்றி பெற்றுள்ளது. ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய அமெரிக்கர்கள் பங்கேற்ற அந்நிகழ்வில் மோதி அவர்களுடன், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மேடையை அலங்கரித்தார். இந்திய அமெரிக்க சமூகத்தினரிடையே இதற்கு முன் 2014 இல் நியூயார்க் மாடிசன் சதுக்கத் தோட்டத்திலும், 2015இல் சேன்ஜோஸ்ஸிலும் பாரதப் பிரதமர் உரையாற்றியிருக்கிறார். ஆனால், ஹியூஸ்டன் நிகழ்வில் ட்ரம்ப் அவர்களின் வருகை அதிமுக்கியத்துவம் கொடுத்துள்ளது. வெள்ளை மாளிகை உறுப்பினர்கள், செனட் உறுப்பினர்கள் முதலானவர்களும் இதில் பங்கெடுத்தனர். ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் ஸ்டெனி ஹோயர் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றது, இந்திய அமெரிக்க உறவுகளுக்கு ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என, இருகட்சிகளின் ஆதரவும் உண்டு என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. அதிபர் ட்ரம்ப் அவர்களை வாழ்த்திய பிரதமர் திரு ...

மங்கோலிய அதிபரின் இந்தியப் பயணத்தால் வலுப்பெறும் உறவுகள்.

(காமன்வெல்த் சுதந்திர நாடுகளின் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அத்தார் சஃபரின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - லட்சுமண குமார்.) இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்களின் அழைப்பை ஏற்று, மங்கோலியா அதிபர் கல்ட்மாஜின் பட்டுல்கா இந்தியா வந்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் மங்கோலிய அதிபர் ஒருவர் இந்தியாவிற்கு வருகை தந்திருப்பது இதுவே முதல் முறையாகும். மங்கோலிய அதிபருடன் அரசு அதிகாரிகள் மற்றும் தொழில் தலைவர்கள் அடங்கிய உயர் நிலை பிரதிநிதிக் குழு ஒன்றும் வந்துள்ளது. அதிபர் பட்டுல்கா குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் அவர்களுடன் பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்தார். அதிபரைக் கவுரவிக்கும் வகையில் திரு கோவிந்த் அவர்கள் அவருக்கு விருந்தளித்தார். குடியரசு துணைத்தலைவர் திரு வெங்கைய்யா நாயுடு அவர்களும் அதிபரை சந்தித்தார். பிரதமர் திரு நரேந்திர மோதி, மங்கோலிய அதிபர் பட்டுல்கா உடன் பிரதிநிதிகள் நிலையிலான பேச்சுவார்தைகள் நடத்தினார். இதில் இருதரப்பு, பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டன. திறன் வளர்ச்சியில் இருதரப்பு ஒத்துழைப்பு, பாதுகாப்பு, உள்கட்டமைப்பு, எரிசக்தி, பேரிடர்...

களத்தைப் புரட்டிப் போடும் திறனை நோக்கிப் பயணிக்கும் இந்திய விமானப்படை.

(பாதுகாப்பு ஆய்வாளர் உத்தம்குமார் பிஸ்வாஸ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) இந்திய விமானப்படை (ஐஏஎஃப்), அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில், விண்ணில் ஆதிக்கம் செலுத்தவல்ல, அதிகத் திறன் கொண்ட, முதலாவது ரஃபேல் போர் விமானத்தை பிரெஞ்சு டசால்ட் ஏவியேஷனில் இருந்து பெற உள்ளது பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்சிற்குச் சென்று, முதல் ரஃபேல் ஜெட் விமானத்தை பெற்றுக் கொள்வார். ரஃபேல் விமானங்களை இயக்குவதற்காக மூன்று வெவ்வேறு குழுக்களாக 24 விமானிகளுக்கு அடுத்த ஆண்டு மே மாதம் வரை பயிற்சி அளிக்கப்படும். அந்த காலகட்டதில் ரஃபேல் ஜெட் விமானங்களின் முதல் தொகுதி இந்தியாவுக்கு வந்து சேரும். ரஃபேல் போர் விமானங்களை அவசரமாகக் கொள்முதல் செய்வதற்கான முடிவு மிகவும் தர்க்கரீதியானது. ஏனெனில், காலாவதியான நூற்றுக்கணக்கான ஐ.ஏ.எஃப் மிக் -21, மிக் -23 மற்றும் மிக் -27 போர் விமானங்களை எவ்வாறு மாற்றுவது என்ற கேள்விக்கான விடையை, பல ஆண்டுகளாக, புதுதில்லியில் உள்ள பாதுகாப்பு செயலுத்தி நிபுணர்கள் தேடி வந்தனர். மேலும், கடந்த தசாப்தங்களில் இந்தியாவின் அண்டை நாடுகளில் ஏற்பட்ட மாற்றங்கள் ம...

அமெரிக்கா-இரான் இடையே பதற்றத்தை அதிகரித்த அராம்கோ மீதான தாக்குதல்.

(இட்சா ஆய்வாளர் டாக்டர் லக்ஷ்மிப்ரியா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – மாலதி தமிழ்ச்செல்வன்.) செளதி அரெபியாவின் தமாமுக்கு அருகில் உள்ள அந்நாட்டின் அரசு எண்ணெய் நிறுவனமான அராம்கோவின் மிகப்பெரிய எண்ணெய் ஆலைகள் அமைந்திருக்கும் அப்காய்க், குரெய்ஸ் ஆகிய இடங்களில் அண்மையில் நடைபெற்ற ஆளில்லா விமானத் தாக்குதல், வளைகுடாப் பகுதியில் அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. இதனால், 1991 வளைகுடா போருக்குப் பிறகு, உலக அளவில் எண்ணெய் விலை மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இந்தத் தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக அறிவிக்கப்படவில்லை. இந்தத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றிருக்கும் ஏமனில் இருந்து இயங்கும் ‘அன்சர் அல்லா’ என்ற ஹவுதி குழு, இதுபோன்ற தாக்குதல்கள் செளதியில் அதிகரிக்கும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது, செளதி அரேபியாவை இலக்கு வைத்து நடத்தப்படும் முதல் தாக்குதல் அல்ல; கடந்த மாதம் செளதியின் மற்றுமொரு பிரதான எண்ணெய் வயலான ஷாபா-வை இலக்கு வைத்த ஹவுதிக்கள், ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தினர். இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்று குறிப்பிட்ட...

கூட்டுறவில் புதிய செயலுத்திகளைத் தேடும் இந்தியாவும் ஈரானும்.

(ரஷ்யா மற்றும் மேற்கு ஆசியாவுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மீனா சிங் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – நித்யா பாலாஜி.) ஈரானில் தற்போது செயலுத்தி ரீதியாக, சீர்குலைவில் சிக்கியுள்ள, கவலைக்குரிய, பிராந்திய சூழலின் பின்னணியில், இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பதினாறாவது சுற்று வெளியுறவு அலுவலக ஆலோசனைகள் இந்த வாரம் தெஹ்ரானில் நடந்தது. இந்தியாவின் வெளியுறவு செயலாளர் விஜய் கோகலே அவர்கள் இந்திய தூதுக்குழுவிற்குத் தலைமை தாங்கினார், ஈரான் தரப்பில் அந்நாட்டின் துணை வெளியுறவு அமைச்சர் டாக்டர் சையத் அப்பாஸ் அராச்சி அவர்கள் தலைமை தாங்கினார். ஈரானிய வெளியுறவு அமைச்சர் டாக்டர் ஜவாத் ஸரீஃப் மற்றும் ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா கமேனியின் மூத்த ஆலோசகர் டாக்டர் அலி அக்பர் வெலாயத்தி ஆகியோருடன் விஜய் கோகலே அவர்கள் பேச்சு வார்த்தைகள் நடத்தினார். இரு தரப்பினரும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் மறு ஆய்வு செய்தன. இதில் தற்போதைய இணைப்பு மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டங்கள், ஷாஹித் பெஸ்தி துறைமுகம், சபாஹர் துறைமுகம், இந்தியா, ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தா...

அம்பலமாகும்  பாகிஸ்தானின் இரட்டை நிலைப்பாடு.  

(செய்தி நிபுணர் கௌசிக் ராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதிய ஆய்வுரையின் தமிழாக்கம் இராஜ்குமார் பாலா.) இந்திய மாநிலமான ஜம்மு காஷ்மீர் மீதான, தனது விட்டுக் கொடுக்காத நிலைப்பாடு காரணமாக, பாகிஸ்தான் ஒரு அமைதியற்ற சூழலில் உள்ளது. இந்திய அரசியல் சாசனத்தின் 370 ஆவது பிரிவை திரும்பப் பெற்றது இந்தியாவின் உள்நாட்டு விஷயம் என்று வர்ணித்து அனைத்து உலக நாடுகளும் ஒவ்வொன்றாகப் பாகிஸ்தானை இடித்துரைத்தன. தனக்கு ஆதரவு கோரி பாகிஸ்தான் ஒவ்வொரு இடமாக அலைந்து வருகிறது. ஆனாலும் அதன் நிலைப்பாட்டிற்கு ஆதரவு கிடைப்பதாக இல்லை. அண்மையில் தனியார் தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றுக்குப் பேட்டியளித்த பாகிஸ்தான் பிரதமர் திரு இம்ரான் கான், இந்தியாவுக்கு எதிராக வழக்கமானதொரு போர் ஏற்பட்டால் அதில் பாகிஸ்தான் வெற்றி பெற இயலாது என்று ஒப்புக்கொண்டார். அணுஆயுத அச்சுறுத்தலை வெளிப்படுத்திய அவர், காஷ்மீர் மீது உலக நாடுகளின் கவனம் தேவை என்றார். இந்தியா சேமித்து வைத்துள்ள அணு ஆயுதங்கள் பற்றி உலக நாடுகள் கவனம் செலுத்தத் தவறினால் மிகமோசமான பின்விளைவுகளை அவை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்தார். பாகிஸ்தான் போரை விரும்பவில்லை;...

நிலவளம் குன்றுவதைத் தடுக்க உலக நாடுகள் உறுதிமொழி.

(மூத்த பத்திரிக்கையாளர் கே.வி. வெங்கடசுப்ரமனியன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ.வெங்கடேசன்.) நிலம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வளமாகும். மனித வாழ்க்கைக்குத் தேவையான சுத்தமான குடிநீர் , உணவு, மற்றும் இதர பல சுற்றுச்சூழல் சேவைகளையும் பல்லுயிர் வளத்தையும் அது வழங்கி வருகிறது. பருவநிலைக் கட்டமைப்பிலும் நிலம் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. கடந்த பல பத்தாண்டுகளில், மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக, நிலம் மற்றும் சுத்தமான குடிநீரை, அதிக அளவில் முன் எப்பொழுதும் இல்லாத அளவில் உபயோகித்ததால் நிலவளம் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு போன்றவற்றால் உண்டான அதிக அழுத்தம், நகரமயமாக்கல், காடுகள் அழிப்பு, வறட்சி உள்ளிட்ட அதீதமான வாநிலை நிகழ்வுகள் போன்றவை, இந்த நிலவள சீர்குலைவுக்குக் காரணங்களாக அமைந்துள்ளன. உலகின் பனிக்கட்டி அல்லாத மொத்த நிலப்பரப்பில் 70 சதவிகிதம் மனித நடவடிக்கைகளால் பாதிப்புக்கு உள்ளாகிறது. நிலவள சீர்குலைவும், பாலைவனமாக்கலும் பல நாடுகளுக்கு முக்கிய பொருளாதார, சமூக, மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினையாக இருந்து வருகின்றது. நிலவள சீர்குலைவின் ஒரு வடிவ...

புறக்கணிக்கப்பட்ட ஆஃப்கானிஸ்தான்

தி ஹிந்து நாளிதழின் சிறப்பு நிருபர் கல்லோல் பட்டாச்சார்ஜீ அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் அமெரிக்காவுடனான பேச்சு வார்த்தை என்ற கடினமான பணிக்கு தாலிபான் அமைப்பு, 14 உறுப்பினர் அமைதிப் பேச்சு வார்த்தைக் குழு ஒன்றை அமைத்திருந்தது. ஆஃப்கானிஸ்தான் அரசுக்கும் தாலிபான்களுக்குமான போர் நிகழ்ந்து கொண்டிருக்கும் சமயத்திலேயே இந்தப் பேச்சு வார்த்தைகள் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குரூரமான தாக்குதல் முறைகளைக் கடைபிடித்து, பொதுமக்களைக் குறிவைக்கும் தாலிபான்களுடன் பேச்சு வார்த்தை என்பது எளிதான காரியமாக இருக்கவில்லை. தாலிபான்கள் உட்பட, காபூலின் முக்கிய அரசியல் நீரோட்டத்தின் அனைத்துப்பிரிவினரின் அபிலாஷைகளையும் பூர்த்தி செய்யும் ஒரு பரந்த அரசியல் அமைப்பை உருவாக்குவது இந்தப்பேச்சு வார்த்தையின் நோக்கமாக இருந்தது. 1990களின் இறுதியில் இருந்தது போல சர்வதேச பயங்கரவாத அமைப்புக்களின் கூடாரமாக ஆஃப்கானிஸ்தான் மீண்டும் மாறாமல் இருப்பதும் தாலிபான் அமைப்பின் பயங்கரவாத எதிர்ப்புக்கான உத்தரவாதமும் முக்கியமான அம்சங்களாகக் கருதப்பட்டன. ஆஃப்கன் பகுதியிலிருந்து அமெரிக்கா தனது துருப்ப...

விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பின் ஏழாவது சந்திப்பு.

(பொருளாதாரப் பத்திரிக்கையாளர் மனோஹர் மனோஜ் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) விரிவான பிராந்திய பொருளாதாரக் கூட்டமைப்பான ஆர்.சி.ஈ.பி-யின் சந்திப்பு சமீபத்தில் பேங்காக்கில் நடைபெற்றது. அமெரிக்கா-சீனா இடையிலான வர்த்தகப் போர் மற்றும் ஜப்பான்-தென் கொரியா இடையிலான பொருளாதார முரண்பாடுகள் ஆகியவற்றிற்கு மத்தியில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. கடந்த மாதம் நடந்த ஆர்.சி.ஈ.பி சந்திப்பிற்கு இந்தியா சார்பில் யாரும் செல்லவில்லை. தற்போது நடந்த சந்திப்பில், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல் அவர்கள் கலந்து கொண்டார். இந்த அமைப்பில் உள்ள மற்ற உறுப்பு நாடுகளுடன், பலதரப்பு மற்றும் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை கோயல் அவர்கள் மேற்கொண்டார். உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் துடிப்புமிக்க பங்களிப்பை உறுதி செய்யும் பொருட்டு இந்த சந்திப்பில் இந்தியா பங்கு கொண்டுள்ளது. தென்-கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் பத்து உறுப்பு நாடுகளுடன், இந்தியா, சீனா, ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆர்.சி.ஈ.பி-யில் அங்கம் வகி...

ஐ நா மனித உரிமை கவுன்சிலில் இந்தியாவின் வலுவான பதிலடி

பாகிஸ்தான் விவகாரங்கள் குறித்த ஆய்வாளர் டாக்டர் ஜைனாப் அக்தெர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் நித்யா வெங்கடேஷ் ஐ நா மனித உரிமைகள் கவுன்சிலின் 42 ஆவது கூட்டத்தில் கஷ்மீர் குறித்த தீர்மானத்தைக் கொண்டு வரும் நோக்கில், இதனை ஒரு சர்வதேச விவகாரமாக சித்தரிக்க முயன்ற பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெஹமூத் குரேஷியின் முயற்சி தோல்வியையே தழுவியது. 47 உறுப்பினர் கொண்ட இந்த கவுன்சிலில் 24 நாடுகளின் ஆதரவு தேவைப்பட்ட நிலையில், இது குறித்த அவசர விவாதத்துக்கான கோரிக்கைக்குக் கூட ஆதரவு பெற பாகிஸ்தானால் இயலவில்லை என்பதே உண்மை. விவாதத்துக்கான் கோரிக்கை அந்தக் கூட்டத்தொடரின் போது எப்போது வேண்டுமானாலும் வைக்கப்படலாம் என்ற நிலையில், காஷ்மீர் குறித்த தீர்மான நிறைவேற்றக் கோர செப்டம்பர் 19 இறுதி நாளாகும். இந்த விஷயம் சர்வதேச மன்றத்தில் விவாதிக்கப்பட அவசியமில்லாத ஒன்று என்ற நிலைப்பாடு கொண்ட இந்தியா, ஜெனீவாவுக்கு ஒரு அமைச்சரை அனுப்பவும் தயாராக இல்லை. ஆனால், பாகிஸ்தானின் வாதங்களை மனதைப் புண்படுத்தும் நோக்கில் இட்டுக்கட்டப்பட்ட பொய்க்குற்றச்சாட்டு, என வன்மையாகக் கண்டித்துள்ளது. கஷ்மீரில் மனித உரிமை மீறல...

இந்தியா - நேபாளம்  பெட்ரோலியம் பைப் லைன்: தெற்காசியாவின் முதல் திட்டம் துவக்கப்பட்டது

ரத்தன் சல்தி ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம். தமிழில் லஷ்மண குமார். இந்தியாவும் நேபாளமும் தங்களுக்கிடேயேயான இரு தரப்பு உறவுகளில் மேலும் ஒரு மைல் கல்லை எட்டியுள்ளன. இந்தியாவின் பிஹார் மாநிலத்திலுள்ள மோதிஹாரியிலிருந்து நேபாளத்தின் ஆம்லேக்குஞ்க்கு பெட்ரோலிய பொருட்களை குழாய் மூலம் எடுத்துச் செல்லும் திட்டத்தை இரு நாட்டு பிரதமர்களும் காணொளிக்காட்சி மூலம் கூட்டாக துவக்கி வைத்தனர். எல்லை கடந்த இந்த திட்டம் தெற்காசியாவில் முதல் முறையாக துவக்கப்பட்டுள்ளது. 69 கி.மீ நீளம் கொண்ட இந்த பைப் லைன் திட்டத்தில் 32.7 கி.மீ தூரம் இந்தியாவிலும், 37.2 கி.மீ நேபாளத்திலும் உள்ளன. இரண்டு டன் சுத்தமான பெட்ரோலிய பொருட்களை எடுத்துச் செல்லும் திறன் கொண்ட இந்த திட்டத்தின் மூலம் தடையின்றி வருடந்தோறும் நேபாள மக்களுக்கு பெட்ரோலிய பொருட்கள் வழங்கமுடியும். இந்த திட்டம் இந்தியா - நேபாளம் இடையே நெருங்கிய இருதரப்பு உறவுக்கான குறியீடு என்று கூறிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, மோதிஹாரி - ஆம்லேக்குஞ் பெட்ரோலிய குழாய் திட்டம் எரிபொருள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்தும், எரிபொருள் கொண்டு செல்வதற்கான செலவின...

அணு ஒப்பந்த உறுதிப்படுகளிலிருந்து பின்வாங்கியது ஈரான்

டாக்டர். ஆசிஃப் ஷுஜா, ஈரானுக்கான செயலுத்தி ஆய்வாளர் தமிழில், ஸ்ரீப்ரியா சம்பத்குமார் 2015 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், உலக வல்லரசு நாடுகளிடம் ஒப்புக்கொள்ளப்பட்ட அணு ஒப்பந்தத்தின் கீழ், தனக்கு இருந்த உறுதிப்பாடுகளிலிருந்து விலகிக்கொள்வதாக ஈரான் அறிவித்துள்ளது. அணு ஒப்பந்தத்தின் உறுதிப்பாடுகளைக் கடைபிடிக்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டதால், அதைத் தான் மட்டும் கடைபிடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என, ஈரான் இதற்கான காரணத்தைத் தெரிவித்துள்ளது. அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா ஒருதலைபட்சமாக விலகியதிலிருந்து, தங்களுக்குள்ளான புரிதலைக் கொண்டு, இந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்ற, ஈரானும் ஐரோப்பிய ஒன்றியமும் கடினமாக முயற்சி செய்தன. இந்த அணு ஒப்பந்தத்தின் கீழ், ஈரானுக்கு உறுதி அளிக்கபட்டிருந்த பொருளாதார உறுதிகள் அனைத்தும் நிறைவேற்றபடுவதை ஐரோப்பிய ஒன்றியம் உறுதி செய்யும் என்றும், இதனால், தனது அணுத் திட்டங்களின் அளவுகளை கட்டுபடுத்துவதற்கான தனது உறுதிப்பாட்டையும் ஈரான் தொடரலாம் என்றும், ஈரான், ஐரோப்பிய ஒன்றியம் இடையில் புரிதல் இருந்தது. ஈரானின் இந்த முடிவிற்குப் பின்னால் இருக்கும் காரணத்தை, ஈரான் அணு நிறுவனத்...

பாகிஸ்தான் மீண்டும் நிராகரிக்கப்பட்டது

செய்தி நிபுணர் கௌசிக் ராய் அவர்கள் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் ஆர். ராஜ்குமார் பாலா காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் மிக நெருக்கடியான நிலைமையைச் சந்தித்துவருகிறது. ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அதிகாரத்தை இந்தியா திரும்பப்பெற முடிவு குறித்து சர்வதேச கவனத்தைப் பெற பாகிஸ்தான் தொடர்ந்து கடுமையாக முயன்றுவருகிறது. இந்த முடிவு ஒரு உள்நாட்டு விஷயம் என்று புதுதில்லி திட்டவட்டமாக தெளிவுபடுத்திவிட்டது. இந்தியா தனது கருத்தை உலக அரங்கில் முன்வைப்பதிலும் வெற்றிபெற்றுவருகிறது. பல உலக நாடுகளும் இந்தியாவின் முடிவை ஏற்றுள்ளன. எனினும் பாகிஸ்தான் இன்னும் திருப்தி அடையவில்லை. தனது நெருங்கிய கூட்டாளிகளிடம் இருந்தும் பாகிஸ்தான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் பாகிஸ்தான் பிரதம மந்திரியும் அந்நாட்டு ராணுவ தளபதியும் சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர்களை வரவேற்றனர். தூதாண்மை உணர்வில் இந்த இரண்டு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் மிக பாகிஸ்தானி தலைவர்கள் கூறியதைக் அமைதியாகக் கேட்டுக்கொண்டனர். அதன் பிறகு பேசிய பாகிஸ்தானி வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி, ச...

வங்கிகள் மேலும் அதிக பண பரிமாற்றம் செய்வதற்காக ரெப்போ வட்டி விகிதத்துடன், வங்கி கடன் வட்டி விகிதங்களை இணைக்கும் மத்திய ரிசர்வ் வங்கி

மூத்த பொருளாதார பத்திரிக்கையாளர் ஜி. ஸ்ரீநிவாசன் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் வங்கிகளுக்கு மத்திய ரிசர்வ் வங்கி வழங்கும் கடன்களுக்கு நிர்ணயிக்கப்படும் வட்டி விகிதத்தை ரெப்போ விகிதம் என்பார்கள். எப்போதெல்லாம் ரிசர்வ் வங்கி இந்த வட்டி விகிதத்தை குறைத்தாலும், வங்கிகள் பயனடைந்தனவே தவிர அந்த பயனை வங்கிகளிடமிருந்து கடன் பெற்றவர்களுக்கு தருவதற்கு வங்கிகளுக்கு விருப்பம் இருந்ததில்லை. இம்முறை ரெப்போ விகிதத்தை நேரடியாக வங்கி பயனாளர்களுக்கும் பயனளிக்கும் வகையில் குறைத்துள்ளதால், வங்கிகளிலிருந்து கடன் பெறும், பெற்றிருந்த சில்லறை வியாபாரிகள், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், தனியார் கடன்கள் போன்றவற்றையும் ரெப்போ விகிதத்துடன் ரிசர்வ் வங்கி இணைக்க முடிவெடுத்துள்ளாதல், வங்கிகளிடமிரருந்து கடன் பெறுபவர்கள் நிம்மதி பெருமூச்சு விடலாம். இவ்வாறு கடன் பெற்றவர்களின் மாதாந்திர தவணை தொகை குறையக்கூடும். ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு கொடுக்கும் கடன்தொகைக்கான வட்டி விகிதத்தை ஓரளவு குறைக்கும்போதும், வங்கிகள் அதன் பயனை தங்களிடம் கடன் பெற்றவர்களுக்கு கொடுக்க விரும்புவதில்லை. அவர்...

இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கை

ஆகாஷவாணியின் செய்தி ஆய்வாளர் திரு பதம் சிங் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராம மூர்த்தி இரண்டு நாள் பயணமாக ரஷ்யா சென்ற பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே அவர்களைச் சந்தித்தார். ஜப்பானுடனான இந்திய உறவுகள் மிகவும் வலுவானவை. மேலும் இரு நாட்டுப் பிரதமர்களும் சிறந்த நண்பர்களும் கூட. இந்தச் சந்திப்பை மிகவும் மகிழ்ச்சிகரமானது என்று வெளியுறவுத் துறை வர்ணித்துள்ளது. டிசம்பரில் நடக்கவிருக்கும் வருடாந்தர உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரவிருக்கும் ஜப்பானியப் பிரதமரின் வருகை இந்தச் சந்திப்பில் சிறப்புக் கவனம் பெற்றது. இந்த உச்சி மாநாட்டிற்கு முன்னர், இரு நாடுகளின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு அமைச்சர்கள் பங்கேற்கும் சந்திப்பு ஒன்றுக்கு இரு தலைவர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். அண்மையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ் நாத் சிங் ஜப்பானுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போது பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பரிமாற்றங்கள் ஆகியவற்றை மேம்படுத்துவது குறித்து ஜப்பான் பிரதமர் கூறியுள்ளார். பியுனஸ் அயர்ஸ் மற்றும் ஒசாகாவில் நடைபெற்ற ஜி 20 மாநாட்டி...