Posts

Showing posts from May, 2019

நரேந்திர மோதி அவர்கள் இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்பு.

(நியூ இன்டியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் மூத்த நிருபர் மணிஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஆ. வெங்கடேசன்.) நரேந்திர மோதி அவர்கள் பெருவாரியான வாக்குகளைப் பெற்று ,தொடர்ந்து இரண்டாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார். பிரதமரின் தலைமையின் கீழ், 58 கேபினட் அமைச்சர்களுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் அவர்களையும் சேர்த்து, ஆளும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளில் இருந்தும் திறமை வாய்ந்த அமைச்சர்கள் பதவியேற்றனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் ஜெய்சங்கர் அவர்களை பிரதமர் மோதி அவர்கள் சேர்த்துள்ளார். அவர் இந்திய வெளியுறவுத் துறையில் ஒரு முக்கியப் பதவியில் இருந்தார். சீன விவகாரங்களில் அவருக்கு உள்ள நிபுணத்துவம் மிகவும் முக்கியம் வாய்ந்தது. பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா அவர்களும் மந்திரி சபையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் இந்த அரசாங்கத்தில் முக்கியப் பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா முழுவதிலும் உள்ள மக்களின் எதி...

ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கோப்பை 2019 துவக்கம்.

(ஆல் இந்தியா ரேடியோ செய்தி ஆய்வாளர், கௌஷிக் ராய் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) ‘ஜெண்டில்மேன்ஸ் கேம்’ என்றழைக்கப்படும் கிரிக்கெட் விளையாட்டில் உலகக் கோப்பையானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் கிரிக்கெட் திருவிழாவாகும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் –சில் நடைபெறும் 12-ஆவது ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைப் போட்டிகள் இன்று துவங்குகின்றன. ஜூலை மாதம் 14 ஆம் தேதி வரை இந்தப் போட்டிகள் நடைபெறும். ஒன்றரை மாத காலம் நடக்கும் இந்தப் போட்டிகளை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் நடத்துகின்றது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ், இந்தப் போட்டிகளை ஐந்தாவது முறையாக நடத்துகின்றன. இதற்கு முன்னர், உலகக் கோப்பை, 1975, 1979, 1983 மற்றும் 1999 ஆகிய ஆண்டுகளில் அங்கு நடைபெற்றுள்ளது. உலகளவில் சில நாடுகளே, அதுவும், பெரும்பாலும், ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியில் இருந்த நாடுகளே கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளன என்ற போதிலும், ‘கேம் ஆஃப் வில்லோஸ்’ என்றழைக்கப்படும் இந்த விளையாட்டு, உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற விளையாட்டாக உள்ளது. பார்வையாளர்கள் மற்றும் ரசிகர்களை வைத்துப் பார்த்தால், இது கால்...

பாகிஸ்தானில் தொடர்கதையாகும் சிறுபான்மையினருக்கு எதிரான துன்புறுத்தல்.

(இட்சாவின் தெற்காசிய மையத்தின் ஆய்வாளர் டாக்டர் ஸைனப் அக்தர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) பாகிஸ்தானின் சிறுபான்மையினருக்கு எதிரான பாரபட்சமான கொள்கையின் விளைவாக, அரசிடமிருந்தும், வலதுசாரி தீவிரவாதிகளிடம் இருந்தும் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு ஆளாவது தொடர்கிறது. பாகிஸ்தானில் உள்ள மொத்த மக்கள் தொகையில் 30 லட்சத்திற்கும் அதிகமாக உள்ள, இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் சீக்கியர்கள், சில சமயம் தங்களது மத நம்பிக்கைகளின்படி நடப்பது மிகவும் ஆபத்தாக விளங்குகிறது. மோசமான தெய்வ நிந்தனை சட்டத்தின் கீழ், இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டு, சிறுபான்மையினர் மீது வழக்கு தொடரப்படுகிறது. சமீபத்திய நிகழ்வாக, சிந்து மாகாணத்தில், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர், மத நூலை சிதைத்ததாகக் காரணம் காட்டி, தெய்வ நிந்தனை சட்டத்தின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சில வாரங்களுக்கு முன்பு பஞ்சாப் மாகாணத்தில், சிறுபான்மை மத சமுதாயத்தைச் சேர்ந்த தம்பதியர், பொருத்தமற்ற உரை அனுப்பியதாகக் குற்றம் சாட்டப்பட்டு, தெய்வநிந்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்...

மோதி அவர்களின் இரண்டாவது ஆட்சியில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகள்.

(ஐ.நா விற்கான இந்தியாவின் முன்னாள் நிரந்தரப் பிரதிநிதி, தூதர் அசோக் குமார் முகர்ஜி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் ஆ. வெங்கடேசன்.) 2014ஆம் வருடம் முதல் பிரதமர் நரேந்திர மோதி அவர்கள், இந்தியாவின் அதீத மாற்றத்திற்காக எடுத்த முயற்சிகளைத் தொடர, சிறந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்தியாவின் 90 கோடி மக்கள் ஜனநாயக முறைப்படி பெருவாரியாக வாக்களித்து, அதன் மூலம், அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படவுள்ள இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை முயற்சிகளுக்கு வித்திட்டுள்ளனர். சப்கா சாத் (அனைவருடனும்), சப் கா விகாஸ் (அனைவரின் முன்னேற்றம்) மற்றும் சப் கா விஷ்வாஸ் (அனைவரின் நம்பிக்கை) ஆகியவற்றை முன்னிறுத்திய ஆட்சியே தனது அரசாங்கத்தின் கொள்கை என்று பிரதமர் அறிவித்துள்ளார். சர்வதேச நாடுகளுடன் ஈடுபாடுகளை அதிகரித்து, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியுடன் கூடிய மாறுபட்ட இந்தியாவை உருவாக்கும் நோக்கில் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகள் அமையும். சர்வதேச இடையூறுகள் அதிகரித்து வரும் நிலையில், முக்கிய சக்திகளாக விளங்கும் சீனா, அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுடனான உறவுகளைக் கட்டமைப்பது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையி...

வல்லரசு நாடாகும் இலக்குடன் இந்தியாவின் வெற்றி நடை

(மூத்த பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) நாட்டிற்கு அனுகூலமான நல்ல முடிவுகளை எடுப்பதில், பிரதமர் நரேந்திர மோதி அவர்களுக்கு நிகர் எவரும் இல்லை என்றே கூற வேண்டும். ‘புதிய உத்வேகத்துடன் கூடிய ஒரு புதிய இந்தியாவை’ உருவாக்க, இரண்டாவது முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனது அரசாங்கம் ஒரு புதிய பயணத்தைத் துவங்கும் என அவர் கூறியதிலிருந்து இது தெளிவாகிறது. நாடாளுமன்றத்தின் மத்திய அரங்கில் அவர் அளித்த உரை, 2022 ஆம் ஆண்டிற்குள் வலுவான இந்தியாவை உருவாக்குவதற்கான அனைவருடைய கனவையும் நிஜமாக்க அவர் வைத்திருக்கும் திட்டங்களுடன் ஒத்திசைந்துள்ளது. இந்தக் கனவு, அனைத்து இந்தியர்களுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில், சுகாதாரம், கல்வி, வீட்டு வசதி மற்றும் பிற அடிப்படை வசதிகளை அளிப்பதோடு நின்றுவிடாமல், உலக அரங்கில் நாட்டை உச்சத்திற்குக் கொண்டு செல்வதையும் இலக்காகக் கொண்டுள்ளது. நாரா என்ற புதிய சொற்றொடரை பிரதமர் அறிமுகப்படுத்தினார். தேசிய லட்சியமும் பிராந்திய ஆர்வமும் கலந்த மனப்போக்கு இந்த நாராவின் அடிப்படையாக இருக்கும். விரிவாகச் சொன்னால், விரைவில், வ...

அதிபர் ஜோக்கோவி, இந்தோனேஷியாவில் மீண்டும் அதிபரானார்.

கிழக்கு மற்றும் தென் கிழக்காசிய செயலுத்தி ஆய்வாளர் முனைவர் ராகுல் மிஸ்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன். ஒரு மாத கால காத்திருப்புக்கு பின், ஜோக்கோவி என்று பிரபலமாக அறியப்படும் ஜோக்கோ விடோடோ இந்தோனேசிய அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவில் ஏப்ரல் 17 ஆம் தேதியன்று தேர்தல்கள் நடந்ததன. அதிபர் மற்றும் துணை அதிபர் பதவிகளுக்கான தேர்தல்கள் உடனே நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கான தேர்தல்கள் அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றன. 154 மில்லியன் வாக்காளர்களையும், நூற்றுகணக்கான தீவுகளையும் உள்ளடக்கிய தீவு நாடான இந்தோனேசியா, அனைத்து நிலைகளுக்கும் ஒரே நாளில் தேர்தல்கள் நடத்துவது என்ற மிக சிக்கலான விஷயத்தை ஏப்ரல் 17 அன்று வெற்றிகரமாக நடத்தி காட்டிய இந்தோனேசியா பொது தேர்தல் ஆணையம் மே 21 ஆம் தேதி முடிவுகளை உறுதி செய்துள்ளது. மூன்று முன்னணி ஜனநாயக அண்டை நாடுகளான ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இந்தோனேசிய நாடுகள் ஜன நாயக முறைப்படி தேர்தல் திருவிழாவை மிக பெருமளவில் வெற்றிகரமாக நடத்தி முடித்து, மூன்று நாடுகளின் மக்களும் தங்களது எண்ணங்களை வாக்குகள...

ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு.

(சீன, யூரேஷிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் சானா ஹாஷ்மி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்த வாரத் துவக்கத்தில், இந்திய வெளியுறவு அமைச்சர் திருமதி சுஷ்மா ஸ்வராஜ் அவர்கள், ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பில் கலந்துகொள்ள, கிர்கிஸ்தானிலுள்ள பிஷ்கேக் நகருக்குப் பயணம் மேற்கொண்டார். தற்போதைய வெளியுறவு அமைச்சர் பதவியில் அவர் மேற்கொள்ளும் கடைசி அயல்நாட்டுப் பயணமாகும் இது. நாடாளுமன்றத் தேர்தலில் முடிவுகள் வெளிவருவதற்கு ஒருநாள் முன்னதாக அவர் இப்பயணம் மேற்கொண்டது, ஷாங்காய் கூட்டுறவு அமைப்பிற்கு இந்தியா எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது. கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற அனைத்து ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் கூட்டங்களிலும் இந்தியத் தலைவர்கள் அர்ப்பணிப்புடன் பங்கு கொண்டது குறிப்பிடத்தக்கது. 2015 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உஃபா நகரில் நடைபெற்ற 15 ஆவது ஷாங்காய் கூட்டுறவு அமைப்பின் உச்சிமாநாட்டிலிருந்து தொடங்கி பிரதமர் திரு நரேந்திரமோதி அவர்கள் பங்கேற்று வருகிறார். கடந்த ஆண்டு சீனாவில் நடைபெற்ற தங்கள் துறை சார்ந்த சந்திப்பில், வெளியுற...

வலுவான மத்திய அரசுக்கு இந்திய மக்களின் தெளிவான தீர்ப்பு.

(அரசியல் விமர்சகர் பேராசிரியர் ஷிவாஜி சர்கார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான என்.டி.ஏ என்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி, 90 கோடியையும் விட அதிகமான இந்திய வாக்காளர்களால் பெரும்பான்மை மிக்க கூட்டணியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முப்பத்து ஐந்து ஆண்டுகளில் முதன்முறையாக, ஒரு தனிக்கட்சி, இந்திய அரசின் மக்களவையில் 303 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் நாட்டு முன்னேற்றம் என்ற இரண்டு பெரும் காரணிகளின் அடிப்படையில், தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக, பிரதமர் நரேந்திர மோதி அவர்கள் வெற்றியடைந்து பிரதமர் பொறுப்பை ஏற்கவுள்ளார். 17-ஆவது மக்களவைக்கான ஏழு கட்டங்களைக் கொண்ட தேர்தல்களில், பா.ஜ.கா-விற்கு இந்திய வாக்காளர்களின் முழு அளவிலான ஆதரவு கிடைத்துள்ளது. மிகக் குறைந்த செல்வாக்கே இருந்த மேற்கு வங்கம், தெலுங்கானா போன்ற மாநிலங்களிலும், பா.ஜ.கா இம்முறை திடமாகத் தனது கால்தடத்தைப் பதித்துள்ளது. இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளால், தாங்கள் நினைத்ததை வெற்றிகரமாக செய்து முடிக்க முடியவில்லை. மேலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் ...

விண்ணில் பாயத் தயாராகும் இந்தியாவின் சந்திரயான்-2

(பத்திரிக்கையாளர் யோகேஷ் சூது அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) நிலவுக்கான இந்தியாவின் இரண்டாவது பணித்திட்டத்தில், சந்திரயான்-2 விண்கலத்தை இவ்வாண்டு ஜுலை மாதம் விண்ணில் செலுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதிலும் உள்ள பல ஆய்வுக் கூடங்களால் உருவாக்கப்பட்ட 13 பேலோடுகள் இதில் இருக்கும். இவற்றின் மூலம் பல அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, தகவல்கள் சேகரிக்கப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ தெரிவித்துள்ளது. 3.8 டன் எடை கொண்ட இந்த விண் ஊர்தியில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை, ஆர்பிட்டர், விக்ரம் என்ற லேண்டர் மற்றும் பிரக்யான் என்ற ரோவர் ஆகியவையாகும். நாசாவின் பேசிவ் சோதனைப் பிரிவு, பூமி மற்றும் அதன் ஒரே இயற்கைக் கோளான நிலவிற்கு இடையில் உள்ள தொலைவை அளப்பதை இலக்காகக் கொண்டுள்ளது. விண்கலத்தின் அனைத்துப் பகுதிகளும் செலுத்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ஜூலை 9-16 ஆம் தேதிக்குள் சந்திரயான்-2 விண்கலம் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 6 ஆம் தேதி இது நிலவில் இறங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக விண்வெளி மையம் கூறியுள்ளது. நிலவுக்கான பரப்பிலிருந்த...
(மேற்காசியாவிற்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர். மொஹம்மத் முதசிர் நாசர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையில் கடந்த சில நாட்களாக நடந்துகொண்டிருக்கும் வாக்குவாதம், பாரசீக வளைகுடா பகுதியில் இறுக்கத்தை அதிகபடுத்தியுள்ளன. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பிரச்சனை, நீண்ட காலமாக சிக்கல் நிறைந்ததாக விளங்குகிறது. 2018 ஆம் ஆண்டு மே மாதம் ஏற்படுத்தப்பட்ட ஜெ.சி.பி.ஓ.ஏ எனப்படும் விரிவான கூட்டு நடவடிக்கைத் திட்டம் என்கிற ஈரான் அணு ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா தன்னிச்சையாக விலகிக்கொண்டதை அடுத்து, சமீபத்திய இறுக்கங்கள் அதிகரித்தன. அணு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ள போதிலும், அணு ஆயுதங்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் உபயோகித்து, பிராந்திய ஸ்திரத்தன்மையைக் கெடுப்பதாக, அப்போது அதிபர் டிரம்ப் ஈரானை குற்றம் சாட்டினார். அதன் பிறகு, டிரன்ப் நிர்வாகம், அணு ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்த ஈரானுக்கு அதிகப்படியான இறுக்கம் கொடுக்கம் நோக்கத்தில், ஈரான் மீது ஒருதலைப்பட்சமான பொருளா...

நாட்டின் 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் வாக்கெடுப்பு முடிவு.

(நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்த்ரிக்கையின் மூத்த சிறப்புப் பத்திரிக்கையாளர் மனீஷ் ஆனந்த் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) இந்திய மக்களின் பெருவாரியான வாக்களிப்புடன், நாடாளுமன்றத் தேர்தலின் ஏழாவது மற்றும் இறுதிக்கட்ட வாக்களிப்பு முடிவுக்கு வந்துள்ளது. 90 கோடி வாக்காளர்களைக் கொண்டிருந்த இத் தேர்தலில், 66 சதவிகித வாக்களிப்பு நடைபெற்றுள்ளது. துடிப்பான, மக்களின் பங்கேற்புடனான, வலுவான ஜனநாயகப் பண்புகளை இந்தியா மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது. மக்கள் அதிக ஆர்வத்துடன் வாக்களிப்பில் பங்கேற்றனர். தேர்தல் ஆணையம், முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்துப் பிரிவினருக்கும் பயனளிக்கும் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. மூன்றடி உயரமான வினிதா ஜெயின், தான் வாக்களித்ததைப் பெருமையுடன் வெளிப்படுத்தியது, பாட்னாவில் உடலளவில் பிரியாத இரட்டையர்களான சபா மற்றும் ஃபரா, இருவேறு தனிநபர்களாக வாக்களித்தது ஆகியவை இத்தேர்தலின் சிறப்பு அம்சங்களாக விளங்கின. வெளிநாடு வாழ் இந்தியர்கள், பெருமளவில் ஆர்வத்துடன் இந்தியாவுக்கு வந்து வாக்களித்துச் சென்றனர். தினக்கூலித் தொழிலாளிகள் உள்பட, பல...

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கான இறுதி அழைப்பு – அடுத்து என்ன?

ஐரோப்பிய ஒன்றிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் முனைவர் சங்கமித்ரா சர்மா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் தெரெசா மேவின் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகும் நடவடிக்கை குறித்த  பிரெக்சிட் ஒப்பந்த வரைவு,  ஒருமித்த கருத்தை எட்ட முடியாமல் பிரிட்டன் நாடாளுமன்றத்தில் மூன்று முறை நிராகரிக்கப்பட்ட நிலையில்,  இந்த ஒப்பந்தம் குறித்த தனது கடைசி மற்றும் இறுதி சவாலை அவர் எதிர்கொள்ளவிருக்கிறார்.  இம்முறையும் நிராகரிப்பே கிட்டுமானால்,  அது விலகல் ஒப்பந்தம் மற்றும் தற்போதைய அரசு இரண்டுக்குமே பெரும் பிரச்சனைகள், அழிவுகள்  தரும் முடிவுகளை  நோக்கி  இட்டு செல்லும் என்று ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த விலகல் துறையான பிரெக்சிட் செயலர் ஸ்டீபன் பார்க்லே கூறியுள்ளார்.    இம்முறை தோல்வியை சந்தித்தால், ஒப்பந்தம் உயிரிழந்து விடும் என்று அவர் கூறியுள்ளார்.  தற்போது மிகவும் பலவீனமான நிலையில் உள்ள தெரெசா மே, நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெறுவதற்காக மீண்டும் மக்கள் பிரதிநிதிகளின் பொது அவையில் ஒப்பந்த வரைவை  வைக்க உள்ளார்.  இந்த ஆறு...

பாம்பியோ – லாவரோவ் பேச்சுவார்த்தை – ஒரு புதிய சமாதான முயற்சி

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் அமெரிக்க கல்வி மையத்தின் தலைவர் முனைவர் சிந்தாமணி மஹாபாத்ரா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி குருமூர்த்தி அமெரிக்காவின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு மைக் பாம்பியோ முதல் முறையாக ரஷ்யப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் திரு செர்கெய் லாவரோவ் அவர்களுடனும் அதிபர் விளாடிமிர் புதின் அவர்களுடனும் பேச்சு வார்த்தை நடத்தினார். ரஷ்யாவுடனான புதிய சமாதான நிலைப்பாட்டை உருவாக்க அமெரிக்க அதிபரின் புதிய செயலுத்தியாகவே இது கருதப்படுகிறது. ரஷ்யா – அமெரிக்கா இடையே அண்மைக் காலங்களில் உருவாகியுள்ள புதிய, சிறிய பனிப்போர் உலக நாடுகளால் கவனிக்கப்பட்டு வருகிறது. முன்னாள் சோவியத் யூனியனின் மிகப் பெரிய பகுதியாக இருந்தாலும், ரஷ்யா அதன் ஒரு பகுதியே என்ற நிலையில், இரு நாடுகளுக்கிடையிலான இந்த மோதலை ஒரு பனிப்போர் என்று கருத அமெரிக்கா விரும்பவில்லை. அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் பனிப்போர் நிலவிய காலத்தில் கூட, அணு சக்தியில் இரு நாடுகளும் சமமான  நிலையில் இருந்ததை ஒப்புக்கொண்ட அமெரிக்காவின் அடுத்தடுத்த அரசுகள் தனக்குச் சமமான நிலையில் ரஷ...

பயங்கரவாதத் தாக்குதல்களுக்கிடையில், பாகிஸ்தானுக்குப் புத்துயிர் அளிக்கும் நிதியுதவி.

(அரசியல் விமர்சகர் அஷோக் ஹாண்டு அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் - ஸ்ரீபிரியா சம்பத்குமார்.) பல மாதங்களாக நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஐ.எம்.எஃப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம், பாகிஸ்தானுக்கு மீண்டும் ஒருமுறை நிதி உதவி பெறும் வாய்ப்பை அளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் பொருளாதார விவகாரங்களுக்கான ஆலோசகர் டாக்டர். ஹஃபீஸ் ஷேக், பாகிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கு வருகை தந்த ஐ.எம்.எஃப் குழுவுக்கும் இடையில் நடந்த இறுதிக்கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, இந்த உதவிக்கான அனுமதி வழங்கப்பட்டதாகக் கூறினார். பாகிஸ்தான் தன்னுடைய நாட்டின் நிதி நெருக்கடியை சரி செய்துகொள்ள, அடுத்த 3 ஆண்டுகளில், ஐ.எம்.எஃப். அந்நாட்டிற்கு 600 கோடி டாலர் நிதி உதவி அளிக்கும். கடனில் மூழ்கியிருக்கும் பாகிஸ்தானுக்கு கடன்களைத் திருப்பிச் செலுத்தி நாட்டின் பொருளாதாரத்தை சீர் செய்ய, சுமார் 1800 கோடி டாலர் தேவைப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எட்டு மாதங்களுக்கு முன்னர், இம்ரான் கான், பாகிஸ்தானின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, ஐ.எம்.எஃப், நிதியுதவி அளிக்க, கடினமான நிபந்தனைகளை இடும் பட்சத்தில், தான் அந...

புதுதில்லியில் அமைச்சர்கள் அளவிலான உலக வர்த்தக அமைப்புக் கூட்டம்.

(மூத்த பத்திரிக்கையாளர் ஜி. ஸ்ரீனிவாசன் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி) புதுதில்லியில் நடந்த அமைச்சர்கள் அளவிலான உலக வர்த்தக அமைப்புக் கூட்டத்தில், பெரும்பாலும் ஏழை மற்றும் வளர்ந்து வரும் நாடுகளுக்காக அளிக்கப்படும் எஸ் & டிடி எனப்படும் சிறப்பு மற்றும் வேறுபட்ட அணுகுமுறைக்கு ஊக்கம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த அணுகுமுறையின் மூலம், உலக வர்த்தக ஒப்பந்தங்களில்  வழங்கப்படும் சலுகைகளையும், தளர்வுகளையும் வளர்ந்து வரும் நாடுகள் பயன்படுத்திக் கொண்டு உலக வர்த்தக அமைப்பின் கீழ் பல்நிலை வர்த்தக முறைக்கு வலுவூட்ட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்தக் கூட்டத்தில் 22 நாடுகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு, வர்த்தக பேரங்களில் நிலவும் தேக்க நிலையை அகற்ற ஆலோசனை மேற்கொண்டனர். பலநாடுகளுடன் வர்த்தகப் போரில் ஈட்டுபட்டுவரும் அமெரிக்கா, தனக்கு எதிராகத் தீர்ப்பு வழங்கப்படுவதைத் தவிர்க்கும் பொருட்டு, உலக வர்த்தக அமைப்பின் சச்சரவு தீர்ப்பாணையத்திற்கான உறுப்பினர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருவதை அனைத்துப் பிரதிநிதிகளும் கண்டித்தனர். இந்...

ஈரான் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம்.

(ஈரான் விவகாரங்களுக்கான செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் அசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ.வெங்கடேசன்.) அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் இந்த வேளையில், ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜவாத் ஸரீஃப் அவர்கள் இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதன் மூலம், ஈரான் வெளியுறவுக் கொள்கையில், இந்தியாவுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம் புலனாகிறது. ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையே உள்ள இருதரப்பு விஷயங்கள் குறித்து, ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தைகள் நடத்தினார். ஆப்கானிஸ்தான் பிரச்சினை உள்பட மற்ற பிராந்திய பிரச்சினைகள் பற்றியும் தங்களது கருத்துக்களைப் பரிமாறிக்கொள்ள, இரு தலைவர்களுக்கும் இந்த சந்திப்பு வாய்ப்பளித்துள்ளது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் மேலான நாகரீக உறவுகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தியாவும், ஈரானும், எரியாற்றல் மற்றும் தொடர்புகள் துறைகளில் உள்ள தங்களது சமீபத்திய கூட்டாளித்துவத்தின் மூலம், பரஸ்பர உறவுகளுக்கு வலிமை சேர்த்துள்ளன. இந்தியாவின் எரியாற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈரான...

வலுவாகும் இந்திய, துருக்கி உறவுகள்.

(ராஜீய விவகாரங்கள் நிருபர் திபங்கர் ராய் சௌத்ரி அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஆ. வெங்கடேசன்.) இந்தியாவும் துருக்கியும் சமீப காலங்களில் உயரதிகாரிகள் அளவிலான இருதரப்பு சந்திப்புகள் மூலம் தங்களது கூட்டாளித்துவத்தில் உறுதியான முன்னேற்றத்தை கண்டுள்ளன. இந்தியாவுடனான வளர்ந்து  வரும் உறவுகளையும், பாகிஸ்தானுடனான கலாச்சார உறவுகளையும் ஒன்று சேர்த்து எடுத்துச் செல்லும் நோக்கத்தில் துருக்கி உள்ளது. பொருளாதாரப் பற்றாக்குறைகளை ஈடு செய்வதற்கு மட்டுமல்லாமல், தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவும் துருக்கி தனது நாட்டு  அதிபருக்கான ஆலோசகர் டாக்டர் இப்ராஹிம் கலின் அவர்களை புதுடெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளது. நீண்ட காலமாக பாதிப்பை ஏற்படுத்தி வரும் எல்லை தாண்டிய பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொள்ள, துருக்கி நாட்டின் கூட்டாளித்துவத்திற்கு இந்தியா முயல்கிறது. இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவர்களை இப்ராஹிம் கலின் அவர்கள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியபோது, சமீபத்தில் இலங்கையில் ஏற்பட்ட பயங்கரவாதத் தாக்குதலும் ஒரு அங்கமாக இருந்தது. தெற்காசியா மற்றும் மேற்காசி...

ஏறுமுகத்தில் இந்தியா – வியட்னாம் உறவுகள்.

(நாடாளுமன்ற ஆய்வாளர் ராஜாராம் பாண்டா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – ஸ்ரீப்ரியா சம்பத்குமார்.) இந்திய குடியரசுத் துணைத் தலைவர் வெங்கைய்யா நாயுடு அவர்கள், வியட்னாமிற்கு நான்கு நாட்களுக்கான அரசியல் பயணத்தை மேற்கொண்டார். வியட்னாமுடனான விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்தை மேம்படுத்துவது இந்தப் பயணத்தின் முக்கிய இலக்காகும். இந்தியா-வியட்னாம் உறவு காலத்தின் சோதனைகளைக் கடந்து வந்த உறவு என்பது அனைவரும் அறிந்த விஷயமாகும். வியட்னாமின் உயர் அரசியல் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியதோடு, ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்குள்ள இந்திய வம்சாவளியினருக்கிடையில் பேசியபோது, திரு. நாயுடு, இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள உறவை வியந்து பாராட்டினார். வியட்னாம் நாட்டின் துணை ஜனாதிபதி திரு. டேங்க் தி காக் தின், வியட்னாம் பிரதமர் திரு. குயென் க்ஸுவான் ஃபுக் மற்றும் தேசிய அமைச்சரவையின் பெண் தலைவரான திருமதி. குயென் தின் கிம் கான் ஆகியோருடன் திரு. நாயுடு சந்திப்புகளை மேற்கொண்டார். வியட்னாமின் ஹா நாம் மாகாணத்தில், டாம் சுக் பகோடாவில் நடந்த ‘வெசாக்’ கொண்டாட்டங்களின் 16-வது ஐக்கிய நாடுகள் தினத்தில், ...

அமெரிக்கா – ஈரான் இரு தரப்பு உறவுகள்

ஈரான் குறித்த செயலுத்தி விவகாரங்கள் ஆய்வாளர் டாக்டர் ஆசிஃப் ஷுஜா அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் பி ராம மூர்த்தி ஒருங்கிணைந்த செயல் திட்டக் குழுவின் உறுதிமொழிகளை ஈரான் அரசு படிப்படியாகக் குறைத்துக் கொள்ளும் என ஈரான் அதிபர் ஹசன் ரௌஹானி அறிவித்துள்ளார். ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து வெளியேறிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், மத்திய கிழக்குப் பகுதிகளில் தனது படை பலத்தை அதிகரித்துள்ள நிலையில், ஈரான் அரசு இந்த முடிவெடுத்துள்ளது. ஒருங்கிணைந்த செயல் திட்டக் குழுவில் இருந்து ஈரான் அரசு வெளியேறிய பின்னர், அமெரிக்க அரசு பல துணிச்சலான முடிவுகளை எடுத்து வருகின்றது. ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு நிறைவேற்றத் துவங்கியுள்ள நிலைய்ல், செயல் திட்டத்தை நிறைவேற்றுவது கேள்விக்குறியே.  ஈரானின் புரட்சிப்படையைச் சேர்ந்தவர்களை தீவிரவாதிகள் என்றே அமெரிக்கா குறிப்பிட்டு வருகிறது. ஈரானிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா, சீனா, தென் கொரியா போன்ற நாடுகளுக்குப் பொருளாதாரத் தடை விலக்கு அளிக்கவும் டிரம்ப் அரசு மறுத்துவிட்டது. முந்தைய அதிபரான ஒபாமாவின் செயல்பாட்டுக்கு இது முரணானதும் கூட. அ...