Posts

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

சி.ஐ.எஸ்ஸின் மூலோபாய ஆய்வாளர் டாக்டர் அதர் ஜாஃபர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன் இந்தியா-உஸ்பெகிஸ்தான் நாடுகளின் முதல் தேசிய ஒருங்கிணைப்புக் குழுவின் முதல் கூட்டம் இந்த வாரம் நடந்தேறியது.  பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும் இருதரப்பு உறவை மேலும் மேம்படுத்துவதற்குமான முயற்சிகளின் ஒரு கட்டமாக, இரு நாடுகளுக்கும் இடையில் ஒப்புக் கொள்ளப்பட்ட கூட்டுத் திட்டங்களை செயல்படுத்துவதை கண்காணிப்பதே இந்தக் குழுக்களின் நோக்கம். இந்திய தரப்பில் வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.முரளீதரன் மற்றும் உஸ்பெகிஸ்தான் தரப்பில் துணைப் பிரதமர் சர்தோர் உமுர்சகோவ் ஆகியோர் இந்த கூட்டத்திற்கு தலைமை தாங்கினர். சர்வதேச அளவில் தற்போதைய கொரோனா பாதிப்பு மற்றும் பயண கட்டுப்பாடுகளைக் கருத்தில் கொண்டு ஆன்லைன் வழியாக இந்தக் கூட்டம் நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிக்கையின்படி, வர்த்தக மற்றும் பொருளாதாரத் துறைகளில் இருதரப்பு நடவடிக்கைகள் ஆய்வு செய்யப்பட்டன. இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், வர்த்தக முன்னுரிமை ஒப்பந்தம், விவசாய விளைபொருட்களுக்கான பரஸ்பர சந்தை ...

சூடு பிடிக்க துவங்கியிருக்கும் 2020 அமெரிக்க அதிபர் தேர்தல்

ஜவஹர்லால் நேரு பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் ரெக்டர் பேராசிரியர் சிந்தாமணி மகாபாத்ரா ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன் கொரொனா பெருந்தொற்றானது உலகெங்கிலும் ஏறத்தாழ 200 நாடுகளுக்கும் மேலாக அங்கு வசிக்கும் பல கோடி மக்களின் வாழ்க்கை, சமூக உறவுகள் மிக முக்கியமாக அவர்களின் பொருளாதார நிலையை மோசமாக பாதித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல், அவ்வப்போது தேர்தல்கள் என்பதை ஆட்சிமுறையின் முக்கிய பகுதியாக கொண்ட ஜன நாயக நாடுகளின் அரசியலையும், அரசியல் செயல்பாடுகளையும் இந்த பெருந்தொற்றானது பாதித்திருப்பது குறிப்பிடதக்கது. உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்ததும், நெகிழ் திறன் உடையதும், பெரும் பணக்கார ஜன நாயக நாடாக அமெரிக்கா திகழ்கிறது என்பது இங்கு அடிக்கோடிட்டு காட்டவேண்டிய ஒன்றாகும். இத்தகைய சக்திவாய்ந்த ஜனனாயகமாக திகழும் அமெரிக்காவும் இந்த பெருந்தொற்றால் அரசியல் செயல்முறைகளில் இடையூறு உட்பட பலவகைகளில் பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நான்காண்டுகளுக்கும் அமெரிக்கர்கள் புதிய அதிபர் ஒருவரை தேர்ந்தெடுக்கின்றனர். சில சமயங்களில், அதிபராக இருப்பவரையே மற்றுமொரு நான்காண்டு காலத்திற்கு மீண்டும் அதி...

பஜ்வாவின் சவுதி பயணம் - பிளவுகளை இணைக்க, வேறுபாடுகளை களைய முயற்சி

பாகிஸ்தான் பகுப்பாய்வாளர் முனைவர் ஸைனப் அக்தர் ஆங்கிலத்தில் எழுதியதன் தமிழாக்கம் சத்யா அசோகன்  கடந்த ஆண்டு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 370 வது பிரிவு ரத்து செய்யப்பட்டதன் காரண்மாக பாகிஸ்தானின் உள் நாட்டு மற்றும் வெளி நாட்டு கொள்கைகள் பெரும் பின்னடைவுக்கு உள்ளாகியுள்ளன. காஷ்மீரை தனது வெளி நாட்டு கொள்கையின் மைய பொருண்மையாக பாகிஸ்தான் கொண்டுள்ளதால், அங்கிருக்கும் தெஹ்ரீக்-இன்சாஃப் அரசானது கஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அரங்கில் பெரும் ப்ரச்னையாக உருமாற்றி காட்டுவதற்காக பகீரத ப்ரயத்தனம் அனைத்தையும் செய்து பார்த்தது. முக்கியமாக இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பான ஓஐசி கஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க உயர்மட்ட கூட்டம் ஒன்றிற்கு ஏற்பாடு செய்யும் என்று பாகிஸ்தான் பெரிதும் நம்பிக்கை வைத்திருந்தது. இஸ்லாமிய நாடுகளில் மிக முக்கியமான நாடாகவும், அவற்றின் மையமாக சவுதி அரேபியா விளங்கிவருவதோடு, ஓஐசி அமைப்பில் மிக அதிக செல்வாக்குடைய நாடாகவும் இருந்து வருகிறது. சவுதி அரேபியாவை தனது பக்கமாகவும், தனக்கு பட்சமாகவும் வைத்திருக்க பாகிஸ்தான் எப்போதுமே முயன்று வந்திருக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் வெளி...

ஏறுமுகத்தில் இந்தியா பங்களாதேஷ் உறவுகள்

இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு, பிரதமர் மோடியின் செய்தியை எடுத்துச் சென்றார் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா. பிரதமர் ஷேக் ஹசீனா அவரை தனிப்பட்ட முறையில் வரவேற்றார். COVID19 தொற்றுநோய் பரவிய பல மாதங்களுக்குப் பிறகு அவரை சந்திக்க வந்த முதல் வெளிநாட்டு பிரமுகர் ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா ஆவார். கடந்த சில மாதங்களாக இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பரிமாற்றங்கள் அனைத்தும் மெய்நிகர் கூட்டங்கள் மூலமே நடத்தப்பட்டன. கொரொனா பெருந்தொற்றால் தெற்காசிய பொருளாதாரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன என்பதன் அடிப்படையில் இந்திய வெளியுறவுச் செயலாளரின் இந்தப் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே.அப்துல் மோமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஷாஹ்ரியர் ஆலம் மற்றும் வெளியுறவுத்துறைச் செயலாளர் மசூத் பின் மோமன் ஆகியோரையும் இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளர் சந்தித்தார். இந்திய வெளியுறவுத்துறைச் செயலாளருக்கும் வங்கதேசப் பிரதமருக்கும் இடையிலான ஒரு மணி நேர சந்திப்பின் போது, ​​இரு நாடுகளும் தற்போ...

வலுவாகும் இந்திய – ஐக்கிய அரபு அமீரக செயலுத்தி உறவுகள்

மேற்காசிய விவகாரங்கள் குறித்த செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் மொஹம்மத் முத்தாசிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் மாலதி தமிழ்ச்செல்வன் இந்தியாவும் ஐக்கிய அரபு அமீரகமும் அமைதி மற்றும் வளமையை நோக்கிய பாதையில் பயணிக்கின்றன. பிரதமர் நரேந்திர மோதி மற்றும் இளவரசர் மொஹமத் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் தலைமையில், இரு நாடுகளும் வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கல்வி மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் கணிசமாக முதலீடு செய்துள்ளன. கூட்டு ஆணையக் கூட்டங்கள் போன்ற இருதரப்பு வழிமுறைகள் மூலம் விரிவான செயலுத்திக் கூட்டாளித்துவத்துக்கான உறவுகளை உயர்த்த இரு நாடுகளும் உழைத்து வந்துள்ளன.  வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான இந்தியா-ஐக்கிய அரபு அமீரக கூட்டுக் கூட்டத்தின் 13 வது அமர்வு மெய் நிகர்க் கூட்டமாகக் கூடியது. இதற்கு இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ். ஜெய்ஷங்கர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தலைமை...

சிசிபி தலைமைகளின் செல்வத்தை மறைப்பதற்காகக் குழப்பத்தை ஏற்படுத்தும் ஹாங் காங்கின் புதிய பாதுகாப்புச் சட்டம்

(பிரசார் பாரதியின் ஆலோசனை ஆசிரியர்(டிஜிட்டல்) சித்தார்த்த ராய் எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்) சீன உயரடுக்கு, குறிப்பாக சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சி(சிசிபி) தலைமையின் உயர்மட்டத்தினர், நீண்ட காலமாக தங்கள் பணத்தையும் சொத்துக்களையும் ஹாங்காங்கில் வைத்திருப்பதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இது அவர்களின் நிதி ஆதாயங்களை பிரதான நிலப்பரப்பிலிருந்து பாதுகாக்கிறது. நியுயார்க் டைம்ஸ் புலானாய்வு சீன மக்களின் பார்வையில் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. 'ஹாங்காங்கின் தலைவிதியைக் கட்டுப்படுத்தும் சீன கம்யூனிஸ்ட் உயரடுக்கினரின் சொகுசு வீடுகள்' என்ற தலைப்பில் நியுயார்க் டைம்ஸ் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், ஹாங்காங்கின் சர்வதேச வணிகத்தின் நிதி நிலப்பரப்பைப் பயன்படுத்தி சிசிபி தலைமைகளின் உறவினர்கள் தங்கள் சொந்த இலாபத்திற்காகப் பெரும்செல்வத்தை குவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சிசிபியின் முதன்மையான நான்கு பேரில் மூவரின் நெருங்கிய உறவினர்கள் ஹாங்காங்கில் சொகுசு ரியல் எஸ்டேட்டில் 51 மில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளைக் கொண்டுள்ளனர். ஹாங்காங்கில் பெரும் சொத்துக்கள் மற்றும் முதலீடுகள...

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

(மனோகர் பாரிக்கர்-ஐ.டி.எஸ்.ஏ தெற்காசிய மையத்தின் முதுநிலை புலமையாளர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆஷோக் பெஹூரியா எழுதிய ஆங்கில உரையின் தமிழாக்கம் த.க.தமிழ் பாரதன்) இந்தியா 370ஆவது சட்டப்பிரிவை இரத்து செய்த முதலாமாண்டு நினைவு நாளில், பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில், 2020 பிப்ரவரி தொடக்கத்தில் காஷ்மீர் குறித்த இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு (ஓ.ஐ.சி) வெளியுறவு அமைச்சர் (சி.எஃப்.எம்) மன்றத்தின் கூட்டத்தை ‘ஏற்பாடு’ செய்வதில் பாகிஸ்தானுக்கு உதவாததற்கு சவுதி அரேபியாவைப் பொறுப்பேற்க அழைத்துள்ளார். காஷ்மீர் குறித்த சி.எஃப்.எம் கூட்டத்தை ஓ.ஐ.சி கூட்டாவிடில், “காஷ்மீர் பிரச்சினையில் அதனோடு நின்று, ஒடுக்கப்பட்ட காஷ்மீர் இஸ்லாமியர்களை ஆதரிக்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தைக் கூட்ட பாகிஸ்தான் கட்டாயப்படுத்தப்படும்” என்று குரேஷி தொலைக்காட்சி நேர்காணல் ஒன்றில் கூறியிருந்தார். "காஷ்மீர் பிரச்சினையில் முக்கியப் பங்கை வகிக்க இன்று மக்கா மற்றும் மதீனாவுக்காக தங்கள் வாழ்க்கையைத் தியாகம் செய்ய எப்போதும் தயாராக இருக்கும் பாகிஸ்தான...