வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்க, பிரதமர் மீண்டும் வலியுறுத்தல்.
(பத்திரிக்கையாளர் ஷங்கர் குமார் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி)
இரண்டாம் முறையாக, பிரதமராகப் பதவியேற்ற நரேந்திர மோதி அவர்கள், ஏழைகளின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவையே தமது அரசு முன்னுரிமை அளிக்கும் இரட்டைத் திட்டங்கள் என்பதை உலகுக்குப் பறைசாற்றினார். நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்குழுவில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரைக்கு நன்றி தெரிவித்துத் தான் அளித்த பதிலில், பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். நாட்டிற்கும் மக்களுக்கும் நலன் பயப்பவை எவை என்பது குறித்து பிரதமர் விரிவாகப் பேசினார்.
மத்திய அரசின் தொலைநோக்கு பற்றி சிறப்பித்துப் பேசிய அவர், பொதுமக்களின் நலன் மற்றும் நவீன கட்டமைப்பு ஆகியவற்றுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளிக்கிறது என்று கூறினார். வளர்ச்சிப் பாதையிலிருந்து சிறிதளவும் வழுவாமலும், வளர்ச்சித் திட்டங்கள் நீர்த்துப் போகாத வகையிலும் தமது அரசு செயல்பட்டு வருவதாகக் கூறிய பிரதமர், நாடு முன்னேற்றப் பாதையில் வீறுநடை போடுவது முக்கியம் என்றும், ஒவ்வொரு குடிமகனுக்கும் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்றும், நாட்டின் கட்டமைப்பு நவீனமானதாக விளங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
Comments
Post a Comment