இக்கட்டான சூழலில் உழலும் ஈராக்.

(மேற்காசிய விவகாரங்கள் செயலுத்தி ஆய்வாளர் டாக்டர் முகமது முடாஸிர் குவாமர் அவர்களின் ஆங்கில உரையின் தமிழாக்கம் – பி.குருமூர்த்தி.)

கடந்த இருவாரங்களாக, ஈராக் இளைஞர்கள், ஊழல், வேலையில்லாத் திண்டாட்டம், உள்நாட்டு விவகாரங்களில் ஈரான் மற்றும் அமெரிக்காவின் தலையீடு ஆகியவற்றை எதிர்த்துப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான போராட்டம், நஜஃப், கர்பாலா, பஸ்ரா, பாக்தாத் உள்ளிட்ட பெருநகரங்களில், ஒத்துழையாமை இயக்கமாக உருமாறியுள்ளது. பாதுகாப்புப் படை மற்றும் ஈரான் புரட்சிப் பாதுகாப்புப் படைக்கு விசுவாசமாக உள்ள பிரபல களப்படை ஆகியோர், போராட்டக்காரர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளால், 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

கடந்த வெள்ளியன்று, பிரதமர் அடெல் அப்துல் மஹிதி அவர்கள் ராஜினாமா செய்தார். ஷியா பிரிவு மதத் தலைவர் அயதொல்லாஅலி அல் சிஸ்தானி அவர்கள், ஈராக் நாடாளுமன்றத்தில் பிரதம்ரின் அரசுக்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்ப்ப் பெறுமாறு வலியுறுத்தியதைத் தொடர்ந்து பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இருப்பினும் சற்றும் குறையாமல் தொடர்ந்து நடைபெற்று வரும் போராட்டங்கள், பாக்தாதிலுள்ள தஹிரீர் சதுக்கத்துக்கு மாறியுள்ளது.

Comments

Popular posts from this blog

ஆக்கப்பூர்வமான முறையில் மேம்பட்டுவரும் இந்தியா-உஸ்பெகிஸ்தான் உறவுகள்

நலிவடையும் அரபு உலகத்துடனான பாகிஸ்தானின் உறவுகள்

பாகிஸ்தானில் உள்நாட்டுக் குழப்பம்.